வாசிப்பில்
மரித்திருக்க வேண்டிய உடல்.
இன்னும் என்னுடன்
இழுபட்டுக்கொண்டே
பயணிக்கிறது......
(கவிஞர் தில்லையின் புறத்தலைதல் கவிதையில் இருந்து)
வாசிப்பது ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான தில்லையின் 'விடாய்' கவிதைகள். தாயைத்தின்னி நாவல் மூலம் அதிகம் அறியப்பட்டவர். நானும் அந்த நாவலின் வழிதான் அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் தனித்தனியாக அவரது கவிதைகளை வாசிக்க தொடங்கினேன். இப்போது அவரது கவிதைத் தொகுப்பை வாசிக்கவுள்ளேன். ஒரு கவிஞரின் கவிதைகளைத் தனித்தனியாக வாசிப்பதும் புத்தகமாக வாசிப்பதும் தனித்தனி அனுபவங்களைக் கொடுக்கக்கூடியவை.
புத்தகமாக கவிதைகளை வாசிக்கும் போது அந்தக் கவிதைகளுள் இன்னும் ஆழமாகவும் நேரமெடுத்தும் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த ஆண்டு இவரது தாயைத்தின்னி நாவலைத்தான் முதலில் வாசிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் கவிதைகள் முந்திகொண்டன.
வாசிப்பில் எது நம்மை அழைக்கும் எது எதோடு நம்மை இணைக்கும் என்பதையெல்லாம் யாரால் எப்படி யூகிக்க முடியும்; சொல்லுங்கள்.