டிசம்பர் 20, 2022
டிசம்பர் 03, 2022
தாய்மடியாகும் தாய்மாமன் மடி
- தாய்மடியாகும் தாய்மாமன் மடி -
ஒன்று இன்னொன்றை, அந்த இன்னொன்று இன்னொரு ஒன்றை எப்படியும் நமக்கு நினைவுப்படுத்திவிடுகின்றன. நினைவுகளின் ஆதாரம் எங்கிருந்தாவது நம் மனதை தொட்டுவிடுவதை தவிர்க்க முடிவதில்லை; அதனை முன்கூட்டியே நம்மால் கண்டறியவும் முடிவதில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்தகம் சென்றிருந்தேன். தங்கை மகளுக்கு காதணி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். உடல் நிலை பழையபடி இல்லாததாலும் தலைநகரில் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததாலும் ஒரு நாள் பயணமாக அமைத்துக் கொண்டேன்.
எப்படியும் சொந்த மண்ணுக்கு சென்றால் உடனே திரும்பி வர மனமிருக்காது. ஆனால் இம்முறை என்னை நானே கட்டுப்படித்திக் கொள்ளும்படி ஆனது. அம்மாவும் தங்கையும் கட்டாயம் வர சொல்லியிருந்தார்கள். இல்லாளும் உறவு முறைகளின் சரியாக இருக்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார். தாய்மாமன் உறவு ரொம்ப முக்கியமானது அது அந்த குழந்தைக்கு இன்னொரு தொப்புள்கொடி உறவு என்றார். சொல்லப்போனால் குழந்தைக்கு இன்னொரு தாய் என்றெல்லாம் பேசிப்பேசி என் மனதை புறப்படுவதற்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்கும் இல்லாள் அவர் வசமாக்கிக்கொண்டார்.
என் தங்கை மகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எங்கள் இன்றைய தலைமுறையில் எங்கள் குடும்பத்தில் பிறந்திருக்கும் முதல் பெண் வாரிசு என்பதாலும் அவள் பிறந்த பிறகு என் வாழ்விலும் நான் பல மாற்றங்களைக் கண்டேன் என்பதாலும் இருக்கலாம்.
இன்று அக்குழந்தையை என் மடியில் வைத்து காது குத்தி அழகு பார்த்தோம். அக்குழந்தை கண்களில் கண்ணீரே வராமல் அழுவதையும் நாங்கள் பார்த்தோம்.
எனக்கும் இன்றும் நினைவில் இருக்கிறது.
அப்போதுதான் தலைநகருக்கு வேலைக்கு வந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தங்கை கர்ப்பமாக இருந்தாள். அவளுக்கு அன்று பிரசவம். அவளுக்கு அருகில் கட்டிலில் இருந்த கர்ப்பவதிகள் எல்லாம் ஒவ்வொருவராக பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தங்கைக்கு இன்னும் வலி வரவில்லை என்றும் உடலில் மருந்தை ஏற்றுவதற்கும் வழியில்லை என்பதையும் அம்மா அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மாவிற்கு எப்படி தைரியம் சொல்வது என தெரியவில்லை. உடனே என்னால் அங்கு செல்லவும் முடியாத சூழல். அம்மாவிற்கு ஏதேதோ தைரியம் சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.
அம்மாவின் குரலில் இருந்த நடுக்கம் என் உடலில் இப்போது தொற்றிக்கொண்டது. என் தைரியத்தைக் காணவில்லை. என்னைச் சுற்றிலும் இருள் சூழ்வதாகப்பட்டது.
என்னால் தங்கையின் முகத்தைக்கூட நினைவில் கொண்டுவர முடியவில்லை. திக்குத்தெரியாதவன் ஆனேன். கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.
அப்போது தமிழகத்தில் இருந்தேன். பழனி முருகன் கோவில். அப்போதே ஒரு வேண்டுதலைப் போட்டேன். திக்கற்று நிற்பவருக்கு தெய்வம்தானே எப்போதும் துணை. கண்களை மூடியவாறு கைகளை கூப்பி, “முருகா… தங்கையும் அவளது குழந்தையும் தாயும் சேயும் நலமாக வரவேண்டும்… நான் உனக்கு மொட்டை போட்டுக்கறேன்” என வேண்டிக்கொண்டேன்.
ஆட்கள் அதிகம் இல்லாததால், சீக்கிரத்தில் முடி கணிக்கை முடிந்து அர்ச்சனை செய்து கோவிலை விட்டு வெளியேறினேன் மனதில் இருந்த பயமும் பாரமும் குறைந்தது. அப்போது அம்மா மீண்டும் அழைக்கவும் சரியாக இருந்தது. என் வேண்டுதல் பலித்துவிட்டதை அம்மாவின் மூலம் அறிந்துகொண்டேன்.
