பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜூன் 09, 2026

- இளம் எழுத்தாளர்களின் கொண்டாட்டம் -

-இளம் எழுத்தாளர்களின் கொண்டாட்டம்-


ஐபாட்டி அமைப்பின் புத்தக வெளியீட்டு விழா & மரபு நாள் கொண்டாட்டத்திற்கு  சென்றிருந்தேன். சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்கள். 

இவ்விழா ஜூன் ஆறாம் நாள் பிரிக்பீல்ட்ஸ் கந்தையா மண்டபத்தில் நடைபெற்றது. மூன்று முக்கிய அம்சங்கங்களை இவ்விழா கொண்டிருந்தது. முதலாவதாக சொற்கற்கள் போட்டி. அடுத்ததாக மண் பானை உருவாக்கம். மூன்றாவதாக இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீடு. நான் மூன்றாவது அங்கத்திற்கு சிறப்பு விழுந்தினராக சென்றிருந்தேன்.

காலை எட்டு மணி தொடங்கி மதியம் 2மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை சங்கீதா சந்திரகுமாரன் இந்நிகழ்ச்சியின் இயக்குனராகவும், திரு.மனோஷ் இராமா (ஐபாட்டி இயக்குனர்) துணை இயக்குனராகவும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களோடு ஐபாட்டி அமைப்பினரும் நண்பர்களும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு பலமூட்டினார்கள். 
மலேசியாவில் தமிழில் முதன் முறையாக   தேசிய அளவிலான ‘சொற்கற்கள்’ போட்டியை இவர்கள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஐப்பாட்டி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களில் எட்டு இடைநிலைப்பள்ளி மாணவர்களின் கதை புத்தகங்கள் வெளியீடு கண்டன.

அந்த எட்டு மாணவர்களின் கதை புத்தகங்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து நற்சான்றிதழ்களை வழங்கினேன். பின்னர் சிறப்புரையாற்றினேன்.

எட்டு கதை புத்தகங்களையும் முன்னமே வாசித்திருந்ததால் என்னுடைய உரையில் அந்த எட்டு கதைகளிலும் இருக்கக்கூடிய முக்கியமானவற்றை பகிர்ந்து கொண்டதோடு இளம் எழுத்தாளர்களுக்கு இம்மாதிரி அமைப்புகள் கொடுக்கும் உற்சாகத்தையும் பெற்றோர்களிடம் இருந்து  ஆதரவும் அவசியம் என்பதையும் பேசினேன்.

ஐபாட்டி அமைப்பினர் முதன் முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்த ‘இளம் எழுத்தாளர் புத்தக வெளியீட்டு விழா & மரபு நாள்’ கொண்டாட்டத்தில் நானுமே ஓர் எழுத்தாளராக கலந்து கொண்டதிலும் இளம் எழுத்தாளர்களைச் சந்தித்து பேசியதிலும் மகிழ்ச்சி. இம்மாதிரியான நிகழ்ச்சிகள்  தொடர்ந்து ஒரு விழா போல கொண்டாடப்படவேண்டும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

இளம் தலைமுறையினரை வாசிக்க வைக்கவும் எழுத வைக்கவும் நம்மால் இயன்றதை செய்வது நமது கடமைகளின் ஒன்றுதானே.


எட்டு கதைகளைக் குறித்து சொல்லாமல் போனால் எப்படி? 

1. நான் உயர்ந்தவன், என்ற கதையை லாவண்யா சதிஷ் குமார் எழுதியிருந்தார். எப்படியாவது முன்னேறி தன் குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் மாணவனின் கதை. கல்வியும் தொழிலும் நிச்சயம் உதவும் என சொல்லும் கதை.

2. பெண்களின் வெற்றி, என்ற கதையை மோனிகா ரவி எழுதியிருந்தார். வீனை வாசிக்க ஆசைப்படும் நாயகி நண்பர்களால் கேலி செய்யப்படுகின்றாள். மனம் உடைந்த மாணவி தனது விடாமுயற்சியால் எப்படி சாதனை பெண்ணாக மாறுகின்றாள் என்பதுதான் கதை.

3. ரோபோட் உலகம், என்ற கதையை மீனாள் முத்தையா எழுதியிருந்தார். நான் இரசித்த கதைகளில் இதுவும் ஒன்று. நமக்காக வேலை செய்து கொண்டிருந்த இயந்திரங்கள் ஒரு மனிதர்களை வேலை வாங்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற கதை மாணவனின் பார்வையில் இருந்து சொல்லப்பட்டிருக்கும்.

