பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 08, 2021

- அழுகை -


 - அழுகை -


அழுவதற்கே ஆசைப்படுகிறேன்
கண்ணீரில் ஏதோவொன்று
இருந்திடவேச் செய்கிறது
சிலவற்றை நினைக்க
இனித்திடவும் செய்கிறது
ஏதோ ஒன்றை
வெறித்துப்பார்த்து அழட்டுமா
ஏதுமில்லாதததை
நினைத்துக்கொண்டே அழட்டுமா
கண்களில் வழியும்
நீர்மட்டுமா அழுகை
கண்களுக்கேத் தெரியாமல்
வலிப்பதுதானே அழுகை
அழுதுவிட்ட பொழுதில்
பாரம் குறைந்து லேசாகிறேன்
இத்தனைப் பாரத்தை எங்குதான்
பதுக்கியிருந்தேன்
மூச்சு வாங்கிக்கொண்டு அழுகிறேன்
மூச்சு விடுவதற்காகவாவது அழ வேண்டாமா
அழுத கண்ணில் மங்கலாய்த் தெரியும்
உருவங்களின்
உள்ளத்தை எப்படி தெளிவாகக் காண்கிறேன்
சின்ன வயதின் பிடிவாத அழுகை
சிதைத்துப்போன வாழ்விற்கான அழுகை
என அழுவதற்கான
கண்ணீர்த்துளிகளின்
அட்சயப்பாத்திரம் எங்குதான் மறைந்திருக்கிறதோ
எப்போது கலங்கினாலும்
கண்ணீரை வழியவிடுகின்றது
அழுவது ஒன்றும்
அற்பச்செயல் அல்ல
அது ஆன்மாவைச்
சுத்தம் செய்யும் ஆசீர்வாதம்
மனசை லேசாக்கும் மார்க்கம்..

          #தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்