என் வேண்டுதலுக்கு அப்பன் முருகனே வந்திருக்க வேண்டும் ஆனால் அவனுக்கு பதிலாக தேவதையைக் கொடுத்தனுப்பியிருக்கிறான். குறும்புக்கார குமரனுக்கு என்னை நன்றாக தெரியும். அதனால்தான் தேவதைக்கு தாய்மாமனாகும் கூடுதல் பொறுப்பைக் கொடுத்துவிட்டான் போல.
அந்த ஆண்டு தைபூசத்தின் போது என் வேண்டுதலை நிறைவேற்றினேன்.
இன்று அந்த தேவதையை மடியில் அமர்த்திய சில நிமிடங்களில், அன்று நடந்தவை மீண்டும் மனக்கண்ணில் நடந்தேரியது.
தன் தாய்மாமா ஓர் எழுத்தாளர் என்பதை அந்தத் தேவதை தெரிந்து கொள்ளும் வயதில் இதனை அவள் வாசிக்க வேண்டும்.
அது அவள் வாழ்வின் மீதான மாபெரும் நம்பிக்கையைக் கொடுக்கும் என நம்புகிறேன்.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
நவம்பர் 21, 2022
ஓட்டு போட்டது ஒரு குத்தமாய்யா ?
நவம்பர் 17, 2022
- யாரின் நிழலாய் நாம் -
நவம்பர் 15, 2022
- கடமை கண்ணியம் சோறுபோடு -
"எல்லாம் உங்களுக்காகதானே..."
"எங்க பிரச்சனை நடந்தாலும் உங்க பத்திரிகைக்காரங்கதான் முதல்ல போய் நிக்கறாங்க....!"
"அதான் எங்களோட கடமை கண்ணியம் கட்டுப்பாடு..."
"சந்தோஷம் சார்.. அப்படியே உங்க பத்திரிகைல வேலை செய்றவங்களுக்கும் மாதம் தவறாம சம்பளத்தை கொடுத்திட்டா... இன்னும் சந்தோஷம் சார்..."
"என்ன சொல்றிங்க நீங்க.... தமிழுக்காக; தமிழர்களுக்காகதானே செய்றாங்க சம்பளமெல்லாம் முக்கியமா என்ன..?"
"சரியா சொன்னிங்க சார்... ஆனா... தமிழுக்காக செய்தாலும்; தமிழர்களுக்காக செய்தாலும்.... அவங்களும் சாப்பிட சோறு வேணுமே.... அதுக்கு காசு வேணுமே.... உங்க சொத்தையா கேட்கறாங்க... அவங்களோட சம்பளத்தைத்தானே கேட்கறாங்க..."
"என்னதான் இருந்தாலும் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகதானே........."
நவம்பர் 13, 2022
என்செய்வோம் மாமழையே
முன்னெப்போதுமான
மழையல்ல நீ
உன்னோடிப்போது
விளையாட முடிவதில்லை
கொஞ்சமே மழையென்று
கொஞ்சினால்
அஞ்சி விலகும்படி
அலையடிக்க வைக்கிறாய்
சாலைக் குழிகளை
மறைக்கிறாய்
சாக்கடையை வீட்டிற்குள்
நிறைக்கிறாய்
எப்போதோ வீசிய குப்பைகளை
வட்டியுடன் வந்திறக்கி
வைக்கிறாய்
ஆறுகள் மீது கோடுகள்
போட்டு
வீடுகள் கட்டினால்
ஏழரையாய் கூரையில்
எங்களை கூட்டம் போட வைக்கிறாய்
இனி உன்னை நம்பி
நனைந்தாடவோ
முழுக்க குளித்து
விளையாடவோ முடியாது
எங்கள் அலட்சியங்களை எப்போது
நீ கணக்கிட ஆரம்பித்தாயோ
எங்கள் குப்பைகளை எப்போது
உனக்கு அஜீரணம் என கண்டாயோ
இனி நாங்கள் வேறெங்கும்
செல்ல முடியாது
எங்களாலான கழிவுகளுக்கு
நாங்களே பொறுப்பேற்க வேண்டும்
என சொல்வதற்கா
இப்படி பாடம் புகட்டுகிறாய்
தூறு
பொழி
நனை
சொல்
நாங்கள் வேறு
என் செய்ய வேண்டும்
மாமழையே
நவம்பர் 10, 2022
வேறென்ன செய்ய முடியும்
யாரோ சொல்லிய உன்
பெயரில்
ஏதோ மெல்லிய ஓர்
உணர்வு
அந்த யாரோ
அழைத்த எவரோ
நிச்சயம் நீயாக இருக்கக்கூடாது
நீ என் முன்னே
வரவே கூடாதென்று
வாசலிலேயே காத்திருப்பவனால்
வேறென்ன செய்ய முடியும்...
