பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 21, 2011

நடுநிசி நாய்கள் - எல்லோர் மனதிலும் திரிகின்றது......

நடுநிசி நாய்கள் - எல்லோர் மனதிலும் திரிகின்றது......

சமீபத்திய விமர்சனங்களால் அதிகம் கடித்து குதறப்படும் படம் ‘நடுநிசி நாய்கள்’. மீண்டும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ என்றார்கள்; அதை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் அவரது பேட்டியில் குறிப்பிட்டுவிட்டார் எனபதை இவர்கள் படித்திருக்கவில்லை. அதனால்தான் திரைக்கதை - இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் என காட்டப்பட்டது. இதை இவர் கொடுத்திருக்கக் கூடாதாம்; எதிர்ப்பார்த்து போனவர்கள் ஏமாந்து வந்தார்களாம்.. சரி இதை வேறு யார் கொடுத்திருக்க வேண்டும்..? இப்படி எதிர்ப்பார்த்து திரையரங்கு செல்பவர்கள் முதலில் தங்களில் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றார் போல திரைக்கதையை எழுதி கையில் வைந்திருந்தால்; இயக்குனரின் அடுத்த கதைக்காவது பயன்படும்..!
இதுதான் தன் பாணி என இருப்பதை உடைத்து இதுவும் என் பாணிதான் என சொல்லும் தைரியம் எல்லோர்க்கும் வாய்க்காது. இன்னும் சொல்லப்போனால் ரஜினிக்கே சந்திரமுகியில்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது (ஏறக்குறைய). ஆனால் கௌதம் மேனன தனது ஒவ்வொரு படைப்பிலும் தன்னுடையப் பழைய பாணியை உடைத்து வருகின்றார். ஒன்றின் சாயல் மற்றதில் இல்லை. வாழ்த்துகள்
கதை என்ன..?
பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுவன். மனச்சிதைவுக்கும் ஆளாகின்றான். அவன் வளர்ந்து வரும் நேரம் முறையான எடுத்துக்காட்டும் போதனையும் இல்லாததால்; அவன் மனநோயாளி ஆகின்றான். தனக்கேத் தெரியாமல் முன்று நபர்களாக தன்னை நினைக்கத் தொடங்குகின்றான். முன்று நபர்கள் என்ற நினைப்பில் முன்று வித காரியங்களைச் செய்கின்றான். ஒன்று அழுகை மற்றொன்று கொலை அடுத்து கொலை முயற்சி. தன் தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறுவன் வளர்ந்து வந்ததும், ஆண்களைவிட பெண்களையே பலி கொள்கின்றான். அதற்கானக் காரணம் இதுதான். தந்தையால் ஏற்பட்ட மனபாதிப்புக்குச் சரியான தீர்வு இல்லாத அவன்; நடுத்தர வயது பெண்ணால் வளர்க்கப்படுகின்றான். அப்போது அவனுக்கு பெயர் மாற்றப்படுகின்றது. சமர் வீரா ஆகின்றான். குறிப்பிட்ட வயதில் அவனது உடலிலும் மனதிலும் மாற்றம் ஏற்படுகின்றது. மீண்டும் அவனது கடந்தகால வாழ்க்கையும் அப்பா செய்த கொடுமையும் இவனை பயமூட்டத் தொடங்குகின்றன. பயத்தின் காரணமாய் தன்னை வளர்க்கும் நடுத்தர வயது பெண்ணின் காட்டிலில் அவள் கால் பிடித்து கதறி அழுகின்றான்.
இதுவரை அமைதியாய் இருந்த அவனது பழைய எண்ணத்தின் வெளிபாடு, அங்கே தன்னை வளார்க்கும் பெண்ணை தன் இச்சைக்கு பலிவாங்குகின்றது. அவளும் நடுத்தர வயது. திருமணம் ஆகவில்லை. சில முறை அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தாலும் அவனின் தொடுதல் அவளை இனங்க வைக்கின்றது. இதுவரையில் வளர்த்து வந்தவள்; இந்த நொடியில் அவனுக்கு வாழ்க்கையாகின்றாள்.காதல் என்பதை அந்த இளைஞன் தவறாக அர்த்தப்படுத்துகின்றான்.

