பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 07, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 7/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 7/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
****************************

ரொம்பவும் சுவாரஸ்யமானவர்கள் என்றால் நண்பர்களைச் சொல்லலாம். அவர் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் ஏது செய்வார்கள் என்று அவர்களாலேயே கணிக்க முடியாது. ஒரே ஒரு நண்பனை வைத்து சிரமப்படும் நபர்களும் இருக்கிறார்கள். அதிகமான நண்பர்களை வைத்துகொண்டு சிரமமே இல்லாமல் வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.

'உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்' என்பதை வெறுமனே யாரும் சொல்லவில்லைம். அதற்கும் ஆயிரம் மர்மங்கள் அடங்கியிருக்கின்றன. நம்மை அதிகம் காப்பாற்றுவதும் நட்பியான் நம்மை அதிகம் காயப்படுத்துவதும் நட்புதான்.

நட்பு என்ற பெயரில் எந்த ஒழுக்கக்கேடுகளை செய்யவும் துணிகிறார்கள். ஒருபோதும் நட்பிற்கு 'கெட்ட பெயர்' வரகூடாது என காக்கின்றவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வளவு சொன்ன பிறகு இன்றைய கதைக்கரு என்னவென்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்.


இன்றைய சிறுகதை, பெருமாள்முருகனின் 'பந்தயம்'.

முருகேசும் வீரேஷும் நண்பர்கள். பலமுறை கொடுக்கல் வாங்கள் எல்லாம் செய்தவர்கள். திடீரென்று ஒருநாள், விரேஷ் அழைத்து தனக்கு அவசரமாக பத்தாயிரம் ருபாய் தேவைப்படுவதாக சொல்லி உடனே பணம் போட சொல்கிறான். எந்தக் காரணத்தை அவன் சொல்லவில்லை.

முருகேசுவிற்கு ஒரே குழப்பம். திடீரென எதற்கு இவ்வளவு பணம் கேட்கிறான். வழக்கமாக நூறு இருநூறுதான் கேட்பாம். அதுவும் வீட்டிலிருந்து பணம் போட்டதும், திருப்பி கொடுத்துவிடுவான். இப்படி அவசரமாக கேட்க என்ன காரணம். ஏதும் சிக்கலில் மாட்டிகொண்டானா, தவறான காரியத்திற்கு கேட்கிறானா, சூதாட்டத்தில் சிக்கி கொண்டானா என பலவாறு குழம்புகிறான் முருகேசு. விரோஷின் அப்பாவிடம் இதுபற்றி சொல்லலாமா, அப்படி சொன்னால் அவன் சங்கடப்படுவானோ, அல்லது அவனிடமே காரணம் கேட்டுவிடலாம், பணம் இல்லை என்று சொல்லிவிடலான் என மேலும் மேலும் தன்னை குழப்பிக்கொள்கிறான்.

குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தாமல், நண்பன் கேட்ட பணத்தை கொடுக்க முடிவு செய்கிறான். திருப்பி கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி. அந்தப் பணத்தை திரும்பி கொடுக்கும் வரையும் அவனும் பணம் கேட்க மாட்டான். இனியும் கொடுக்கலமா வேண்டாமா என யோசித்தால் மனம் இங்கும் அங்கும் தாவிக்கொண்டிருக்கும். அது நட்பையும் கெடுத்துவிடக்கூடும்
என முடிவெடுத்து அவன் கேட்ட பணத்தை கொடுக்கிறான்.

நண்பனுக்கு பணம் அனுப்பிய சில நிமிடங்களில் தன் வங்கிக்கே பணம் வந்துவிட்டதாக கைப்பேசியில் குறுஞ்செய்தி வரவும், குமரேசுவிற்கு ஒன்றும் புரவில்லை. ஒருவேளை பணம் போகவில்லையோ என நினைத்து நண்பனை அழைக்கின்றான்.

அப்போதுதான் அந்தப் பந்தயத்தைப் பற்றி நண்பன் சொல்கிறான். தனது பயிற்சி மையத்தில் உள்ள ஒருவனோடு நட்பு குறித்த பேச்சு எழுந்து அது விவாதமாக மாறி பந்தத்திற்கு இழுத்துவிட்டதாம். நண்பனிடம் காரணம் சொல்லாமல் பத்தாயிரம் ருபாய் கேட்கவேண்டும். நண்பன் கொடுக்கிறானா இல்லையா என்பதுதான் பந்தயம். முருகேசு கொடுத்த பணத்தால் பந்தயத்தில் நண்பன் வென்றுவிட்டான். அதுதான் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டேன் என்பதோடு பந்தயத்தில் கிடைத்த ஐநூறு ருபாயையும் சேர்த்து அனுப்பியுள்ளதான சொல்ல கதை முடிகிறது.

இது சாதாரண கதை போலத்தானே இருக்கிறது. நண்பன் ஒருவனிடம் பந்தயம் கட்டுகிறான். ஒரு சோதனையைச் செய்கிறான். கடைசியில் பந்தயத்தில் நண்பன் ஜெயிக்கிறான் அவ்வளவுதானே.

இல்லை இந்தக் கதையில் 'அந்த அவ்வளவு' இல்லை. இன்னொரு அளவு இருக்கிறது.

இந்தப் பந்தயம் வீரேஷ் தன் நண்பன் முருகேசுவிற்கு வைத்தது அல்ல. முருகேசு தன் நண்பன் வீரேஷ் மீதும் அவனது நட்பின் மீதும் தனக்கு இருக்கும் நட்பு எப்படிபட்டது எனக்கு தனக்குத்தானே நிரூபிக்க நடந்த பந்தயம்.

இதில் வென்றது வீரேஷ்தான் என்றாலும் உண்மையில் வென்றது முருகேசுதான். அதனால்தான் என்னவோ பந்தயத்தில் வென்ற பணம் முருகேசுவிற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்