பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 05, 2009

விழிமொழியுடையாள் (எனக்கானவள்..!)




"உன்னை நான் காதலிக்கின்றேன்"

வெறும் மூன்று வார்த்தைகள்தான்;
வெளியில் இருந்துப் பார்க்கும்வரை.......

உன்னைப் பார்த்தவுடன் இந்த வார்த்தையின் விலாசம் தொலைந்துவிடுகின்றது.....!

கண்ணாடி முன்னாடிநின்றும்;
நண்பர்கள் பின்னாடிநின்றும்;

தினம்............
தினம்............

நான் பழகும் 'வக்கியம்';
இன்னும் உன்னை சேரவரவில்லை
அதற்கான 'பாக்கியம்'

சொல்லியேவிடுகின்றேன்..!

முடிவுடன் வந்தால்

வேர்க்கின்றது...வெடவெடக்கின்றது....
எனக்கல்லைஅந்த வார்த்தைக்கு....

உனக்கும் தெரியும்..!
ஆனால்;
என்னை சொல்லவிடுவதில்லை..
உன் விழிகள்

உன் ' விழியின் ' முன்
என் ' மொழியின் ' பலம் எடுபடவில்லை....

எப்படியும் சொல்லிடுவேன்....;

அதற்காகத்தான்,
பழகத் தொடங்கியுள்ளேன்..

வாய்மொழி பேச அல்ல..
உன் போல்

" விழிமொழி " பேச

காத்திரு......

...............தயாஜி வெள்ளைரோஜா...............

Related Posts:

  • - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - "யுத்தம் முடிந்தது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.. பயப்படவேண்டாம்.... நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக வந்துள்ளோம்" ஒலிபெருக்கியில் சத… Read More
  • - இயந்திர மனிதர்கள் - இன்று யுத்தம் முடிந்ததாக அறிவித்தார்கள். யார் அறிவித்தார்கள், யாரிடம் அறிவித்தார்கள் என தெரியவில்லை. அன்று யுத்தகம் தொடங்கியது என அறிவித்த… Read More
  • - பாப்பா - ஒரு வாரமாக வெளியே செல்ல முடியாதச் சூழல். யார் தலை தெரிந்தாலும் துப்பாக்கி சூட்டுக்கு இரையாகிடுவார்கள். பல கட்டிடங்களின் சுவர்கள் துப்பாக்க… Read More
  • - தப்பித்தலும் காப்பாற்றுதலும் - இப்போதுதான் சத்தம் அடங்கியது. காலையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள், குண்டு வெடிப்பு சத்தங்கள், விமானங்களின் சத்தமென எங்களை பீத… Read More
  • - இரத்தக்கறை - பல தடவைகள். பல முயற்சிகள். ஒன்றும் சரிவரவில்லை. பலரின் ஆலோசனைகள். அறிவியல் விளக்கங்கள். எதுவும் உதவவில்லை. நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. தயா… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்