பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 01, 2012

ந.பிச்சமூர்த்தி - 'வெறும் செருப்பு'




    தொடர்ந்து நாவல்களை படித்து, கொஞ்சம் இடைவேளி/ஓய்வு கருதி சிறுகதை ஒன்றை படிக்கலாம் என புத்தக அலமாரியைத் திறந்தேன். ஜனவரியில் வாங்கியிருந்த மாதாந்திர நாவல் புத்தகத்தில் சிறப்பாக பாரதியார், புதுமைப் பித்தன், அறிஞர் அண்ணா, கு.ப.ராஜகோபாலன், கல்கி, ந.பிச்சமூர்த்தி மற்றும் லா.சா.ராமாமிருதம் ஆகியோர் எழுதிய ஒவ்வொரு சிறுகதையையும் ஒன்றாக பிரசுரித்திருந்தார்கள்.

   நண்பர் நவினால் அறிமுகம் செய்யப்பட்டு, சுந்தர ராமசாமியின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துவந்தேன். சு.ரா-வின் ‘நா.பிச்சமூர்த்தியின் கலை - மரபும் மனித நேயமும்’ என்ற புத்தகத்தை படித்த போதுதான் நா. பிச்சமூர்த்தி குறித்தும் அவரது எழுத்து குறித்தும் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவரின் கவிதைகளோ, சிறுகதைகளோ கிடைப்பது அரிதாக இருந்தது. இருந்தும் சு.ரா இந்த புத்தகத்தில் ந.பிச்சமூர்த்தியின் கதைகள், கவிதைகள், அவரது வாழ்க்கை குறித்து ஆழ்ந்தும் அற்புதமாகவும் எழுதியிருக்கிறார். இதுவரை நான் படித்த புத்தகங்கள்லேயே அதிக அளவு கோடிட்டும், சிறு சிறு குறிப்பும் எழுதி படித்த புத்தகம் இதுதான். கவிஞன் என்பவன் யார் என்கிற தெளிவும் கூட எனக்கு கிடைத்தது. வெறும் சந்தத்திலும் எதுகையிலும் மோலையிலும் , அழகுகளை மீறிய ஆழ்மன அழுக்குகளையும் ஆதங்கங்களையும் ஆன்மிக தேடல்களையும் இவர் சொல்லியிருக்கும் விதம் அபாரம் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் அந்த புத்தகத்தை படித்து, இன்னும் அதிகமாக எழுத விரும்புகிறேன்.

சரி இப்போது,
    நான் அந்த நாவலை வாங்கியது கூட ந.பிச்சமூர்த்தியின் கதையை படிக்கத்தான். படித்தேன்.
தலைப்பு ‘வெறும் செருப்பு’.
 
   வெறும் செருப்பில் இருந்து வாழ்வின் உன்னத தத்துவமான ‘நிலையின்மையை’ சொல்லியிருக்கிறார் ந.பிச்சமூர்த்தி. அறுந்துபோன செருப்பை ஒதுக்கி புது செருப்புடன் நடக்கிறார்; கதை அங்கே தொடங்குகிறது. செருப்பை மிக கவனமாக உபயோகிக்கிறார், அதிக அக்கறை காட்டுகிறார். பின் நண்பரின் மரண செய்தி. ரயில் பயணாமாய் இறப்பு வீட்டிற்கு செல்கிறார். செல்லும் வழியில் தனது சிந்தனை முழுவதையும் ஆகிரமித்திருந்த செருப்பை திடீரென உணர்கிறார். அங்கே நிலையாமை புலப்படுகிறது. நண்பரின் மரணமும், தனது மனம் முழுக்க பரவியிருக்கும் புது செருப்பும் எதையோ இவருக்கு நினைவூட்டுகிறது.

    மரண வீட்டிற்கு செல்லும் போது காலில் செருப்பு இல்லை. நண்பர் ஒருவர் விசாரிக்க , இப்படி பதில் கொடுக்கிறார்,    

 “ ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். இயிரென்னும் வழிபோக்கன் எப்போதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எறிலயாம். யாரால் தடுக்க முடியும் ”
   
   நேரம்/வாய்ப்பு இருப்பின் படித்து பாருங்களேன். நா.பிச்சமூர்த்தியின் ‘வெறும் செருப்பு’ .


 இப்படிக்கு தயாஜி.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்