நவம்பர் 09, 2022
அப்பா...
நவம்பர் 02, 2022
தகப்பன்சாமி தந்தவேல் அது கந்தவேல்
- உனக்கென்ன வேணும் சொல்லு -
கைக்கு எட்டா தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கொடுக்க வேண்டியவன்
நானல்லவா
எத்துணை தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கடக்க வேண்டியவன்
நானல்லவா
பரிசுகள் என்றால் கேட்பவளுக்கு
மட்டுமல்ல
கொடுப்பவனுக்கும் மகிழ்ச்சிதானே
பெற்றுக்கொள்
நீ
கற்றுக்கொடுக்கும் காதலுக்கு
ஈடாக எதுவேண்டுமென்றாலும்
கொடுக்கலாம்
ஒரு விண்ணப்பம் மட்டுமே
கம்பெனியின் போனஸ் போடும்வரை
கொஞ்சம் காத்திரு
சம்பளத்திற்கு செலவிருக்கிறது....
#தயாஜி
அக்டோபர் 23, 2022
பூட்டப்படாதக் கதவுகள்
அக்டோபர் 22, 2022
சொல்லுதற்சுலபம்
அக்டோபர் 21, 2022
- God No Where vs God Now Here -
அக்டோபர் 09, 2022
- 42 குறுங்கதைகள் -
அக்டோபர் 07, 2022
கண்ணீர்க்குடி நாகங்கள்
இங்கு காரணங்களின்றி கண்ணீர் வருவதில்லை
சிலரின் காரியங்களில்லாமல் நாம் அழுதிடுவதுமில்லை
நம்மை அழவைப்பதில் அப்படியென்ன ஆனந்தத்தைக் கண்டிடப்போகிறார்கள்
சொல்ல முடியாது
அவர்கள் தின்ற சோறு செரிக்க
யாரும் அழத்தான் வேண்டும் போல
கண்களில் என்ன அட்ச்சயப்பாதிரத்தையா வைத்திருக்கிறோம்
அழ அழ கண்ணீர் வர வர
வறட்சியின்றி வருகை தருகிறது த(க)ண்ணீர்
ஒருத்தனுக்கு அழது சாவதா
இல்லை
ஒவ்வொருவருக்குமாகச் சிரித்து வாழ்வதா என்ற
சுயவிசாரனையே நம் சுயத்தின் விசாரணை
கண்ணீர்ப்பட்ட ஈர
கைக்குட்டையைப்
புன்னகையென்னும் குளிர்நெருப்பில் உலர வைப்போம்
கண்ணீரை விட பலம் கொண்ட ஆயுதம்
புன்னகை என
உணர வைப்போம்
கண்ணீர்க்குடி நாகங்களை இன்றுமுதல்
பசியில் வைப்போம்....
#தயாஜி
செப்டம்பர் 29, 2022
- நட்ட கல்லும் ஊற்றும் பாலும் –
“கல்லுக்கு
ஊத்தற பாலை… பசிக்கு அழும் குழந்தைக்குக் கொடுக்கலாமே..?” ரொம்பவும் பழைய பழகிப்போன
கேள்வியை இங்கு விடாது கேட்டுக்கொண்டே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கமாகத்
தைப்பூச தினத்தன்றும் அல்லது இதர விழாக்காலங்களில் மட்டுமே இந்தக் கேள்வி பெருமளவு
படையெடுக்கும். மற்ற நாட்களில் அதன் வீரியம் குறைவாகவோ அல்லது பெரிதாக அலட்டிக்கொள்ளாதவாரோ
இருக்கும்.
இந்த
நாட்களில் மட்டும் ஏன் வறுமையில் சிக்கிய மனிதர்கள் மீது இன்னொரு மனிதனுக்கு அத்துணைப்
பெரிய கருணை! மற்ற நாட்களில் அம்மனிதன் வயிறார சாப்பிட்டுக்கொண்டா இருக்கிறான்.
