பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 11, 2020

துயர் போக்குபவள்


என் தேவதை நீ 
என்னால் துயர்படுகிறாய்
என் அதிசயம் நீ
எனனால் மனம் கணக்கிறாய்
என் இளவரசி நீ
என் பொருட்டு அடையாளம் 
மறைக்கிறாய்

என் வாழ்நாளுக்கான வரம் 
நீ
ஒரு தரமும் அப்படி ஆகிடாத
உன் வாழ்நாள் சாபம் 
நானா

புரியவில்லை அன்பே
நினைத்துப்பார்ப்பது எல்லாமே
எளியதொரு வாழ்வையைத்தானே

எளிதிலும் எளிய  வாழ்க்கை
மிக மிக எளிய வாழ்க்கை
நான்சுவர் மேலொரு கூரையும்
நாளுக்கு மூன்று முறை உணவும்
நாட்களுக்கான ஆடைகளும்தான்

அதுவும் கூடாதென்றால்
நான்சுரில் ஒன்றை இடித்துக் கொள்கிறேன்
மூன்சுவர் போதுமே
கூரையில் கூட ஓட்டைகளில் நட்சத்திரம் 
பார்த்துக்கொள்கிறேன்
மூவேளை உணவில் எனக்கு
ஒருவேளையே போதும்

ஆனால் ஒருவேளையும் 
நீ 
இதில் பங்கெடுக்கக்கூடாது 
அன்பே
மாளிகையில் வாழவேண்டியள் 
நீ
வான் தொடும் கூரைகளுக்கு 
சொந்தக்காரி 
நீ
ஆறுவேளையும் அறுசுவை 
உணவுகள் வாய்க்கப்படவேண்டியவள் 
நீ

சுமக்கும் சுமைகள் போதாதென்று
நினைவுகளை அழித்தவனின் 
சுமையையும்
இன்று உன்மீது சுமத்திவிட்ட
பாவி 
நான்

நீ நேசிக்கும் இவன் மீது
ஏன் இவர்கள் அச்சம் கொள்கிறார்கள்
என் வாழ்வின் ஏன் 
இப்படியொரு துயர் நாடகத்தை 
அரங்கேற்றிவிட்டார்கள்

இயல்பாய் இருப்பது என்ன 
அத்தனை குற்றமா
எதார்த்தமாய் இருப்பது என்ன 
அத்தனை குற்றமா

நீயாவது சொல் 
அன்பே

அப்படியென்ன இவர்களுக்கு 
பயம் காட்டிவிட்டேன்
நீ சொல்லிவிட்டதால்
எத்தனையோ ரகசியங்களை
உள்ளுக்குள் புதைத்துவிட்டவனை
மண்ணுக்குள் புதைக்க 
ஏன் நினைக்கிறார்கள்

உழைப்பையும் அன்பையும் தவிர
என்னால் ஏதும் கொடுக்க 
முடியாதபோது
அத்தனையையும் மொத்தமாக 
பெற்றுக்கொண்ட பின்
இந்த சக்கையை  ஏன் 
சாகடிக்கப் பார்க்கிறார்கள்

நீ சொல்வது எப்போதும் 
சரியாகவே இருக்கிறது 
அன்பே


நேரமெடுத்து யோசிக்கையில்

நான் பேசிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் பிரசுரித்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் உண்மை முகத்தை ஊருக்குக் 
காட்டிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்
நான் புகாரளித்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்

மொத்தத்தில் 
நான் வளர்ந்துவிடுவேன் என அச்சப்படுகிறார்கள்

வளர்தல் அத்தனை ஆபத்தா சொல்

ஒருவேளை அவர்கள் கண்டுகொண்டிருக்கலாம்
இழப்புகளை சந்தித்தவனிடம் 
யார் குறித்தும் அச்சமிருக்காது

அன்பே
என் நம்பிக்கைப்போல
உனக்காகத் தொடங்கிய இந்த
வரிகள் கூட
எங்கெங்கோ சென்றுவிட்டன

எல்லாவற்றுக்கும் மேலாக 
நீயும் வருந்துகிறாய் என்பதில்
என் சாத்தானில் கொஞ்சம் 
கொம்புகள் முளைவிடும்
அடையாளக்குறி தென்படுகிறது

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்