4. இருட்டில் ஒரு நட்சத்திரம், யாஷினி ஏண் டிக்சன் என்பவர் எழுதியிருந்தார். விரக்தியில் இருக்கும் மின்மினி மூச்சி தவளையைக் காப்பாற்றி தனது விரக்தியை விரட்டும் கதை.
5. ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கைக் கதை, என்ற கதையை பரமேஸ்வரி மோகன் எழுதியிருந்தார். தந்தையின் மரணத்தில் மனம் சோர்ந்த மாணவி தனது ஆசிரியை மூலமும் பாட்டி மூலமும் தேர்வில் வெற்றி பெறும் கதை.

6. சிங்கமும் தந்திர நரியும், என்ற கதையை நர்மதா லிங்கமுத்து எழுதியிருந்தான். சிறு வயதில் நாம் வாசித்த சிங்கத்தை ஏமாற்று காட்டுக்கு இராஜாவாக மாறும் நரியின் கதைதான். இதன் சுவாரஸ்யமே அந்தச் சிங்கத்திற்கு ஒரு தம்பி இருப்பதும் அதனால் அடுத்து நடப்பதும்தான்.

7. புகழனின் இணைப்பிரபஞ்சம், என்ற கதையை மோவ்பானி ஶ்ரீ சௌமங்கலி  என்பவர் எழுதியிருந்தார். என்னை ஆச்சர்யப்படுத்திய கதை இது. பூமியில் இருந்து இன்னொரு பிரபஞ்சத்தில் சிக்கி கொள்ளும் மாணவனின் கதை. சில பக்கங்கள்தான் என்றாலும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கும். இதனையே வளர்தெடுத்து சிறுகதையாகவும் மாற்றலாம்.

8. மர்மமான இரவு, என்ற கதையை யாளினி ஏண்ணா டிக்சன் எழுதியிருந்தார். இதுவும் எனக்கு பிடித்தமான கதைதான். இக்கதை நமக்கு பழக்கமான கதைதான். இறந்தவரே வீட்டுக்கு வந்து தான் இறந்த செய்தியைச் சொல்கிறார். அதன் பின் நடந்தது என்ன என்பதை பயம் காட்டும்படி எழுதியிருப்பார்.

இளம் எழுத்தாளர்கள் குறிப்பாக இவர்கள் அனைவருமே மாணவர்கள் என்பதால்  அவர்களின் இந்த   முதல் முயற்சிக்கு உற்சாகம் கொடுக்கும்படியும் அவர்களுள் இருக்கும் எழுத்தாளர்களை அவர்கள் தீவிரமாக தேட வேண்டும் என்பதற்காகவும் இவ்வொரு கதையில் இருந்து விமர்சனமாக அள்ளாமல் என் வாசிப்பை மட்டுமே எழுதியுள்ளேன்.

இந்த முதல் எழுத்து அவர்களில் யார்யாரின் எழுத்து வாழ்விற்கு பிள்ளையார் சுழியாக அமைந்திருக்கின்றது என்பதை நாமும் காலத்தோடு இணைந்து பொறுமையாய்க் காத்திருந்து பார்க்கலாம்.

ஐபாட்டி அமைப்பினர்க்கும் இளம் எழுத்தாளர்களுக்கும் இதுவரை வாசித்த அனைவருக்குமான எனது அன்பு.

- தயாஜி

ஜூன் 08, 2026

வாசிப்பில்


வாசிப்பில் 'கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன்'. மௌனன் யாத்ரிகாவின் கவிதைகள்.

கவிஞரின் முந்தைய கவிதைத் தொகுப்புகளில் 'வேட்டுவம் நூறு' மற்றும் 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' போன்ற இரு தொகுப்புகளை வாசித்துள்ளேன்.

குறிப்பாக 'வேட்டுவம் நூறு' தொகுப்பு குறித்த வாசிப்பு அனுபவத்தை எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன். 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' தொகுப்பு குறித்து எழுதுவதற்கு முன்பாக இந்தத் தொகுப்பு வாசிக்க வந்துவிட்டது.