பசி
கொண்டவனுக்குப் புசி கொள்ள ஏதும் கொடுக்க நினைப்பதே ஆதார நினைப்பு/தேவை என்றால், நாள்
கிழமை பார்த்து பசிக்கு பால் கொடுக்க யாரும் சொல்ல மாட்டார்கள். இங்குச் சிக்கல் பசியும்
பசிக்கின்ற மனிதனும் அல்ல. நம்பிக்கை;கொள்கை.
“கல்லுக்கு
ஊத்தற பாலை…!” என்று தொடங்கும் அதே வார்த்தையின் சாயலில், “பத்து பேருக்கு மாலையும்
பொன்னாடையும் வாங்கிப் போடற காசையும் ஒரு குடும்பத்துக்குச் சாப்பிட கொடுக்கலாமே?”,
“இவ்வளவு செலவு செய்து மேடை நிகழ்ச்சி செய்றதுக்குப் பதிலா கஷ்டப்படுற பிள்ளைங்களுக்குப்
புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாமே?” என யாரும் கேட்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படிக்
கேட்கத்தான் வேண்டும் போல. ஏனெனில் இங்கு எல்லோருக்கும் இன்னொரு மனிதன் இடர்பாடுகளில்
இருந்து வெளிவர வேண்டும் என்றுதானே எண்ணுகிறோம்.
ஆனால்
அதனை ஏன் நேரடியாகச் செய்யாமல் இன்னொருவன் செய்வதில் இருந்து அதற்குப் பதிலாக இதனைச்
செய்யவேண்டும் என அவனுக்கு அறிவுரைகளைச் சொல்லிகொண்டிருக்கிறோம். செய்கின்றவன் பேச
மாட்டான் ஏனெனில் அவனுக்கு அதற்கான நேரம் இருக்காது; என என் பள்ளி ஆசிரியர் ஒரு முறை
சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன்.
“நட்ட கல்லைத் தெய்வமென்று
காலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண்
மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ?’’
(சிவ
வாக்கியர் பாடல்-5)
கல்லில்
என்ன இருக்கிறது எனக் கேட்ட சிவ வாக்கியரை விடவா ஒருவர் கேள்வி எழுப்பிட முடியும்.
ஆனால் இதனை எப்போதும் பேச்சிற்கிடையில் கொண்டுவர மாட்டார்கள். கொண்டு வந்தால்; ‘நட்ட
கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?’ என்ற கேள்விக்குப் பதில் தரவேண்டிவரும். கல்லும்
இல்லை கடவுளும் (நாதனும்) இல்லை என்ற கொள்கை உள்ளவர்களுக்குச் சிவ வாக்கியர் எப்படி
உதவுவார்.
உண்மையில்
கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாலேயே சிவ வாக்கியரின் கேள்வியை ஆழந்து யோசித்துப்
பதில் காண முடியவில்லையே. இதனைப் புரிந்து கொண்டிருந்தால் கோவில்களில் நடக்கும் உள்ளரசியல்
இல்லாமலேயே இருந்திருக்கும். வீட்டுக்கு ஒரு கோவில் அதற்கொரு தலைவர் என்கிற குழப்பங்கள்
இருந்திருக்காது. மரங்களுக்கு மத்தியிலும், தகரக் கொட்டகைக்குள், அடுத்தவர் நிலத்தில்
எனத் தோன்றும் கடவுள்கள் யாரும் உள்ளிருக்கும் நாதனாய் உருமாற முடியவில்லையே.
ஒரு
முறை இயல் பதிப்பக நிகழ்ச்சியில் மீதமான உணவு பொட்டலங்களை யாருக்காவது கொடுக்கலாம்
எனப் புக்கிட் பிந்தாங் வட்டாரத்திற்கு வண்டியை விட்டோம். வெளியில் இருந்து பார்க்க
பணக்காரர்கள் அதிகம் உலாவும் இடமாகத் தெரியும். ஆனால் அன்று நான் பார்த்தது இன்று கூட
நினைவில் இருக்கிறது. மலாய்க்காரர், சீனர், இந்தியர், வெளிநாட்டவர் என எந்தப் பாகுபாடும்
இன்றியும் கடையோரங்களிலும் சாலையோரங்களிலும் அட்டைப்பெட்டியைப் போட்டு அதில் படுத்திருக்கிறார்கள்.
சிலருக்கு அதுகூட இல்லை. வெறும் சிமெண்டு தரையில் நாளிதழ்களை விரித்துப் படுத்திருக்கிறார்கள்.
