பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

ஆறாவது விரல்....(இன்னும் முளைக்கும்)


இப்போதெல்லாம்
என்னைப் பின்தொடரும்;
நிழலை...
நான்....
அழிக்கவிரும்புகின்றேன்...!

பழைய முகங்கள்,
மீண்டும்;
இன்னொரு ஜனனம்....
எடுக்க வேண்டாம்......

இருக்கின்ற முகங்களே....
உருப்படியான ;
அடையாளம் தொலைத்தப் போது....?


,உத்தமானாய்
நான்;
இருந்திருந்தால்...!
வந்த பாதையைக் காட்டியிருப்பேன்.....!!

ம்......!

எனக்கு இனி...
போகும் இலக்கு மட்டும் தெரிந்தால் போதும்...


பழையத் தழும்புகளுக்கு
மீண்டும்வலி கொடுக்க...
தயாராகின்றது

"ஒரு கூட்டம்"

இவன்;முளைக்கமாட்டான்,
என்றோரே......!!
கேளுங்கள்....

நான் தழைத்தேக் காட்டுகின்றேன்.......

குட்டுபட்டவன் குணிந்தேதான்
இருக்கவேண்டுமா;
என்ன....?

'பூ' தோட்டம்
என
கை
நீட்டாதீர்....
இது
'தீ' தோட்டம்.....
எரித்திடுவோம்
கண்
அசைவால்.....!

இது ஆள்காட்டி விரல்;
அல்ல....

ஆறாவது விரல்...
இன்னும் முளைக்கும்......


.................தயாஜி வெள்ளைரோஜா.................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்