பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 14, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - நிறைவாக

 


நிறைவாக,

    சு.வேணுகோபால் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' வாசித்து முடித்தேன். 13 இலக்கிய ஆளுமைகள் பற்றிய திறனாய்வு அடங்கிய தொகுப்பு.
    ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து முடித்த பின் அது குறித்த வாசிப்பு அனுபவத்தை எழுதி வந்தேன். இப்போது நிறைவாக சிலவற்றை சொல்ல வேண்டியுள்ளது.
    நம் காலத்து மூத்த ஆளுமைகளின் படைப்புகள் பற்றிய இக்கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை.
    அவர்கள் எவ்வாறு தனித்திருக்கிறார்கள் எவ்வாறு ஆளுமைகளாக கருதப்படுகின்றார்கள் என்பதனை கட்டுரையாசிரியர் விளக்கமாக சொல்லியுள்ளார்.
    இதன் வழி, அவர்களின் படைப்புலகை வாசகர்கள் எளிதில் புரிந்துக்கொண்டு தங்களின் வாசகப்பார்வையை விசாலப்படுத்தலாம்.
    அதோடு கதைகளை எப்படியெல்லாம் அணுகலாம். எங்கிருந்து கண்டுகொள்ளலாம் போன்ற நுணுக்கங்களை இக்கட்டுரைகள் வழி அறிந்துக் கொள்ளலாம்
மீள்வாசிப்பு செய்யவும் புதிய வாசகர்கள் கதைகளைத் தேடி வாசிக்கவும் இந்த திறனாய்வு பெரிதும் உதவும் என நம்புகின்றேன்.
    இப்படியான புத்தகத்தை கொடுத்தமைக்கு ஐயா சு.வேணுகோபால் அவர்களுக்கும் தியாகு நூலகத்திற்கும் நன்றியும் அன்பும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்