பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 01, 2026

- காற்றிலாடும் இறகின் திசை -


பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சமீபத்தில் 'காற்றிலாடும் இறகின் திசை' என்னும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார்கள்.

பேராக் மாநில மூத்த எழுத்தாளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரையிலான பதிமூன்று பேரின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.

பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர், எழுத்தாளர் நண்பர் சிவாலெனின் அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகம் கேட்டிருந்தேன்.

உடனே அந்தப் புத்தகத்தை அனுப்பியதோடு அவரது புத்தகங்களான 'மலாயா கணபதி', 'இரவைக் கிழிக்கும் ஓநாய்கள்', 'விரல் நுனியில்' போன்ற புத்தகங்களையும் எனக்கு அனுப்பினார்.

"சங்கத்தின் புத்தகத்திற்கு மட்டும் பணம் கொடுங்க நண்பா... என் புத்தகங்கள் உங்களுக்கான பரிசுகள்.... தொடர்ந்து பல புத்தகங்களை வாசித்து எழுதி அறிமுகம் செய்றீங்க... அதெல்லாம் ரொம்ப முக்கியமான காரியம்... தொடர்ந்து எழுதுங்க..."
என்றார் அன்பாகவும் உரிமையாகவும்.

தோழர் சிவாலெனின் அவர்களுக்கும் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் எனது அன்பும் நன்றியும்.

அவரின் தலைமையில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பல இலக்கிய முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அவருக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை இதன் வழி சொல்லிக்கொள்கிறேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்