பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 29, 2020

ஸ்படிக கிரீடக்காரி



கனத்த மழையின் நாளொன்றில்
நினைவிருக்கிறதா
நாம் சந்தித்துக்கொண்டோம்
அது சந்திப்புதானா என முழுமையாய்
புரியவில்லை

வேறெந்த பெயர் வைக்கவும் தெரியவில்லை
தைரியமுமில்லை
உன்னிடம் மட்டும் ஒரு குடை
மழையில் தன்னை நனைந்துக் கொண்டிருந்தது

பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாய்
உனக்கு
ஸ்படிக மழைத்துளிகளின் கிரீடம்
கொடுக்கப்பட்டிருந்தது
வைரம்போல அவை
மினுமினுத்தன

மெல்ல நீ நடந்து வந்தாய்
மழையை மதிக்காது நான்
ஏனோ உன்னைத் தொடர்ந்தேன்
எத்தனை முறை பார்த்தாலும்
அத்தனை முறையும்
நீ பிரமிப்பைக் கொடுக்கத் தவறுவதில்லை

அன்றும் அப்படித்தான்
அருகில் நான் வந்ததும்
குடையை மடக்கி வீசினாய்
இப்போது இருவரும் நனைவோம் என்றெண்ணினேன்

நீயோ
உன் வெண்சிறகை விரித்து
என்னை இழுத்து அணைத்து
மழையில் இருந்து காத்தாய்
மழைத்துளி படர்ந்த
உன் வெண்சிறகின் வாசத்தினை
உன் நினைவு தோன்றும்பொதெல்லாம்
முகர்ந்து சிலிர்க்கிறேன்

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்