பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 28, 2020

நான் ஒரு பென்சில்


     நான் மிகவும் அழகாக இருப்பேன். நான் ஜப்பானின் பிறந்தேன். என்னுடன் பல வண்ணங்களில் நண்பர்கள் பிறந்தார்கள். நான் மஞ்சள் வண்ணமாக இருந்தேன். நாங்கள் பிறந்த சில நாட்களிலேயே எங்களை தனியாக பெட்டியில் அடைத்தார்கள். இருட்டாக இருந்தது. 

     கண் விழித்துப் பார்த்தேன். என்னைச் சுற்றியும் பலர் இருந்தார்கள். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அங்கிருந்து ஒருவர் என்னை வாங்கிக் கொண்டார்.

     என் மீது பல வண்ணக் காகிதங்கள் கொண்டு மடித்தார். அன்று யாருக்கோ பிறந்தநாள். நான் பிறந்தநாள் பரிசாக சென்றதில் மகிழ்ந்தேன். 

    அந்த பெண் என்னை பார்த்து மகிழ்ந்தாள். அப்படி ஒரு அழகியை நானும் பார்க்கவில்லை. எப்போதும் என்னை அவள் கையிலேயே வைத்திருந்தாள். அவளது ஸ்பரிசம் என்னிடம் பல மாற்றங்களைச் செய்தது. ஒரு நாள் என் இதயம் துடிப்பதை நானே கேட்டேன்.

     நான் மனம் விட்டு பேசுவதற்கு ஒரு நாள் கிடைத்தது. தனிமையில் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள்.  இதுதான் சமயம் என நான் பேச ஆரம்பித்தேன். 

     அவளுக்கு கேட்டது. ஆனால் நான் பேசியதை அவள் கவனிக்கவில்லை. சத்தமாக கூப்பிட்டேன். அப்போதும் அவளுக்கு கேட்டது. ஆனால் பின்னால் யாரையோ தேடினாள். சட்டென யாரோ அவள் வாயை மூடினார்கள். அவளை அப்படியே  ஒரு பெரிய உருவம் தூக்கியது.

     அவள் துடித்தாள். அந்த உருவம் அவளை இறுக்கியது. என்னால் அவள் கதறித்துடிப்பதை கேட்க முடியவில்லை. ஒரு குதி குதித்தேன். நேராக சென்று அந்த உருவத்தின் கழுத்தில் நாலு குத்து குத்தினேன்.  

      அவன் பிடியை விட்டான். அவள் கீழே குதித்தாள். அவன் அப்படியே விழுந்தான். அவள் பயந்து ஓடிவிட்டாள். திரும்பவேயில்லை. நான் இன்றுவரை அவளுக்காக காத்திருக்கிறேன்.

*சிறார் மறுவாழ்வு மையத்தில் நடந்த கதை எழுதும் போட்டியில் தோல்வி கண்ட கதை.


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்