பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 28, 2012

அதே மோதிரம் 6 - மர்மத் தொடர்




பாகம் 6

    நான் ஆனந்தன். முழு பெயர் நித்தி ஆனந்தன். வழக்கமான ஆளாகத்தான் நானும் இருந்தேன். இருந்தேன் என்பது இறந்தகாலம்தானே. ஆனால் அந்த ஒவ்வொரு மாற்றமும் என் நினைவில் உயிராய்.
    ஆங்கில படங்களில் மின்னல் பட்டு சக்தி பெறுவது, சிலந்தி கடித்து சக்தி பெறுவது, மோதிரம் அணிந்து சக்தி பெறவது போல இப்படித்தான் இதுதான் இதலால்தான் என என் சக்தியை நான் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த சக்தி எனக்குள் இருப்பது அல்ல; என்னுடன் இருப்பது.
     உள் இருப்பது;உடனிருப்பது. எத்தனை வித்தியாசங்கள் கொண்ட வார்த்தை இவை. கொஞ்ச காலமாகத்தான் மணியை எனக்கு தெரியும். தெரியும் என்பதைவிட, தெரிந்து கொள்ளும் படி அமைந்தது. மணியும் மற்ற யாரும் வேண்டுமானால், என்னை மர்ம மனிதனாக நினைத்துக் கொள்ளலாம். இரவில் மட்டுமே என்னை பார்க்கலாம். நான் கவனிக்கப்படாதவன் எனலாம். ஆனால் நான் தினமும் மணியை கவனித்துக் கொண்டுத்தான் இருக்கிறேன். மணியின் விரலுக்கு அந்த மோதிரம் வந்தது முதல், மஞ்சல் முகம், கழிவறையில் கழட்டப்பட்ட மோதிரம் , ஆளில்லாத போதும் பின்னால் நின்ற யாரோ, யாதவி என்ற கையொப்பம், மின் தூக்கியின்  மேல் பார்த்த முதலாளியை மீண்டும் கீழே பார்ப்பது, அவ்வளவு ஏன் இன்று மோதிரத்தில்   தெரிந்த பெண் உருவம் வரை. அது யார் ? யாராய் இருக்கும்
      இன்னும் சொல்லப் போனால், என் வேலையே அதுதான் அல்லது இப்படியும் சொல்லலாம் வேலை முடியும் வரை அல்லது இப்படியும் சொல்லலாம் மணியின் கதை முடியும் வரை.
     குழப்பம் கொடுக்கலாம், விளக்கம் கேட்கலாம். ஆனால் சில முடிச்சுகள் சிலரால் மட்டுமே அவிழ்க்க முடியும். அல்லது சிலரால் மட்டுமே அழிக்க முடியும். மணியின் கதையில், அவன் அணிந்திருக்கும் ‘அதே மோதிரம் ’ குறித்த மர்மங்கள் அவிழ்க்கப்படுமா இல்லை அழிக்கப்படுமா என்பதுதான் என் கேள்வி.
    இதில் நான் கூட இல்லாமல் போகலாம். அல்லது நான் மட்டுமே இருந்தும் தொலைக்கலாம்.
    இதன் மூலத்தை உங்களோடு நான் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு, மணிக்காக நான் வந்ததற்கு முன் , என் சராசரி வாழ்க்கை தலைகீழானது !
    அப்போது என் வயது நினைவில் இல்லை. வயது சொல்லி, மரியாதையையா வாங்க போகிறோம். சொல்லப்போவது அனுபவத்தை வயது எதுக்கு. அப்போது; அடிக்கடி எங்கள் வீட்டின் பக்கத்தில் குழந்தையின் அழுகுரல் கேடக ஆரம்பித்தது. இரவு வேலை செய்ய வேண்டிய வாரம் என்பதால் பெரிதாக எனக்கு படவில்லை. ஆனால் அது பெரிதான ஒன்று என்பது எனக்கு மறுவாரம்தான் பட்டது. என்னை பாடாய் படுத்தியது. இரவு வேலை முடிந்த வாரம். காலை வேலை ஆரம்பிக்கும் போது , முதல் நாள் விடுமுறை கிடைக்கும். அந்த விடுமுறை முழுக்க தூங்கியே கழித்துப் பழகியவன் நான். வேறு வழியெதுவும் இருக்கவுமில்லை.
