பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

Latest Posts

ஜூன் 26, 2026

வாசிப்பில்


////சுற்றி எதுவும் மாறாமல் வாழ்ந்து கொண்டிருப்பதென்பது ஒருவனுக்கு மிகுந்த வலியும் தாங்கமுடியாத துயரத்தையும் கொடுப்பதாகும். அது அவனது ஆன்மாவை முழுமையாகக் கொல்லாமல் இருக்கும் போது, அவன் எவ்வளவு காலம் வாழ்கிறானோ அவ்வளவிற்கு நீளும் அந்த வேதனையான சலிப்பு////
- நாவலிலிருந்து..

******************

நண்பரிடம் வேலை கேட்டு பேசியிருந்தேன். இன்று காலை சந்தித்து பேசலாம் கவலைப்பட வேண்டாம் என்றார்.

காலையுணவை விடவும் இப்போதைக்கு வேலை முக்கியம் என்பதால் சொன்ன நேரத்திற்கு முன்னமே சென்று காத்திருந்தேன். 

அலாரம் போல அழைத்து, நான் வந்துவிட்டேன் என்றேன். அவரும் இன்றா பார்ப்பதாக சொன்னோம் என கேட்டுவிட்டு அவரே ஆமாம் ஆமாம், இதோ வந்துவிடுகிறேன் என்றார்.

காலை உணவு விற்று முடிந்து மதிய உணவுகளையே விற்க தொடங்கிவிட்டார்கள். நண்பர் இன்னுமே வந்து கொண்டிருந்தார்.

காலி வயிற்றில் வழக்கம் போல ஒரு இஞ்சி டீயை ஆடர் கொடுத்தேன். எப்போதும் சில புத்தகங்கள் என்னுடன் இருக்கும் அதிலிருந்து ஒன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். 

கடைசிவரை நண்பர் வரவில்லை. வாசித்த புத்தகத்தின் கடைசி பக்கம்தான் வந்தது. அது தந்த கேள்விகளோடும் இன்று கற்ற பாடத்தோடும் வீட்டிற்கு நடக்கலானேன்.

இதனைப் பகிர்வதற்கு காரணம், வராத நண்பருக்காகவோ வேலை தேடுவதற்காகவோ அல்ல. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் ஒருவனால் புத்தகம் வாசிக்க முடிகிறதே என்பதற்காக.

ஆனால் சிலருக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இன்னும் சொல்லப்போனால் கேலியாக கூட இருக்கலாம்தான். நாள் சம்பளக்காரனுக்கும் மாத சம்பளக்காரனுக்கும் சம்பளமாக எதையும் வாங்காதவர்களுக்கும்
இருக்கும் வித்தியாசங்கள் எல்லோருக்குமா தெரிந்துவிடப் போகிறது.

"எப்படி புத்தகங்களை வாசிக்கறீங்க...?" என கேட்கும் நண்பர்களுக்கு "இதோ இப்படித்தான் புத்தகங்களோடு வாழ்ந்து கொண்டும் வாசித்து கொண்டும் இருக்கிறேன் என சொல்வதற்குத்தான் இந்தப் பகிர்வு.

******************
வாசிப்பில் 'இருபத்தாறு ஆண்களும் ஓர் இளம்பெண்ணும்'. எழுத்து மாக்சிம் கார்க்கி. தமிழாக்கம் ஜான்ஸி ராணி. வெளியீடு தமிழ்வெளி.

இதிகாசம் தொடங்கி இன்றுவரை பெண்களைச் சர்வ சாதாரணமாக பணயம் வைத்து விடுகின்றோம் எல்லா பழியையும் பெண்கள் மீதே செலுத்தியும் விடுகின்றோம், என்கிற சிந்தனையோடு இந்த நாவலை வாசித்து முடித்தேன்.

இந்த வாழ்வில் இன்னொருவர் நம்மை பணயம் வைத்து அவர் விருப்பப்படி விளையாடுவதைவிட நம்மை நாமே பணயம் வைத்து விளையாடும் இந்த வாழ்வின் சூதாட்டத்தில் வெற்றியோ தோல்வியோ எந்த நிர்பந்தமும் இல்லாமல் நாமே விளையாடினோம் என்கிற சிறு திருப்தி கிடைத்தாலும் போதும் என்றுதான் தோன்றுகிறது.

குறைந்தபட்சம் நம்மிடம் பணயம் வைக்க நாமாவது இருக்கின்றோம். ஒரு முறை விளையாடிதான் பார்க்கலாமே....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 21, 2026

புத்தகச்சிறகுகள் தொடர் 16


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 16' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் கோ.புண்ணியவான் எழுதிய 'கையறு' நாவலைக் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் நிறைவி பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

அடுத்த வாரம் மேலும் ஒரு மலேசிய புத்தகத்தோடு வருகிறேன்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


வாசிப்பில்...