நாங்கள்
எங்கள் வண்டியை நிறுத்தி உணவு பொட்டலங்களை வெளியில் எடுக்கவும், பசியில் ஒவ்வொருவரும்
ஓடி வந்ததைப் பார்க்கையில் மனம் உடைந்துவிட்டது. உணவு பொட்டலங்கள் முடிந்து வண்டியில்
ஏறும் சமயத்தில் ஒரு பாட்டி தாமதமாக வந்து சாப்பிட ஏதும் இருக்கா எனக் கேட்டார். அந்தக்
கண்கள் பசியில் பெரிய எதிர்ப்பார்ர்ப்புடன் இருந்தது. சட்டெனப் பாக்கெட்டில் இருந்த
பத்துவெள்ளியை எடுத்து கொடுத்துவிட்டு அவர் முகத்தை மேற்கொண்டு பார்க்க இயலாமல் வண்டியில்
ஏறிவிட்டேன். ஏதோ ஒரு மன உளைச்சல் கொஞ்ச நேரம் என்னை அமைதியாக வைத்திருந்தது.
சில
ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் இணைந்து பள்ளிகளுக்கான புத்தக விற்பனையைச் செய்தேன்.
அப்போதுதான் ஆரம்பித்தோம் என்பதால் எதிர்கால வருமானத்தைக் கணக்கில் கொண்டு எனக்கான
சம்பளத்தைக் குறைவாகவே பெற்றுக்கொண்டேன். அப்போதும் கடன்களைக் கட்டுவதற்கும் குடும்பச்
செலவுக்குமே அது கைகடிக்கும்படி இருக்கும். ஒரு ரொட்டி துண்டையும் ஒரு பாட்டிலில் தண்ணீரையும்
பிடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்புவேன். அந்த ரொட்டியை இரண்டு வேலையாகப் பிரித்துக்
காலை உணவாகவும் நண்பகல் உணவாகவும் சாப்பிட்டுக்கொள்வேன்.
அப்போதுதான்
நண்பர் மூலமாகச் சாய் பாபா செண்டர் குறித்துத் தெரிய வந்தது. தினமும் அங்கு உணவு இருக்கும்.
யார் வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம் என்றார். அதுவரையில் எனக்கு அது தோன்றவில்லை.
அவ்வப்போது சாய் பாபா செண்டருக்கு சென்றாலும் அங்குள்ள உணவை கவனிக்கவில்லை. அப்போது
அது எனக்கு தேவையாகவும் இல்லை.
பின்னர்
தொடர்ந்து, என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சாய் பாபா செண்டரில் சாப்பிட ஆரம்பித்தேன்.
வேலை முடிந்ததும் நேராக அங்குச் சென்று பாபாவிற்கு ஒரு வணக்கத்தைக் போட்டுவிட்டு வயிறார
சாப்பிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்துவிட்டுதான் திரும்புவேன்.
யாரோ
ஒருவர் கொடுக்கும் அரிசியிலும் காய்கறிகளிலும் அவருக்கு நேரடியாகத் தொடர்பில்லாத எனக்குத்
தினமும் உணவு கிடைத்தது. இப்போது கூட நான் அங்குச் சென்று சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.
ஒவ்வொரு
மாதமும் என் கையிருப்புக்கு தகுந்த மாதிரி சில காய்கறிகளையோ அரிசி பைகளையோ வாங்கிகொண்டு
சாய் பாபா செண்டரில் கொடுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இப்போது ‘புத்தகச்சிறகுகள்
புத்தகக்கடை’ என்னும் இணையப் புத்தக அங்காடியை நடத்தி வருகிறேன். என்னிடம் புத்தகம்
வாங்குகின்றவர்களின் மூலம் எனக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பகுதியில் அதனைச்
செய்து வருகிறேன்.
யாரோ
ஒருவரின் பிரார்த்தனையிலும் நம்பிக்கையிலும் என் வயிறு நிறைந்தது போல, என்னால் முடிந்ததை
நான் செய்யும் போது அது இன்னொரு மனிதனின் வயிறை நிறைக்கிறது என்பது எனக்குள் சக மனிதன்
மீதான அன்பை அதிகப்படுத்துவதாகப் பார்க்கிறேன்.
சிலர்
தெருவோரங்களில் இருப்பவர்களுக்கு உணவுகளைத் தினமும் கொடுக்கிறார்கள். ஆதரவற்ற கால்நடைகளுக்கு
மருத்துவம் முதல் உணவுகள் வரை பல தொண்டூழியர்கள் கொடுத்துக்கொண்டும் செய்துக்கொண்டும்
இருக்கிறார்கள்.
இவர்கள்
எல்லோருமே ‘உள்ளிருக்கும் நாதனை’ உணவுகள் கொடுப்பதன் மூலமாகக் கண்டுகொள்கிறார்கள் தானே.