‘எல்லாம்’ முடிந்ததும், அவளால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அவனை விரட்ட; அவனும் இவள் கால் பிடித்து கதற..... அவனது பலவீனத்தை இவள் மன்னிக்கின்றாள். ஆனாலும் அதை அப்படியே விட இவளால் முடியவில்லை. ஏனெனில் இவள் மீதும் தவறு இருக்கின்றது. (உடனே சண்டைக்கு வராதீர்கள்-முடியும்வரை படியுங்கள்-முடியாதவர்கள் கிளம்புங்கள்...!) அவன் , அவளை குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் பார்த்து ரசிக்கின்றான்.
தனக்கு கல்யாணம் எனவும் தனது நண்பன் ஒருவனை திருமணம் செய்யப்போவதையும் அவனுக்கு சொல்லி நண்பனை அவனுக்கு அறிமுகம் செய்கின்றாள். அப்பாவித்தனமும் காமமும் கலந்திருந்த அவனுக்குள் குரோதமும் வந்து சேர்கின்றது. திருமணம் முடிந்து புதுமணத் தம்பதியர் கட்டிலில் தங்களில் கடந்த கால பள்ளி வாழ்க்கையைப் பேசும் சமயம் கணவன் கொலை செய்யப்படுகின்றான். அந்த இளைஞனின் கொலை இங்குதான் தொடங்குகின்றது.


அங்கே எதிர்பாராத வகையில் தீ விபத்து நடக்கின்றது. அவள் உடல் முழுக்க தீக்காயங்களுடன் மீட்கப்படுகின்றாள்; அந்த இளைஞனால். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவள் இருக்கின்றாள். இருந்தும் இறந்த கணவன் மீது பலி சுமத்தி அந்த இளைஞனை காப்பாற்றுகின்றாள். தன் சொத்துகள் அனைத்தையும் இளைஞனுக்கு எழுதி வைக்கின்றாள். அவளில் குற்ற உணர்ச்சி கொஞ்சநஞ்சம் இருக்கும் உயிரையும் கொல்கின்றது.
இறந்த அவள் தன்னுடன் வாழ்வதாகவும் தானும் இரண்டு ஆட்களாக இருப்பதாகவும் அந்த இளைஞனது எண்ணம் முழுமையாக நம்புகின்றது. அந்த நம்பிக்கை அவன் எந்த அளவுக்கு கொண்டுப்போகின்றது என்பது மீதிக்கதை.

(முழுக் கதையை சொல்வது என் நோக்கமல்ல- திரையறங்கு வெளியில் சிலரின் தவறானப் புரிதல்களும் கேள்விகளும் கடந்து வந்த்தால் இதை எழுதுகின்றேன்)

சிறுமிகள் மட்டுமல்ல, சிறுவர்களும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். ஆனால் இதுபோன்ற பாலியல் கொடுமைகள் நூற்றுக்கு ஐம்பது சதவிதமாவது பதிவு செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறி. பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்ற சுறுவர் சிறுமியர் அதற்கு சரியான முறையில் சிகிச்சையோ ஆலோசனையோ இல்லாத பட்சத்தில் எப்படி தவறான உணர்ச்சிகளால் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் இந்த ‘நடுநிசி நாய்கள்’.
அது என்ன ‘நடுநிசி நாய்கள்’...? சுந்தர ராமசாமியில் கவிதைத் தொகுப்பின் தலைப்பு மட்டுமா..? இந்த கதைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்..?
யோசிக்கின்றேன்...!
நடுநிசியில் நாய்களின் செய்கைகளைக் கவனித்தது உண்டா..? அதன் தேவை என்ன..? காலை முதல் மாலை வரை இருக்கும் நாய்களுக்கும் நடுசிநி போன்ற வேலையில் திரியும் நாய்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். முன்னது குறைக்கும். பின்னது குறைப்பதோடு நிற்காமல் தன் கூட்டத்தை கூப்பிட்டு கடிக்கவும் அஞ்சாது. அதன் தேவையொன்றின் மீதே குறி இருக்கும். அதற்காக சக நாய்களிடம் கூட சண்டையிடும்.
அப்படி சாமன்ய மனிதர்களாக நம்மோடு நடக்கும் - பணி செய்யும் - உணவு சாப்பிடும் - ஜோக் அடிக்கும் - ஒரு நபர் மனநோய்க்கு ஆளாகியிருந்தால் அதன் பாதிப்பால் எதையும் / கொலையும் செய்யத் துணிவார்கள். உணர்ச்சிவசப்பட்டு கத்துவதுவது போல்தான் உணர்ச்சி வசத்தால் தன் உடலுக்காக அலைவதும். கோவப்படாதிங்க......! கோவப்பட்டு கத்தும் போதும் நீங்க நீங்களா இருக்கறது இல்ல... குரல் முதல் வரும் வார்த்தைகள் வரை உங்களுக்கே புதிதாகவும் இருக்கும். அந்த நேர உணர்ச்சிக்கு நீங்கள் அடிமை. அதுவேதான் இங்கும். இந்த நேர உணர்ச்சிக்கு இவர்கள் அடிமை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனநோயால் பாதிக்கபட்டிருக்கின்றார்கள். ஆனால் சிலருக்கு ஏற்படும் பாதிப்புகளும் அனுபவங்களும் அவர்களின் மனநோயை அதிகப்படுத்துகின்றது.

