பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 21, 2017

அரு.சு.ஜீவானந்தனும் நானும்

எப்போதோ கேள்விப்பட்ட நாவல். ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம். புத்தகத்தின் முகப்பை விளம்பரமொன்றின் பார்த்த போதே மனதில் பதிந்தது.
யார் சொன்ன நாவல் என்ன உள்ளடக்கம் போன்றவை நிழலாக தெரிந்தாலும் புத்தகம் தேடிக்கண்டடைய முடியவில்லை.
சமீபத்தில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனை பணி நிமித்தமாக சந்திந்தேன். அவர் குறித்து கொஞ்சம் பகிர வேண்டும்.

இயல்பாகவே அவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடவடிக்கையில் ஒரு தோரணை இருக்கும். மிடுக்காக தெரிவார்.
இருவருமே வானொலி (ஆர்.டி.எம்) பணியைச் சார்த்தவர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

அவர் எனக்கு அறிமுகமானதே சுவாரஷ்யமான ஒன்று.
எனது பதின்ம வயதில் கெடா சுங்கை பட்டாணியில் இருந்தேன். அப்பாவும் எழுத்தாளர் என்பதால் பல புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைத்து சிலவற்றை அவ்வபோது கொடுத்து படிக்கச்சொல்வார். இப்போது எழுத்தாளராக நினைப்பவர் தான் எழுதியதையே படிக்க நேரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது வேறு கதை.

அப்படி அப்பா படிக்கச்சொல்லிக் கொடுத்த ஒரு புத்தகம் 'ஜீவானந்தன் கதைகள்'.
முகப்பில் மீசைக்கார எழுத்தாளரின் வரைந்த முக ஓவியம். சில கதைகளைப் படிக்கையில் தமிழக எழுத்தாளர் எனதான் நினைத்திருந்தேன். முழுமையாக புத்தகத்தை படிக்க முடியாதபடி பரிட்சை வந்தது. சில கதைகளிலேயே புத்தகத்தை அப்பாவின் அலமாரியில் வைத்துவிட்டேன்.

மிக சமீபத்தில்தான் அந்த எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் என்றும் அவர் மலேசியர் என்றும் வல்லினம் எழுத்தாளர் கலந்துரையாடலில் தெருந்தது. வானொலி பணியில் உள்ளவரென்பதும் அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன்.
முதலில் அவருடன் பேசுவதில் ஏனோ தயக்கம் இருந்தது, பின்னர் "தயா..." என அவர் குரலில் அழைத்துப்பேசும் மிடுக்கு அவருடன் கொஞ்சம் நெருக்கத்தைக் கொடுத்தது.

சிலரின் முகமோ, குரலோ, குறுஞ்செய்தியோ , பேச்சோ , எனக்கு உள்ளுக்குள் ஒரு உந்துதலைக் கொடுக்கும். அரு.சு.ஜீவானந்தனையும் அந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அவரின் ஆரம்பகால புகைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. இன்றைய இளைஞர்கள் கொடுக்கக்கூட புகைப்பட போஸ்களை அப்போதே கொடுத்திருப்பது எனக்குள் குதூகலத்தைக் கொடுத்தது.

அந்த புகைப்படங்களில் ஒன்று ஷேப்பியரின் வீட்டின் முன்பு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம். வழக்கமாக எழுத்தாளர் வீட்டில் படமெடுப்பவர்கள் அவரது படிக்கும் மேஜை, புத்தக அலமாரி, நாற்காலி போன்றவற்றிக்கு அருகில் நின்று படமெடுப்பார்கள். இவரோ அந்த காலத்திலேயே ஷேஸ்பியரின் கட்டிலின் அருகில் படமெடுத்திருக்கின்றார். இதை குறித்து அவரிடம் கேட்டுவிட்டு இருவரும் வெகுளியாய் சிரித்தோம். எழுத்தாளனை நமக்குள்ளாக சிரிக்க வைத்தால்தான் உண்டு போல என்ற எண்ணம் பகீரென மனதை உலுக்கியது.

அதையடுத்து எங்களின் உரையாடல் எழுத்தாளன் குறித்தும் அவனது குடும்பம் குறித்தும் விரிந்தது.  என் வாசிப்புகளைக் கேட்டுவிட்டு எழுந்துச்சென்றவர் எனக்கு அவரின் பரிசாக 'சிலுவைராஜ் சரித்திரம்' நாவலைக் கொடுத்தார். அவரின் கையொப்பத்தை கேட்டு வாங்கிக்கொண்டேன்.

அன்று தேடிய புத்தகம் இன்று கிடைத்ததில் மகிழ்ச்சி அதோடு அரு.சு.ஜீவானந்தன் கைகளில் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. கூடவே அவர் கலக்கிக் கொடுத்த தேநீரும் தனி ருசியாகவே தெரிந்தது. நல்லவேளையாக எனது பையில் நான் எழுதிய , ' ஒளிபுகா இடங்களின் ஒலி' என்ற பத்திகள் தொகுப்பு நூல் இருந்தது. அவரிடம் கொடுத்தேன். தற்போது மீண்டும் அவர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார் என்பதையும் உடன் பகிர்கின்றேன்.

இருவருக்கும் வயதில் வித்தியாசம் இருந்தாலும் இளமை ததும்ப விடைபெற்றேன் .

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்