பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஆகஸ்ட் 28, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 24


நண்பர்களுக்கு வணக்கம்,
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் என 'புத்தகச்சிறகுகள்' தொடர் 24 வெளி வந்துள்ளது.

1991-ம் ஆண்டில் வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' புத்தகம் குறித்த என் வாசிப்பு அனுவம் இந்த வார தொடரோடு முடிகின்றது.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகம் குறித்த வாசிப்பனுபவத்தை எழுத்தை எழுதுகிறேன்.

வாய்ப்புள்ளவர்கள் வாசித்து சொல்லுங்கள். அதோடு நீங்கள் எனக்கு புத்தக பரிந்துரையைச் செய்து உதவலாம்.

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

நெல் விருந்து


நல்ல பிள்ளைகளாய்க் குளித்து முடித்த பின், சின்னதாய்க் கொஞ்சம் நெல் விருந்து. ஒருவன் 'பிக்காச்சு' இன்னொருவன் 'ரைன்போ'.

என்னிடம் செல்லம் கொஞ்சுவதில்  இருவருக்குமே எப்போதும் போட்டிதான். இருவரையும் சம அளவில் கொஞ்சுவது அவ்வளவு எளிதல்ல. கோவித்து கொண்டால் இருவருமே சொல்லி வைத்தார் போல கடித்தும் கொத்தியும் வைப்பார்கள்

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 21, 2026

💙 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'💙

💙 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'💙

ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்.

நடைபெறுகிறது 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'



சனிக்கிழமை காலை மணி 8க்கு  வெகு விமரிசையாகத் தொடக்கம் காண்கின்றது.

இந்தக் கொண்டாட்டத்தில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனையும் நடைபெறுவுள்ளது. உங்களுக்கான புத்தகங்களை நீங்களே தொட்டு பார்த்து திறந்து பார்த்து வாங்கி வாசிக்கலாம்.



உங்களுக்கான புத்தக அறிமுகத்துடன் நானும் அங்கு காத்திருப்பேன் நண்பர்களே.

இன்றே ஈப்போ புறப்படுகின்றேன்.
நாளைய மாநாட்டில் நாம் சந்திக்கலாம்.

அன்புடன்
#தயாஜி
புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை



ஆகஸ்ட் 16, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 23


இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு மலரில், எனது வாராந்திர தொடரான 'புத்தகச்சிறகுகள்' தொடர் 23 வெளிவந்துள்ளது......

1991-ஆம் ஆண்டு வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.

கட்டுரையின் இரண்டாம் பகுதி இந்த வாரத் தொடரில் வெளி வந்துள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் வாசித்து சொல்லவும்.

அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 15, 2026

- இரு கோடுகள் -


- இரு கோடுகள் - 

குழந்தையின்
கையைப் பிடித்து 
ஒருவர் நடந்தும் ஓடியும்
வருகின்றார்

குழந்தை என்னமோ
தைரியமாகத்தான் வருகிறது

அவர் முகத்தில்தான்
அவ்வளவு பயம்

சின்னதாய் 
ஒரு பெரிய கோடும்
பெரியதாய் 
ஒரு சின்ன கோடும் போல...

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 13, 2026

- அரு.சு.ஜீவானந்தனைச் சந்தித்தோம் -


எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் அவர்களைச் சந்தித்தோம். என்னுடன் எழுத்தாளர் ஸ்ரீகாந்தனும் வந்திருந்தார். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அவரது வீட்டில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

ஒவ்வொரு சந்திப்பின் பின்னும் அன்றைய தருணத்தை என் மனதில் தொகுத்து கொள்வேன். அதிலிருந்து என் தேடலுக்கான பதிலோ என் பாதைகளுக்கான வழியோ கிடைக்கும் போது அதனை எழுத்துகளாக பதிவு செய்வேன்.

நேற்றைய சந்திப்பையும் அப்படித்தான் மனதில் தொகுத்து கொண்டிருக்கிறேன். அதற்கான காரணம் பிடிபட்டதும் வழக்கம் போல அதனை எழுத்தில் பதிவு செய்கிறேன்.

நான் அதனை எழுத வேண்டியதற்கான காரணத்தையும் அவரது சந்திப்பில் மீண்டும் உணர்ந்து கொண்டேன்.

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 11, 2026

ஆர்.சூடாமணி 2


சிறகுகளின் கதை நேரம்; 52வது சிறுகதைக் கலந்துரையாடல் திங்கட்கிழமை சிறப்பாய் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.சூடாமணியின் 'பூமாலை' சிறுகதை குறித்து உரையாடினோம். ஏறக்குறைய பதினொரு பேர் இணைய கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவருமே சிறுகதையை வாசித்து பேசியதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

சிலருக்கு முதன் முதலாக ஆர்.சூடாமணியின் எழுத்துலகின் வாசல் இன்று திறந்ததாகவும் சொன்னார்கள்.

விரைவிலேயே ஆர்.சூடாமணி படைப்புலகம் குறித்த முழுமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோம்.

அடுத்த வார சிறுகதைக் கலந்துரையாடலுக்கான சிறுகதையை சில தினங்களில் பகிர்வோம். வாசிப்போம், உரையாடுவோம், கலந்துரையாடுவோம்...

 கலந்து கொண்ட நண்பர்களுக்கு சிறகுகள் குழுவின் அன்பும் நன்றியும்...

#சிறகுகளின்_கதை_நேரம்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்