‘சிவப்பு ரோஜாக்கள்’ கமலுக்கும் ‘நடுநிசி நாய்கள்’ வீராவுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. கமல்- தான் வளர்ந்து வரும் சமயத்தில் சில பெண்களால் பாதிக்கப்படுகின்றார். அந்த பாதிப்பு அவருக்குள் விதைப்பதை இளைஞனானப் பிறகு; பருவப் பெண்களிடமிருந்து அறுவடை செய்வார். விரும்பி வரும் பெண்களும் தான் விரும்பி அழைக்கும் பெண்களும் இதில் அடங்கும். கமலின் நோக்கம் பெண்கள்; கட்டில்; கொலை; இவ்வளவுதான். காமமும் பலியுணர்ச்சியும் கமலை இயக்குவதாக காட்சியமைத்திருப்பார் அதன் இயக்குனர் பாரதிராஜா. இது 32 ஆண்டுகளுக்கு முன்.

இப்போது 32 ஆண்டுகளுக்கு பின். ‘நடுநிசி நாய்கள்’ வீரா வித்தியாசப்படுகின்றான். பலியுணர்ச்சியும் காமமும் இவனது இலக்கு அல்ல. தந்தையால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, முறையான வடிகால் இல்லாமல் வளர்ந்த நடுத்தர வயது பெண்ணை இச்சைக்கு பலிவாங்குகின்றான். அந்த பெண்ணின் மரணத்துக்குப் பிறகு சென்னை வரும் வீரா மூன்று கதாப்பாத்திரமாக வாழ்கின்றான்.

1-சமர் - தந்தையால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டவன்.

2- வீரா - நடுத்தர வயது பெண்ணால் வளர்க்கப்பட்டவன்.

3- மீனாட்சி - வீராவுக்கு ஆதரவாக இருந்து; அவனுக்கே பலியானவள்.

இந்த மூன்றும் அவன் ஒருவனே. (split personality) வீராவாக அன்புக்கு ஏங்குகின்றான். அமிராக காமத்துக்கு அலைகின்றான். மீனாட்சியாக பெண்களை கொன்று தலைமுடியை சேகரிக்கின்றான்.

இதில் மீனாட்சியைப் பற்றி தெரிந்துக் கொள்ளதான் வேண்டும். இவள்தான் அந்த அமர் என்ற வீராவை அவனது தந்தையிடமிருந்து காப்பாற்றிவள். அவனுக்கு யாரும் இல்லாத பட்சத்தில் தானே வளர்க்கத் தொடங்குகின்றாள். பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கோ கவுன்சிலிங்கிற்கோ அனுப்பாததுதான் அவனது தற்போதை நிலைக்கு முதன்மைக் காரணம். அப்படி செய்திருந்தால் தொடக்கத்திலேயே அவனது உணர்ச்சிகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை மேற்கொண்டிருக்கலாம். அதோடு அவள் திருமணம் செய்திருந்தால் இந்த பிரச்சனையும் வளர்ந்திருக்காது.

பதினம் வயதில் இருக்கும் அவனுக்கு ஓர் இரவில் மீண்டும் பழைய நினைவுகள் எழ ஆரம்பிக்கின்றது. எழுந்த நினைவுகள் அவனது உணர்ச்சியைத் தூண்டுகின்றது. முதலில் தூண்டிய உணர்ச்சி பயம். அதன் காரணமாக மீனாட்சியின் காலை பிடித்து நடுங்குபவன் கொஞ்சம் கொஞ்சமாக மேலேருகின்றான். ஏறுவது அவன் மட்டுமல்ல; மாறாக இது நாள் வரை அவனுள் வடிகால் கிடைக்காமல் இருந்த உணர்ச்சியும்தான். இவனது இச்சைக்கு அவள் பலியாகும் தருணம் நீளமானதுதான். இதை எப்படி வேண்டுமானாலும் காட்டியிருக்க முடியும். கட்டில்; பதின்ப வயது ஆண்; திருமணமாகாத நடுத்தர வயது பெண். ஆனால் கௌதம் மேற்சொன்ன எதையும் நம்பாமல். அந்த நடுத்தர வயது பெண்ணின் முகத்தைத்தான் காட்டுக்ன்றாள். முதலில் அவள் புரியாமல் தவிப்பது.பின் அவனிடமிருந்து விலக நினைப்பது. அவளும் உணர்ச்சிவசப்படுவதும் அவளில் முகத்தில் தெரிகின்றது. இதுவரை இல்லாத உணர்ச்சி அவளுக்கும் !. இந்த காட்சியை சுருக்கியிருந்தால் கதைக்கரு மதிப்பிழந்திருக்கும்.
வீரா நேசிக்கும் பெண்கள்; சமரால் கற்பழிக்கப்படுகின்றனர்; மீனாட்சியால் கொலை செய்யப்படுகின்றார்கள். மூன்றுக்கும் ஒரே உடல். ‘அந்நியன்’ விக்ரம் போல தலைமுடியெல்லாம் மாற்றி கண்ணாமூச்சி காட்டாமல் எதார்த்தமாகன ஒருவனாக வருகின்றான் வீரா.

