பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஆகஸ்ட் 31, 2026

- அடுத்த 30நாட்களின் வாசிப்பு திட்டம் -


- அடுத்த 30 நாட்களின் வாசிப்பு திட்டம் -

மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரை 8 நாவல்களை வாசித்துவிட்டேன். இந்த ஆண்டில் இன்னும் நான்கு நாவல்களை வாசித்துவிட்டால் திட்டம் நிறைவேறிவிடும்.

அதோடு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்கும் 'மாதம் ஒரு சிங்கப்பூர் புத்தகம்' தொடருக்கும் தலா நான்கு நான்கு புத்தகங்களை தனியே எடுத்து அடுக்கி வைத்துவிட்டேன். ஆகா, அடுத்த நான்கு மாதங்களுக்கான 8 புத்தகங்கள் தயாராய் உள்ளன. அதற்கென அவ்வப்போது தலையை உடைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இப்போதெல்லாம் அதிகம் தேர்வு செய்துதான் புத்தகங்களை வாசிக்கின்றேன். அதிலும் தேர்வு செய்யும் நாவல்களில் கூடுதல் கவனமாய் இருக்கிறேன்.

செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரைக்குமான வாசிப்பு பட்டியலை காலையில் இருந்து செம்மைப்படுத்தி கொண்டிருக்கிறேன். பட்டியலில் புத்தகங்களைச் சேர்ப்பதுதான் நம் வேலை. திட்டமிட்டபடி பட்டியல் உள்ளதைதான் வாசித்து முடிக்கின்றோமா என்பது சாத்தியமில்லாத ஒன்று. வாசிப்பது மட்டுமே நம் வேலையாக இருக்கும். எதை வாசிக்கின்றோம் என்பதை அந்தந்த நேரமும் அந்தந்த சூழலும் முடிவெடுக்கும்.

வாசிப்பதற்கான மனநிலையை எப்படியாவது (அதன் சிரமம் எனக்கும் தெரியும் என்பதால்) பழக்கிவிட்டால் வாசிப்பதற்கான புத்தகங்கள் நம் கைக்கு கிடைத்துவிடும்.

தினமும் ஒரு பக்கம் தொடங்கி ஐந்து பக்கங்கள் வரை கட்டாயமாய் வாசிக்க தொடங்கி, வழக்கமாக்கிவிட்டால் அதுவே தன்னை அடுத்தடுத்த தினங்களுக்கும் அடுத்தடுத்த பக்கங்களுக்கும் தன்னை பழக்கமாக்கி கொள்ளும்.

இதை எழுதி முடிக்கும் நேரத்திற்கு முன்னதாக, அடுத்த நான்கு மாதங்களுக்கான புத்தகங்களை என் வாசிப்பு மேஜையில் அடுக்கி வைத்தேன்.

ஒவ்வொரு மூன்றுமாதங்களின் நான் வாசித்த புத்தகங்களையும் அதன் வாசிப்பு அனுபவத்தின் சிறு குறிப்புகளை செப்டம்பர் கடைசியில் எழுதுகிறேன்.

உங்களுக்கு வாசிக்க ஆர்வமாக இருக்கிறது. ஆனால் அதற்கான திட்டமிடலில் சிக்கல் இருக்கிறது என்றால் தொடர்பு கொள்ளுங்கள். கலந்து பேசி திட்டமிடுவோம்.

உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன்.

செப்டம்பரில் வாசிப்பதற்கான மூன்று புத்தகங்களை; உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யுங்கள். 30 நாட்களில் அந்த மூன்று புத்தகங்களில் ஒன்றை நீங்கள் வாசித்து முடித்தாலும் பெரிய சாதனைதான்.

வாசிப்போம்... நேசிப்போம்... வளர்வோம்....

அன்புடன் தயாஜி

ஆகஸ்ட் 28, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 24


நண்பர்களுக்கு வணக்கம்,
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் என 'புத்தகச்சிறகுகள்' தொடர் 24 வெளி வந்துள்ளது.

1991-ம் ஆண்டில் வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' புத்தகம் குறித்த என் வாசிப்பு அனுவம் இந்த வார தொடரோடு முடிகின்றது.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகம் குறித்த வாசிப்பனுபவத்தை எழுத்தை எழுதுகிறேன்.