வாசிப்பில், சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் சிறுகதைகள் 'வெண்மையின் நிறங்கள்'

அன்புடன் #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 19, 2026

வாசிப்பில் ஜூன் 19


வாசிப்பில் பேரவைக் கதைகள் 6; சிறுகதைத் தொகுப்பு.

மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்திய ஆறாவது  தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு.

12 சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு 1991-ஆம் ஆண்டு வெளியீடு கண்டது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 16, 2026

- அழகுநிலாவின் அழகிய புன்னகை -


சிங்கை எழுத்தாளர் அழகுநிலா மலேசியா வந்திருந்தார். அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் 'மில்லேனியல் அவ்வை' என்னும் குறுங்கதை தொகுப்பை வெளியிட்டிருந்தார். வாசிக்க ஆவலாய் இருந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று என அக்காவிடம் சொல்லியிருந்தேன் (அவரை அப்படித்தான் அழைக்கிறேன்).

இன்றைய சந்திப்பில் 'மில்லேனியல் அவ்வை', 'மொழிவழிக் கனவு', 'சொல் ஒளிர் ககனம்' என்ற அவரது மூன்று புத்தகங்களையும் அவரது கையொப்பத்துடன் பெற்றுகொண்டேன். அதோடு அவருக்கு எனது 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல', 'குறுங்கதை எழுதுவது எப்படி', 'பொம்மி' என்ற புத்தகங்களைக் கொடுத்தேன்.



கிடைத்த கொஞ்ச நேரத்திலும் குறுங்கதைகள் குறித்து பேசியிருந்தோம்.

சிங்கை எழுத்தாளர்களில் நான் விரும்பி வாசிக்கும், வாசித்ததை உரிமையாய்ப் பேசும் எழுத்தாளர்களில் அக்கா அழகுநிலாவும் ஒருவர்.

ஏறக்குறைய பத்தாண்டுகள் கடந்த பின் அவரைச் சந்திக்கின்றேன். அப்போது பார்த்தது போலவே இருக்கிறார். அவரது சிரித்த முகத்தின் ஒளியை நானும் எனக்காய்க் கொஞ்சம் எடுத்து கொண்டு விடைபெற்றேன்.



விரைவில் அவரது புத்தகங்கள் குறித்து எழுதுகிறேன். சமீபத்தில் அவரது சிறுகதைத் தொகுப்பான 'சங் கன்ச்சில்' குறித்து நடுகல்.காம் இணைய பக்கத்தில் எழுதியிருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் அந்தக் கட்டுரையையும் வாசித்தால் சிங்கை எழுத்தாளர் அழகுநிலாவின் கதையுல்கத்திற்கான முதற்கட்ட நுழைவாயிலாக அது அமையலாம்...


ஜூன் 14, 2026

புத்தகச்சிறகுகள் தொடர் 15


நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைய மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில், எனது 'புத்தகச்சிறகுகள் - தொடர் 15' வெளிவந்துள்ளது.

புத்தக அறிமுகத்தையும் நான் வாசித்த புத்தகங்கள் குறித்த எனது வாசிப்பனுபவ கட்டுரைகளையும் கொண்ட தொடர் இது.

இந்தத் தொடரில் கோ.புண்ணியவான் எழுதிய 'கையறு' நாவலைக் குறித்து எழுதியுள்ளேன். கட்டுரையின் முதல் பகுதி இந்த வார தொடரில் வெளிவந்துள்ளது.

என் வாசிப்பில் நான் முன்மொழியும் மலேசிய நாவல்களில் இதுவும் ஒன்று.

எனது இந்த வாராந்திர தொடரை வாசித்து உங்கள் கருத்துகளையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் எழுத்துகளே பாலமாக அமையட்டும்.

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த,
ஞாயிறு நண்பன் ஆசிரியர் மற்றும் அவர் குழுவினர்க்கு நன்றி.
வாசிப்போம்.. நேசிப்போம்..வளர்வோம்..
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


ஜூன் 13, 2026

செந்தமிழ் விழா 2026

செந்தமிழ் விழா 2026-க்கு நீதிபதிகளில் ஒருவராக அழைத்திருந்தார்கள். 

இம்முறை இடைநிலைப்பள்ளிக்கான 'இளையோர் கருத்தரங்கத்திற்கு' நானும் என்னுடன் தம்பி நெடுஞ்சுடரும் நீதிபதிகளாக இருந்தோம். 

இன்றைய நாளும் வழக்கம் போல இனிய நாளாக அமைந்தது.

வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த செந்தமிழ் விழா குழுவினருக்கும் ஆசிரியை உஷா அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்