பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 14, 2021

'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - பனிரெண்டாவது கட்டுரையை முன்வைத்து

 

பனிரெண்டாவது கட்டுரையை முன்வைத்து
    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    *பனிரெண்டாவது கட்டுரையாக 'ஆ.மாதவனின் : பாதையற்ற பயணம்
என்கிற கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர்.*
    மற்ற கட்டுரைகளை வாசிக்கையில் இருந்த மனநிலை இக்கட்டுரையை வாசிக்கையில் இருக்கவில்லை. ஆ.மாதவனின் ஒரு படைப்பைக் கூட வாசிக்காத குற்றவுணர்ச்சியே மேலோங்கியது.
    நண்பர்களுடன் பேசும் சமயங்களில் ஆ.மாதவன் பற்றிய பேச்சு எழுந்திருக்கிறது. ஆனால் ஏனோ சிரத்தை கொண்டி அவரது படைப்புகளை படிக்கவில்லை.
அப்படியான மனநிலை காரணமாக எத்தனை முக்கியமான படைப்புகளைத் தவறவிட்டுள்ளேன் என்பதை இக்கட்டுரை காட்டியது.
    ஆ.மாதவனின் கதைகளின் இருக்கும் விரிந்த பரப்புகள் பற்றி ஆசிரியர் கூறுகிறார். அதோடு 'எப்படி அடைத்தாலும் கூட்டைவிட்டுத் தப்பித்து விடுகிறது மனம். இச்சை தடுத்துவிட முடியாத மானிட இயல்பாக இருப்பதைக் காண்கிறார். நாற்புறம் நகரும் நண்டுக்கால் புரவியின் நடனங்கள்தான் காமம் என்பது ஆ.மாதவன் கண்ட விடை' என்கிறார் கட்டுரையாசிரியர்.
    'புதுமைப்பித்தனுக்கு அடுத்தப்படியாக புறஉலக மனிதர்களை அதிகம் எழுதியவர்களில் ஆ.மாதவனையும் சொல்லலாம்' என்கிறார்.
    மனித மனங்களையும் அதன் பலவீனங்களையும் படைப்புகளில் சொல்வதில் ஆ.மாதவன் தனியாக தெரிகின்றார்.
    அவரின் பல கதைகளைப் பற்றி நமக்கு சொல்வதின் வழி, தேடி வாசிக்கும் ஆர்வத்தை கொடுக்கின்றார் கட்டுரையாசிரியர்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்