பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 04, 2009

திகைப்பு

என்றும் இல்லாமல்,
அன்று மழைபெய்தது.....

வழிநெடுகிலும்
சமிக்ஞை விளக்கு
வழிவிட்டது......

வீட்டிற்கு வந்ததும்
சாப்பாடு,

தயாராய் இருந்தது.....

அப்பா என்னை
அதிகக் கேள்விகள்
கேட்கவில்லை.......

அண்ணி கூட,
சிரித்தார்..

உறவினர்கள் சிலர் வந்தார்கள்....
அழைப்பிதல் கொடுத்து,
என்னையும்

"வா'
என அழைத்தனர்....!

மேலதிகாரி...
என் கருத்துக்கு
செவிசாய்த்தார்...!

எல்லாம் வழக்கத்துக்கு...
மாறாக நடக்க....

...........இன்றளவும்.........

ஒன்று மட்டும் நேராய்
நடந்தது....?

அவள் கடக்கின்றாள்
நான் திகைக்கின்றேன்....




........................தயாஜி வெள்ளைரோஜா...................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்