    எங்கேயோ குழந்தையின் அழுகுரல். கொஞ்சம் கொஞ்சமாக காதில் விழ ஆரம்பித்தது. அப்போது நான் என் சிறகை விரித்து வீட்டின் கூரைமேல் உட்கார்ந்திருந்தேன். எங்கோ குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடன் என் காதலியும் வந்திருந்தாள். இன்று கொஞ்சம் தாமதம். என் கோவத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் முயற்சியில் அவள் கொஞ்சத் தொடங்கியிருந்தாள். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அழுகுரல் கேட்கிறது இதற்காகவே அவள் தாமதமாக வருவாளா என ஏங்கியிருக்கிறேன்.
    இப்போது அந்த குழந்தையின் அழுகுரல் என் காதலிக்கும் கேட்கிறது என நினைக்கிறேன். கொஞ்சல் கொஞ்சம் கொஞ்சமாம அதன் உச்சத்தை தொடும் வரை, உச்சம் என்பது முத்தம்தான். ஆனால் உங்களைப்போல  உதடுக்கு கொடுக்கும் வேலை அல்ல. காதலியை அந்த அழுகுரல் ஏதோ செய்திருக்கவேண்டும், எனக்கும்  எரிச்சலாக இருந்தது. என் சிறகும் அவள் சிறகும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும். அவ்வளவுதான என நினைக்காதீர்கள். எங்கள் இறகுகள் தொட்டுக் கொள்ளும் போது உதிரும் இறகுகள்தான் எத்தனை அழகு தெரியுமா... அப்போதே புதிதாக இறகுகள் முளைக்கும்.   
     என் இறகும் அவள் இறகும் ஒன்றையொன்று உரச இன்னும் சில வினாடிகளே இருக்கின்றன. இறகுகள் உதிரப் போகின்றன, புதிய இறகுகள் முளைக்கப் போகின்றன. மகிழ்ச்சி. உச்சம். ஆனால் அந்த வினாடிகள்தான் எத்தை கொடுமையானது தெரியுமா. இதுவரை இப்படி நடந்ததேயில்லை. இறகும் இறகும் உரச எத்தனிக்கும் அந்த கடைசி ஒரே நொடியில் அந்த குழந்தையின் அழுகுரல் காதில் அருகில் கேட்டது. கேட்டதை விடை காதை கிழித்தது என்னாலாம். காதா முக்கியம் . இப்போதைக்கு உரசவேண்டிய இறகுகள்தானே முக்கியம். நாசமாய் போன குழந்தையின் அழுகுரல், காதலையின் காதாலை கெடுத்தது.
     “போங்க போய் அது என்னன்னு பாருங்க முதல்ல” என அவள் சொல்லி சிறகை மடக்கிவிட்டாள். விரிந்த என் சிறகின் கதையை நினைத்துப் பாருங்கள். எத்தனை பாவம் நான். காதல் உச்சத்தில் இருக்கும் போது, இப்படி ஒரு கல்லை போட்ட அந்த குழந்தையை, இல்லையில்லை அந்த குட்டிச்சாத்தானை மிதிக்கவே கோவத்தின் எழுந்தேன். கூரையின் இருப்பதையும் மறந்து, நடக்க ஆரம்பித்துவிட்டேன். அப்படியே கால் இடறி தரையை நோக்கி.............
      நல்லவேலை தலையணையை வைத்திருந்தேன். பொத்தென்று வழக்கம் போலவே விழுந்துவிட்டேன். வழக்கமான கனவு என்பதால் இப்படி பழகிவிட்டிருந்தேன்.
     எப்போதும் இறகும் இறகும் உரசும் போது, உதிரும் இறகும் , முளைக்கும் இறகும் போதுதான் காதலியின் மடியில் படுக்க நினைத்து கட்டிலில் இருந்து கிழே விடுவேன் ஆனால் இப்போது அந்த அழுகுரல் விழ வைத்தது. தெரியுமா கனவில் கேட்ட அழுகுரல்ம் இப்போதும் கேடிகிறது, ஒருவேளை தூக்கத்தின் கேட்ட அழுகுரல்தான் என் கனவில் கலந்திருக்குமோ.?