அது
கடவுள் ! அது கல் ! என்கிற சண்டைகளுக்கு மத்தியில் அந்த மனிதன் பசியோடு இருக்கிறான்,
கல்வி இன்றி இருக்கிறான்… என்பதே முதலில் பதிலளிக்க வேண்டிய கேள்வி.
செப்டம்பர் 28, 2022
TikTok பேய்கள்
செப்டம்பர் 26, 2022
- டுரியான் -
அவனது பயத்தைப் போக்குவதற்காக அவனுக்கே தெரியாமல் ஒரு ஏற்பாடு செய்தேன். வீட்டிற்கு அழைத்தேன். அறைக்குள் வசமே தெரியாத அளவிற்கு மறைத்து வைத்த டுரியானை அவன் முன் கொண்டு வந்தேன்
அவனால் எழுந்து ஓட முடியவில்லை. அந்தத் தனிமையில் டுரியானைக் கண்டதும் அழத்தொடங்கிவிட்டான். அது பயத்தினால் வந்த அழுகை அல்ல. இயலாமையால் வந்துகொண்டிருக்கும் அழுகை. கதறி அழ ஆரம்பித்துவிட்டான்.
மெல்ல மெல்ல அவனை ஆசுவாசப்படுத்தினேன். ஒரு நாள் அவனது அம்மா ஆசையாய் கேட்ட டுரியானை நாளைக்கு வாங்கித்தருவதாக சொல்லியிருக்கிறான். அந்த மறுநாள் அவனது அம்மாவிற்கு வரவேயில்லை.
அந்தக் குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடே டுரியான் மீது பயமாக மாறிவிட்டது. அதனை போக்குவதற்கு வழி தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தான். உடைந்து அழுதப்பின்னே மனபாரம் குறைந்து இயல்பை அவன் மனம் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்கிறது.
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
#வெள்ளைரோஜா_பதிப்பகம்
செப்டம்பர் 25, 2022
- புரட்சியாளர்களின் பரிசு -
செப்டம்பர் 24, 2022
ஏழாம் உலகம் - வாசிப்பு அனுபவம்
- நிம்மதியா ஒரு பேய்ப்படம் -
செப்டம்பர் 22, 2022
யாருக்குத்தான் சபலமில்லை...?
செப்டம்பர் 21, 2022
- இளையராஜாக்களும் அனிருத்களும் -
காலையிலேயே அழைத்திருந்தார். “என்ன ப்ரோ…”
என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக சந்தித்தோம். அங்கிருந்து திரும்ப வந்து, பிறகு மீண்டும் தமிழகப்பயணமும்
சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார். ஆனால் அந்த சிறகுள்ள மனிதரை பார்ப்பதற்கு என்னால்
முடியாமல் போனதைச் சொல்லி கொஞ்சம் திட்டவும் செய்தார் போதாக்குறைக்கு கொஞ்சமாக சலித்தும்
கொண்டார்.
எனக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது.
நம்முடன் பள்ளியில் படித்த நண்பனொருவர் கையாலும் பாணியை அப்படியே கையாண்டார். கண்களைப்
மூடிக்கொண்டு கேட்டால் எனது பள்ளி நண்பானின் ஒருவனாகத் தெரிந்தார். இதன் பிறகும் சந்திப்பை
தாமதப்படுத்தினால் வீட்டிற்கே வந்து கழுத்தைப் பிடித்து “ஏன் ப்ரோ என்னைய பார்க்க வரல..?”
என கேட்டுவிடுவார் என பயந்துவிட்டேன். “இன்னும் மூணு மணிநேரத்தில் பார்க்கலாம் ப்ரோ…”
எனறவாறு உடனடியாக வீட்டில் செய்ய வேண்டிய சில வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்தேன்.
திடீரேன்ற பொறுப்பை இல்லாள் யூகித்துவிட்டார்.
அவராகவே என்னிடம் “சரி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவீங்க..?” என கேட்டதிலிருந்து
அதனை தெரிந்துகொண்டேன். வாழ்க்கை இப்படித்தான். ரொம்ப கடினமான காரியங்கள் அரைநொடியில்
நடந்து முடிந்துவிடும். ரொம்பவும் சாதாரணமான காரியங்களுக்கு மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருப்போம்.
நமது புத்தகக்கடையில் ப்ரோ ஆடர் செய்திருந்த
புத்தகங்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன்.