வாய்ப்புள்ளவர்கள் வாசித்து சொல்லுங்கள். அதோடு நீங்கள் எனக்கு புத்தக பரிந்துரையைச் செய்து உதவலாம்.

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

நெல் விருந்து


நல்ல பிள்ளைகளாய்க் குளித்து முடித்த பின், சின்னதாய்க் கொஞ்சம் நெல் விருந்து. ஒருவன் 'பிக்காச்சு' இன்னொருவன் 'ரைன்போ'.

என்னிடம் செல்லம் கொஞ்சுவதில்  இருவருக்குமே எப்போதும் போட்டிதான். இருவரையும் சம அளவில் கொஞ்சுவது அவ்வளவு எளிதல்ல. கோவித்து கொண்டால் இருவருமே சொல்லி வைத்தார் போல கடித்தும் கொத்தியும் வைப்பார்கள்

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 21, 2026

💙 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'💙

💙 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'💙

ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்.

நடைபெறுகிறது 'முதலாம் உலகத் தொல்காப்பிய மாநாடு 2026'



சனிக்கிழமை காலை மணி 8க்கு  வெகு விமரிசையாகத் தொடக்கம் காண்கின்றது.

இந்தக் கொண்டாட்டத்தில் நமது புத்தகச்சிறகுகள் புத்தகக்கடையின் புத்தக விற்பனையும் நடைபெறுவுள்ளது. உங்களுக்கான புத்தகங்களை நீங்களே தொட்டு பார்த்து திறந்து பார்த்து வாங்கி வாசிக்கலாம்.



உங்களுக்கான புத்தக அறிமுகத்துடன் நானும் அங்கு காத்திருப்பேன் நண்பர்களே.

இன்றே ஈப்போ புறப்படுகின்றேன்.
நாளைய மாநாட்டில் நாம் சந்திக்கலாம்.

அன்புடன்
#தயாஜி
புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை



ஆகஸ்ட் 16, 2026

புத்தகச்சிறகுகள் - தொடர் 23


இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு மலரில், எனது வாராந்திர தொடரான 'புத்தகச்சிறகுகள்' தொடர் 23 வெளிவந்துள்ளது......

1991-ஆம் ஆண்டு வெளிவந்த 'பேரவைக் கதைகள் 6' சிறுகதைத் தொகுப்பு குறித்து எழுதியுள்ளேன்.

கட்டுரையின் இரண்டாம் பகுதி இந்த வாரத் தொடரில் வெளி வந்துள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் வாசித்து சொல்லவும்.

அன்புடன் #தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 15, 2026

- இரு கோடுகள் -


- இரு கோடுகள் - 

குழந்தையின்
கையைப் பிடித்து 
ஒருவர் நடந்தும் ஓடியும்
வருகின்றார்

குழந்தை என்னமோ
தைரியமாகத்தான் வருகிறது

அவர் முகத்தில்தான்
அவ்வளவு பயம்

சின்னதாய் 
ஒரு பெரிய கோடும்
பெரியதாய் 
ஒரு சின்ன கோடும் போல...

#தயாஜி 
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஆகஸ்ட் 13, 2026

- அரு.சு.ஜீவானந்தனைச் சந்தித்தோம் -


எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் அவர்களைச் சந்தித்தோம். என்னுடன் எழுத்தாளர் ஸ்ரீகாந்தனும் வந்திருந்தார். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அவரது வீட்டில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

ஒவ்வொரு சந்திப்பின் பின்னும் அன்றைய தருணத்தை என் மனதில் தொகுத்து கொள்வேன். அதிலிருந்து என் தேடலுக்கான பதிலோ என் பாதைகளுக்கான வழியோ கிடைக்கும் போது அதனை எழுத்துகளாக பதிவு செய்வேன்.

நேற்றைய சந்திப்பையும் அப்படித்தான் மனதில் தொகுத்து கொண்டிருக்கிறேன். அதற்கான காரணம் பிடிபட்டதும் வழக்கம் போல அதனை எழுத்தில் பதிவு செய்கிறேன்.

நான் அதனை எழுத வேண்டியதற்கான காரணத்தையும் அவரது சந்திப்பில் மீண்டும் உணர்ந்து கொண்டேன்.

அன்புடன்
#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்