    எழுந்தேன். ஒரு முறை அழுகுரலைக் கேட்டேன். ஒரு திசையில் இருந்துதான் கேட்டுக்கொன்றிருந்தது. நடக்கலானேன்.
“அம்மா....அம்மா....”
“...............................”
“அம்மா.... எங்கம்மா இருக்கிங்க...?”
“என்ன, ஒரே ஆச்சர்யமா இருக்கு, சாரு இன்னிக்கு சீக்கிரம் எழுந்திருச்சிட்டிங்கலே.....!”
“ அந்த குழந்தை இப்படி கத்தி காதைக் கிழிச்சா... எப்படி தூங்கறதாம்... ”
“எந்த குழந்தை...?”
“ம்... எந்த குழந்தையா.. அதான் பக்கத்துவீட்டில் இருக்கே அந்த குட்டிபிசாசுதான்.... கேட்குதா இல்லையா, காட்டு கத்து கத்துது.... நான் போய் என்னான்னு கேட்டுட்டு வரேன்... பிள்ளையை வளர்க்கறாங்கலா பிசாசை வளர்க்கறாங்கலான்னு தெரியலை...”
“நித்தி... நித்தி எங்க போற..?”
“நீங்க இருங்க நான் போய் நல்லா கேட்டுட்டு வரேன்... பக்கத்து வீட்டில் மனசாலுங்க இருக்காங்கன்னு தெரியவேணாம்”
   கொலைவெறிதான் எனக்கு. வாசல் கதவை திறக்க சாவியை எடுக்கும் போதுதான் உணர்ந்தேன். குழந்தையின் அழுகுரல் இப்போது இல்லை. அதற்குல் அம்மா வந்துவிட்டார். குழம்பிய முகத்துடன் தெரிந்தார்.
“ஏன் காலையிலேயே இவ்வளவு கோவம்.. என்ன ஆச்சி..? என்ன குழந்தை கத்துனிச்சி இப்போ...?”
“அதான் அந்த பக்கத்துவீட்டு குழந்தைதான்... காதே கிழியுது போங்க...”
கதவை திறந்தேன். நேரே பக்கத்துவிட்டின் வாசலில் நின்றேன். கதவு பூட்டப்பட்டிருந்தது. சில வினாடிகள் அங்கேயே நின்றேன். வீடு திறும்பினேன்.
“காலையிலேயே என்னதான் ஆச்சி நித்தி உனக்கு, எந்த குழந்தைதான் கத்துனிச்சி இப்பொ.... எனக்கு ஒன்னுமே கேட்கலையே....”
“வயசானாலே காது இப்படிதான் மந்தமாகிடும்னு கேள்விபட்டிருக்கேன். அதுக்குன்னு இப்படியா..? பக்கத்துவீட்டில் இருந்து வர சத்தம் கூடவா கேட்காம போய்டும். எங்க யாரையும் காணோம். குழந்தையை வீட்டில் விட்டு பூட்டிடு புருசனும் பொண்டாட்டியும் எங்க போய்ட்டாங்க.... அது காட்டு கத்து கத்துது. இப்பதான் சத்தத்தைக் காணோம், ஏதும் ஆயிருச்சோ....?”
“என்னப்பா சொல்ற..?”
“இவ்வளவு நேரம் தெலுங்குலையா சொல்லிகிட்டு இருந்தேன்.”
“பக்கத்துவீட்டில் உள்ளவங்க ரெண்டு பேருதான். அந்த ஆளு வேலைக்கு போயிருக்காருன்னு நீனைக்கறேன். அந்த அம்மாவோட அப்பாக்கு உடம்பு சரியில்லையாம். பார்க்க போயிருக்காங்க... வீட்டில் வேற யாரும் இல்லையே...?”
“இவ்வளவு விசயம் உங்களுக்கு எப்படி தெரியும்..?”
“அந்த ஆளு வேலை முடிஞ்சி வந்தா சாவியை கொடுக்க சொன்னாங்க. இங்கதான் இருக்கு சாவி. வீட்டில் வேற யாரும் இல்லைன்னுல்ல சொன்னாங்க... நீ என்னமோ குண்டை போடற..?”