போதுவாகவே கவிதை வாசிப்பதில் கவிதையை வாசிப்பதும் கவிதையால் வாசிக்கப்படுவதும் ஓர் மையப்புள்ளியில் அமைந்துவிடும்.
எனக்கு அப்படி அமைக்கும் கவிதைளை மௌனன் யாத்ரிகா எப்போதும் கொடுத்துகொண்டே இருக்கின்றார். அதுவே அந்தக் கவிஞரை தவறாது வாசிக்க வைக்கிறது.


👉புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’ ~ தயாஜி வெள்ளைரோஜா https://share.google/7oihdVSkmb362D4Bl

ஜூன் 04, 2026

வாசிப்பில்


எப்பவோ
மரித்திருக்க வேண்டிய உடல்.
இன்னும் என்னுடன்
இழுபட்டுக்கொண்டே
பயணிக்கிறது......
(கவிஞர் தில்லையின் புறத்தலைதல் கவிதையில் இருந்து)


வாசிப்பது ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான தில்லையின் 'விடாய்' கவிதைகள். தாயைத்தின்னி நாவல் மூலம் அதிகம் அறியப்பட்டவர். நானும் அந்த நாவலின் வழிதான் அறிந்து கொண்டேன்.

அதன் பின்னர் தனித்தனியாக அவரது கவிதைகளை வாசிக்க தொடங்கினேன். இப்போது அவரது கவிதைத் தொகுப்பை வாசிக்கவுள்ளேன். ஒரு கவிஞரின் கவிதைகளைத் தனித்தனியாக வாசிப்பதும் புத்தகமாக வாசிப்பதும் தனித்தனி அனுபவங்களைக் கொடுக்கக்கூடியவை.

புத்தகமாக கவிதைகளை வாசிக்கும் போது அந்தக் கவிதைகளுள் இன்னும் ஆழமாகவும் நேரமெடுத்தும் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த ஆண்டு இவரது தாயைத்தின்னி நாவலைத்தான் முதலில் வாசிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் கவிதைகள் முந்திகொண்டன.

வாசிப்பில் எது நம்மை அழைக்கும் எது எதோடு நம்மை இணைக்கும் என்பதையெல்லாம் யாரால் எப்படி யூகிக்க முடியும்; சொல்லுங்கள்.



ஜூன் 03, 2026

மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - 6



இம்மாத நடுகல்.காமில் நான் எழுதிய 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - தொடர் 6-ல்', 
கவிஞர் 
மதிக்குமார் தாயுமானவனின் 'யாமக்கோடங்கி' கவிதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.
இது கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு.

வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார  செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....

இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...


என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜுன் மாத நாவல் வாசிப்பில்..


ஜூன் மாத நாவல் வாசிப்பு திட்டத்தில் அசோகமித்திரனின் 'தண்ணீர்'....

கடந்த ஐந்து மாதங்களில் வாசித்த புத்தகங்களை அதற்குரிய இடத்தில் அடுக்கிவிட்டேன். ஜூன் மாதம் முடிந்ததும் அதுவரை வாசித்தவற்றை பகிர்வேன்.

ஜூன் மாதத்திற்கான புத்தகங்களை வழக்கம் போல எனது வாசிப்பு மேஜையில் அடுக்கி கொண்டிருக்கிறேன். எப்போதும் போல  நாவல், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொரு வகையிலும்  ஒரு புத்தகம் என எடுத்து வைத்தாகிவிட்டது.

வாசிப்பதற்கான நேரத்தையும் அதற்கான மனநிலையும் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும்.

வாசிப்பை திட்டமிடுவது வாழ்க்கையை நடத்த உதவுகிறது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 02, 2026

மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 18

இம்மாத நடுகல்.காமில் நான் எழுதிய 'மாதம் ஒரு மலேசிய புத்தகம் - தொடர் 18-ல்' கவிஞர் மகேந்திரன் நவமணியின் 'மழை நின்ற வீதி' ஹைக்கூ தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.

வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....


இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...


என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

மாதம் ஒரு மலேசிய புத்தகம் – தொடர் 18 - Nadukal https://share.google/4h6FdJxoHFJeZlSy6

மே 31, 2026

- புத்தகச்சிறகுகள் - தொடர் 13


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 13' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில்  ரெ.கார்த்திகேசுவின் 'அந்திம காலம்' நாவல் குறித்து எழுதியுள்ளேன்.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..

அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்