இதெல்லாம் படமா என விமர்சித்து தங்களில் நேர்மையைப் பறைசாற்றுவதற்கு முன் கவனிக்க வேண்டியது பல இருக்கின்றது.

சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களும் பாலியல் பலாத்காரம் செய்யபப்டுகின்றார்கள்.

இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் அல்லது மனநல ஆலோசகரிடம் பரிசோதித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கு வடிகால் அவசியமாகின்றது; சில மத அடிப்படையிலும் சில மன அடிப்படையிலும்.

இணையம் வழி வரும் உறவுகளால் ஏற்படும் பாதிப்பு.

யோசிப்போம்.

‘நடுநிசி நாய்கள்’ குறித்தான விமர்சனம் சொல்லும் அளவுக்கு நான் இல்லை. சராசரி ரசிகன் என்ற முறையிலிருந்து வாசிப்பின் மூலம் ஒரு அடி மேல் சென்று பார்த்ததால் இதனை எழுதினேன். ‘நில்லுங்கள் ரோஜாவே’, ‘ஆ’ போன்ற சுஜாதாவின் கதைகளையும் மற்ற உண்மைக் கதைகளைப் படித்ததாலும் மனம் சார்ந்த தகவல்களைத் தொழிலுக்காகவும் தனி ஆர்வத்தில் பேரிலும் தொடர்ந்து படித்து வருவதால் வீரா; சமர்; மீனாட்சி போன்ற கதாப்பாத்திரங்களை சந்தித்த அனுபவம் எனக்கும் இருக்கின்றது. வெளிப்படையால் சொல்வதென்றால் எனக்கும் கொஞ்ச நாட்களாக மண்டைக்குள் சத்தம் கேட்டது........!!!!!!!!!!


இப்படிக்கு தயாஜி

பிப்ரவரி 03, 2011

வாங்கிய புத்தம்.....


2-2-2011-ல் வாங்கிய புத்தம். விக்கிரமாதித்தன் கதை.
மொத்தம் 32 கதைகள் இருக்கின்றன.

சிறுவனாக இருக்கும் போது தந்தை கொடுத்த அம்புலிமாமாவில் விரும்பி படித்த கதைகளில் ஒன்று. இது போன்ற வேதாளம் தேடும் வேட்டையில்தான் ஆவிகள் குறித்து தகவல்களை சேகரிக்கத் துடங்கினேன்.

இதுமட்டுமல்லாமல் தெனாலி ராமன்;மரியாதை ராமன்; ஜான்கிராமன் ; பீர்பால் ; அக்பர் போன்ற கதைகளை என் சிறுவயது முதல் விரும்பிப்ப் படித்தும்; கேட்டும் வந்திருக்கின்றேன்...

அவைதான் இன்றைட என் வாசிப்புக்கு பிள்ளையார் சுழி. இன்று நான் சந்திக்கும் சிறுவர் சிறுமியரை கேட்டால் மேற்ற்சொன்ன கதைகள் பற்றிய எந்த ஒரு :தெரிதல்: இல்லாமல் இருக்கின்றார்கள்.

இதன் காரணம் என்ன..?

பள்ளி நூல் நிலையமா..?

ஆசிரியர்களா..?

பெற்றோரா..?

என் பால்ய வயதில் இவை நான்கும் ஒரு சேர அமைந்தது.


இதனை எழுத்துச் சித்தர் என அழைக்கப்படும் இந்திர சௌந்திரராஜன் அமானுஷ்ய நாவலாக எழுதியுள்ளார்.

சரி வெளிப்படையாகப் பேசுவோம் உங்களில் எத்தனைப் பேர் இந்த கதைகளைப் படித்திருக்கின்றீர்கள்...
அல்லது கேள்விபட்டுள்ளீர்கள்..??

இது போன்ற நம் தமிழர்களின் காலம்காலமா சொல்லப்பட்டு வாசிக்கப்பட்ட கதைகள் என்னஎன்ன இருக்கின்றது தெரியுமா..?

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்