Latest Posts
ஜூன் 09, 2026
ஜூன் 08, 2026
வாசிப்பில்
கவிஞரின் முந்தைய கவிதைத் தொகுப்புகளில் 'வேட்டுவம் நூறு' மற்றும் 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' போன்ற இரு தொகுப்புகளை வாசித்துள்ளேன்.
குறிப்பாக 'வேட்டுவம் நூறு' தொகுப்பு குறித்த வாசிப்பு அனுபவத்தை எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன். 'ஊர்க்காரி ஒருத்தியின் காதல்' தொகுப்பு குறித்து எழுதுவதற்கு முன்பாக இந்தத் தொகுப்பு வாசிக்க வந்துவிட்டது.
போதுவாகவே கவிதை வாசிப்பதில் கவிதையை வாசிப்பதும் கவிதையால் வாசிக்கப்படுவதும் ஓர் மையப்புள்ளியில் அமைந்துவிடும்.
எனக்கு அப்படி அமைக்கும் கவிதைளை மௌனன் யாத்ரிகா எப்போதும் கொடுத்துகொண்டே இருக்கின்றார். அதுவே அந்தக் கவிஞரை தவறாது வாசிக்க வைக்கிறது.
ஜூன் 04, 2026
வாசிப்பில்
மரித்திருக்க வேண்டிய உடல்.
இன்னும் என்னுடன்
இழுபட்டுக்கொண்டே
பயணிக்கிறது......
(கவிஞர் தில்லையின் புறத்தலைதல் கவிதையில் இருந்து)
வாசிப்பது ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான தில்லையின் 'விடாய்' கவிதைகள். தாயைத்தின்னி நாவல் மூலம் அதிகம் அறியப்பட்டவர். நானும் அந்த நாவலின் வழிதான் அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் தனித்தனியாக அவரது கவிதைகளை வாசிக்க தொடங்கினேன். இப்போது அவரது கவிதைத் தொகுப்பை வாசிக்கவுள்ளேன். ஒரு கவிஞரின் கவிதைகளைத் தனித்தனியாக வாசிப்பதும் புத்தகமாக வாசிப்பதும் தனித்தனி அனுபவங்களைக் கொடுக்கக்கூடியவை.
புத்தகமாக கவிதைகளை வாசிக்கும் போது அந்தக் கவிதைகளுள் இன்னும் ஆழமாகவும் நேரமெடுத்தும் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த ஆண்டு இவரது தாயைத்தின்னி நாவலைத்தான் முதலில் வாசிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் கவிதைகள் முந்திகொண்டன.
வாசிப்பில் எது நம்மை அழைக்கும் எது எதோடு நம்மை இணைக்கும் என்பதையெல்லாம் யாரால் எப்படி யூகிக்க முடியும்; சொல்லுங்கள்.
ஜூன் 03, 2026
மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம் - 6
ஜுன் மாத நாவல் வாசிப்பில்..
ஜூன் மாத நாவல் வாசிப்பு திட்டத்தில் அசோகமித்திரனின் 'தண்ணீர்'....
கடந்த ஐந்து மாதங்களில் வாசித்த புத்தகங்களை அதற்குரிய இடத்தில் அடுக்கிவிட்டேன். ஜூன் மாதம் முடிந்ததும் அதுவரை வாசித்தவற்றை பகிர்வேன்.
ஜூன் மாதத்திற்கான புத்தகங்களை வழக்கம் போல எனது வாசிப்பு மேஜையில் அடுக்கி கொண்டிருக்கிறேன். எப்போதும் போல நாவல், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொரு வகையிலும் ஒரு புத்தகம் என எடுத்து வைத்தாகிவிட்டது.
வாசிப்பதற்கான நேரத்தையும் அதற்கான மனநிலையும் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும்.
வாசிப்பை திட்டமிடுவது வாழ்க்கையை நடத்த உதவுகிறது.
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
ஜூன் 02, 2026
மாதம் ஒரு மலேசிய புத்தகம் - 18
வாசிப்பதையும் எழுதுவதுவதையும் நாம் மனதார செய்யும் போது, அது பல எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்....
இந்தத் தொடரை எழுத வாய்ப்பு கொடுத்த நடுகல்.காம் இணைய இதழின் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் ஆசிரியர் குழுவிற்கும் என் அன்பும் நன்றியும்...
என் எழுத்துகளை வாசித்தும் அதுபற்றிய உரையாடலையும் தொடங்கும் அனைவருக்கும் எப்போதுக்குமான என் அன்பு.
கட்டுரைகளின் இணைப்பு முதன் மறுமொழியில் உள்ளது. நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்....
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
மாதம் ஒரு மலேசிய புத்தகம் – தொடர் 18 - Nadukal https://share.google/4h6FdJxoHFJeZlSy6
மே 31, 2026
- புத்தகச்சிறகுகள் - தொடர் 13
நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 13' வெளிவந்துள்ளது.
புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.
இந்தத் தொடரில் ரெ.கார்த்திகேசுவின் 'அந்திம காலம்' நாவல் குறித்து எழுதியுள்ளேன்.
எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை