பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - மூன்றாவது கட்டுரையை முன்வைத்து

 (மூன்றாவது கட்டுரையை முன்வைத்து...)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *மூன்றாவது கட்டுரையாக 'ந.பிச்சமூர்த்தியின் கலைக் கண்ணோட்டம்' என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.* முதல் இரண்டு கட்டுரை போல் அல்லாமல் குறைந்த பக்கங்களே கொண்ட கட்டுரை. இக்கட்டுரை 2016-ம் ஆண்டு ஏப்ரல், தாமரை இதழில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னமே ந.பிச்சமூர்த்தியின் சில கதைகளை வாசித்துள்ளேன். ஆனால் அவர் கவிதைகள் மூலமே என் மனதிற்கு நெருக்கமானார். அவரின் கவிதைகள் குறித்து சுந்தர ராமசாமி அவர்கள் ஒரு புத்தகம் எழுதியிருப்பார். அந்த புத்தகம் எனக்கு கவிதைகள் குறித்த பாடபுத்தகம் போல அமைந்தது. பல நண்பகளுக்கு அந்த புத்தகத்தை பரிந்துரை செய்துள்ளேன்.
இப்போது இந்த கட்டுரைக்கு வருவோம்.
    'இறுகிய கருத்துகளைத் தன் கதைகளின் வழி உரைப்பதற்கென்றோ பெண்களின் ஒடுக்குமுறைகளுக்கு விடிவைத் தரும் நோக்கத்திலோ அவர் எழுதவில்லை. வாழ்க்கையை கவனிக்கிறார். அதன் கதியில் மனித மனங்களில் ஏற்படும் மாற்றங்களையும் மௌனங்களையும் கண்டு சொல்ல விழைகிறார்' என ந.பிச்சமூர்த்தி குறித்து கட்டுரையாளர் சொல்கிறார்.
    முதல் இரண்டு கட்டுரைகள் போல கணமான விடயங்களை இக்கட்டுரை சொல்லவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் அது ஒரு குறையாக தெரியாதபடிக்கு தன் வாசிப்பின் மூலம் வாசகர்களுக்கு ந.பிச்சமூர்த்தி குறித்து சொல்கிறார்.
    127 சிறுகதைகளை எழுதியிருந்த போதும் அவர் உட்சபட்சமாக அடைந்த வெற்றியாக தாய், பதினெட்டாம் பெருக்கு, விதைநெல் போன்ற கதைகளை குறிப்பிடுகின்றார். இது தவிர வாசிக்கவேண்டிய பிற கதைகள் குறித்தும் எழுதியுள்ளார்.
இப்படியாக விமர்சனத்தை ந.பிச்சமூர்த்தியின் மீது வைத்தாலும், அவர் சிறுகதை என்ற வடிவத்தைச் சிறப்பாகக் கையாண்டு தமிழ்ச் சிறுகதைக்குப் பாதை அமைத்திருக்கிறார் என்கிறார்.
    இக்கட்டுரையை வாசித்து முடிக்கையில் இப்போது எழுதிக்கொண்டிருப்பவர்கள் தங்கள் படைப்புகள் மீது சுய பரிசோதனை வைக்க வேண்டிய அவசியத்தை உணர முடிகின்றது. அதன் அவசியத்தை கட்டுரை முழுக்கவும் ஆசிரியர் மறைமுகமாக சொல்வதாகவே மனதில் படுகின்றது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்