எனக்கு முன்னமே எங்களின் வழக்கமான உணவக
கடைசி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து உணவகம்
முழுவதும் ஒரு சுற்று பார்க்க முடியும். அவரின் எதிரில் அமர்ந்தேன். என்னால் அவர் முகத்தையும்
அவருக்கு பின்னால் இருக்கும் மரம் செடி கொடிகளைத்தான் பார்க்க முடிந்தது. எவ்வளவு ப்ளான்
பார்த்தீங்களா!
நான் அவருக்கு புத்தகங்களைக் கொடுக்க,
அவர் எனக்கு சிங்கப்பூர் மிட்டாய்களையும் ரவாங்கில் பிரபாலமான பால்கோவாவையும் கொடுத்தார்.
என்ன சாப்டறீங்க என்று ஆரம்பித்து மட்டன்
குழம்பு கண்ணைக் கவர்ந்ததாகச் சொன்னார். உடனே ‘ரொட்டி சானாய்க்கும்’ மட்டன் குழம்புக்கும்
ஆடர் கொடுத்தோம். அந்த ஒரு வட்ட மங்கின் மட்டன் குழம்பிற்கு பதிமூன்று வெள்ளி வருமென
எங்கள் இருவருக்கும் அப்போது தெரியாது.
‘என்ன படிக்கறோம் என்ன எழுதறோம்’ என எங்கள்
பேச்சு, பழக்க வழக்கத்திற்கு வந்தது. அப்போதுதான் வாசித்து முடித்த ஜெயமோகன் அவர்களின்
ஏழாம் உலகம் நாவல் குறித்து பேசினேன். சமீபத்தில் உள்ளூர் சினிமாவிற்கு சில எழுத்து
வேலைகளைச் செய்துவருவதையும் நண்பர்களின் கதைகளை வாசித்து செறிவாக்கம் செய்து வருவதையும்
சொன்னேன்.
அவரும் சமீபத்தில் வெளிவந்த அவரது சிறுகதைகள்
குறித்தும் இனி தான் எழுதவிருக்கும் சிறுகதைகள் குறித்தும் பேசினார். மலேசியாவில் எழுதிக்கொண்டிருக்கும்
எழுத்தாளர்களில் சிலர் மட்டுமே தனித்தன்மையை எழுத்தில் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில்
இவரையும் சொல்லலாம். ரொம்பவும் தாமதமாக எழுத
வந்துவிட்டதாக சொல்லியவரிடம் சொன்னேன்; “இப்போது அதற்கு எந்த ஒரு குறையும் இல்லை..
வழக்கம் போல தொடர்ந்து எழுதுங்கள். சீக்கிரமே உங்கள் சிறுகதைகளை புத்தகமாக்குங்கள்.
தனித்தனியாக வாசிக்கும் சிறுகதைக்கும் ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பதற்கும்
வித்தியாசம் இருக்கு. உங்கள் புத்தகம்தான் உங்களை இன்னும் பரவலாக அடையாளப்படும்..”
என்றேன்.
அப்படி சொல்லும் போதெல்லாம், தவறாது ஒரு
பதிலை அவர் கொடுப்பார். “நல்ல கதைகளை எழுதி அறியப்படும் எழுத்தாளராக மாறிவிட்டு அப்பறமா
புத்தகம் போடலாம்னு இருக்கேன்..” நான் சிரித்துக்கொண்டே அவரின் கதைகளை இப்போதைக்கு
தேர்வு செய்து வைக்கச்சொன்னேன்.
பிறகு எங்கள் பேச்சு இளமை ததும்பும் பக்கம்
போனது. அது எப்பவும் போகும். ஒவ்வொரு முறையும் “ஆமா உங்களுக்கு என்ன வயசு…? ” என கேட்டுக்கொள்வார். நானும் வயதைச் சொல்லி நானும் பெரிய
பையன் தான் ப்ரோ என்றதும் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வார். இம்முறை அவரின் இளமை
காலத்தில் அவருக்கு கிடைத்த கிளுகிளுப்பான புத்தகங்களைச் சொல்லி சில அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றேன். மாறாக எங்களுக்கு வீடியோ பிறகு
வீசீடி அதன் பிறகு கம்பியூட்டர் கடை என வரிசைப்படுத்தினேன். ஆனால் இன்றையப் பிள்ளைகளுக்கு
அப்படியல்ல, கையிலேயே நவீன கைப்பேசி இருக்கிறது. நம்மைக் காட்டிலும் சீக்கிரமாக ‘எல்லாவற்றையும்’
அறிந்து கொள்ளும் வாய்ப்பு அபாயமும் ஒருங்கே அமைந்துவிட்டதைப் பேசினோம்.