“ஏம்மா, அவங்களே வந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகல... யாரு எவருன்னே தெரியல... கொடுத்தாங்கன்னு வீட்டு சாவியை வாங்கி வச்சிருக்கிங்கலே... என்ன நீங்க..?”
“என்னப்பா பண்றது. அவசரமா போகனுமாம். வீட்டுக்காரு மதியம்தான் வருவாராம். வேற சாவி இல்லையாம். அதான் இங்க கொடுத்துட்டு போனாங்க... ஆனா குழந்தையை பத்தி ஒன்னுமே சொல்லலையே...”
“எனக்கு சத்தம் கேட்டுச்சிம்மா... குழந்தை பசிக்கு அழற மாதிரி... சரி அந்த அம்மாவோட போன் நம்பர் இருக்கா..?”
“இல்லப்பா...”
“வெளங்கிடும்.. கடவுளே...சரி வீட்டு சாவியைக் கொடுங்க... போய் குழந்தைக்கு என்னதான் ஆச்சின்னு பார்க்கறேன்.”
“ஏதும் பிரச்சனை ஆகிட போதுப்பா... நாம வேணும்ன்னா போலிசை கூப்படலாமா....”
“போலிஸ் எதுக்கு போய் , பொம்பா, ஆம்புலன்ஸ்... இன்னும் எல்லாத்தையும் வர சொல்லுங்க..”
“என்னப்பா... இப்படி கிண்டல் செய்ற..?”
“ஆமாம் இப்ப கேளுங்க.... யாராச்சும் சாவியை கொடுத்தா எதையும் முழுசா கேட்காம வாங்கி வச்சிக்கோங்க... சாவியை கொடுங்கம்மா... நான் முன் வீட்டில் இருக்கர அப்துல்லாகிட்ட விபரத்தை சொல்லி நாங்க ரெண்டு பேரும் போய் பார்க்கறோம். அவரும் பகுதி நேர போலிஸ்தானே...”
     அப்துல்லாவிடம் விபரத்தை சொன்னேன். குழங்ந்தை என்பதால் பிரச்சனை ஏதுமில்லை என்றார். பக்கத்துவீட்டு வாசலில் கொஞ்ச நேரம் இருந்தோம். குழ்ந்தையின் அழுகுரல் கேட்கிறதா என உன்னிப்பாக கேட்டோம். இல்லை. இருந்தும், கதவை திறந்தோம். சத்தம் கொடுத்துப் பார்த்தோம். முடிந்தவரை குழந்தை எங்கெல்லாம் இருக்குமென யூகிக்கிறோமோ அங்கேயெல்லாம் தேடிப் பார்த்தோம். படுக்கையறையில் பெரிதாக ஒரு குழந்தையின் புகைப்படம் மட்டும் இருந்தது.
    அழகான முகம். கலையான புன்னகை. சும்மாவா சொன்னார்கள் குழந்தையின் சிரிப்பில் கடவுளைப் பார்க்கலாம் என.
   இல்லை என்பது உறுதியானது, நானும் அப்துல்லாவும் ஏதோ பேசியவாறு வாசலை நோக்கி நடந்தோம்.  இப்போது குழந்தை சத்தம் கேட்டது. நான் நின்றேன். அப்துல்லா, முன்னோக்கி நடந்துக் கொண்டிருந்தார்.
    நான் திறும்பினேன். அழுகுரல் கேட்கும் இடத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நடக்கலானேன். படுக்கையறை. அழுகுரல் சத்தமாக கேட்டது. அய்யோ அந்த சத்தம் வரும் இடத்தை கண்டுபிடித்துவிட்டேன்.
    அந்த அழுகுரல் ,அது , அது,  அந்த குழந்தையின் புகைப்படத்தில் இருந்துதான் வருகிறது. அந்த குழந்தை அழுகிறது.......!   
    இதோ குழந்தை என்னைப் பார்த்ததும் கையை நீட்டுகிறது...
எனக்கு, எனக்கு........


(இனி அடுத்த மாதம்....)
நன்றி ஜூலை 2012 -  அன்பு இதயம்
 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்