கடந்த வாரம் இங்குள்ள ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கு உரை நிகழ்த்த சென்றிருந்தேன். ‘அகிலம் நீ’ என்னும் யுவதிகள் அமைப்பின்
வழி அழைக்கப்பட்டிருந்தேன். ஆண் மாணவர்களுக்கு நானும் பெண் மாணவர்களுக்கு ‘அகிலம் நீ’
யுவதிகள் அமைப்பின் நிறுவனர் தோழர் பொன் கோகிலமும் பேசினார்.
அங்கு நான் சந்தித்த மாணவர்கள் குறித்தும்
அவர்களின் நடவடிக்கை குறித்தும் பேசினேன். மாணவர்களுக்கு பணம் குறித்த விழிப்புணர்வையும்
கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி எங்கள் உரையாடல் சென்றது. உண்மைதான், ஒழுக்கும் கல்வி
என பலவற்றில் நாம் அக்கரை காட்டினாலும் மாணவர்களின் பார்வையில் பொருளாதார விழிப்புணர்வின்
அவசியம் குறித்து நாம் பெரிதாக பேசுவதில்லை. அவர்கள் என்ன வேலையா செய்கிறார்கள் பணத்தைப்
பற்றி பேசுவதற்கு என யாரும் கேட்கலாம். ஆனால் எந்த ஒருவனின் கையில் பணம் இருக்கிறதோ
அதன் மூலம் பொருளோ (மிட்டாயோ) வாங்கலாம் என நம்புகின்றானோ அவனுக்கு பொருளாதார விழிப்புணர்வு
அவசியம். இன்னும் சொல்லப்போனால் பணத்தின் அருமை தெரிவது கட்டாயம்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு
வயதானவர் தூரமான நாற்காலியில் அமர்ந்தார். நம்ம ப்ரோ கொஞ்சம் நேரம் அவரைப் பார்த்துவிட்டு,
“கொஞ்ச நேரம்..” என சொல்லிவிட்டு அந்த வயதானவரைப் பார்க்க சென்றார். ஒருவேலை இவருக்கு
படித்துக் கொடுத்த ஆசிரியராக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். திரும்பி வந்ததும் ப்ரோ
சொன்னார் அவரது பள்ளி நண்பராம். ப்ரோவின் இளமையின் ரகசியத்தை என்றாவது கண்டுபிடிக்க
வேண்டும்.
இப்போது கூட இளையராஜாவைப் பற்றிய முகநூல்
பதிவில் ப்ரோ கமெண்ட் போட நானும் அவரது கமெண்டுக்கு கீழ இவரை அனிருத் ரசிகர் என்று
நினைத்ததாகக் கூறினேன். அந்த இளமையும் துடிப்பும் அதற்கான காரணம் என்று நினைத்தேன்.
ஆனால் நம்ம ப்ரோ இளையராஜாவின் ‘அந்திமழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம்
தெரிகிறது..’ என்ற பாடலை விடவா இளமை துள்ள முடியும் என்றார். அவரின் இளமையின் ரகசியம்
ஓரளவு பிடிபட்டது.
தொடர்ந்து சில இணைய இதழ்களுக்கு சிறுகதைகளை
அனுப்புவதை சொல்லி அதன் மூலம் அவரின் மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். உண்மையில்
இது பலரின் மன ஆதங்களில் ஒன்றுதான்.
இணைய இதழுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு
அவர்கள் தரும் பதிலுக்கு காத்திருப்பது குறித்த மாற்று கருத்து இல்லை. ஆனால் நாம் அனுப்பிய
படைப்புகள் எற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்று கூடவா சொல்வதற்கு
அவர்கள் சிரமப்படுவார்கள். சில இணைய இதழ்கள் தங்களுக்கு படைப்புகள் கிடைத்துவிட்டன
என்பதைக் கூட எழுத்தாளர்களுக்கு சொல்லுவதில்லை. இங்கு காத்திருப்பது சிக்கல் இல்லை,
ஆனால் இதில் மறைந்திருக்கும் அலட்சியம்தான் சில சமயங்களில் நமக்கு மன வருத்தத்தைக்
கொடுக்கிறது.
எங்கள் உரையாடலுக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி
வைத்தோம். அடுத்து இன்னும் நிறைய பேசுவோம் என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றோம். என்னைவிடவும்
வேகமாய் நடந்து அவரது வாகனத்தை நெருங்கிகொண்டிருந்தார். சொல்ல மறந்துவிட்டேன் நம்ம
ப்ரோவின் பெயர் ஶ்ரீ ராமுலு, ஶ்ரீகாந்தன் என்ற பெயரின் எழுதிக்கொண்டிருக்கிறார்.