- எந்த நாவில் ஊறுகிறது இந்தக் காதல் -
"சீ"
என்று சொல்லிவிட்டதால்
உடைந்த காதலும் உண்டு
உயிரையே எடுத்தாலும்
உடையாத காதலும் உண்டு
காதலில் ஒரு தம்பதி
கவியமாகிறார்கள்
காதலில் மறு தம்பதி
காணாமலே போகிறார்கள்
இனிப்பாக இருப்பதே
சிலருக்கு கசப்பாய் அமைகிறது
கசப்பாய் இருப்பதே
சிலருக்கு இனிப்பாய் இனிக்கிறது
சிலருக்கோ
ருசியும் தெரிவதில்லை
அதன் பசியும் புரிவதில்லை
காதல்தான் முக்தியும்
கழுத்தை அறுக்கும் கத்தியும்
ஒரே சமயத்தில்
இருவேறு நடன அசைவுகளைக்
காட்டும் மாய தேவதைதான்
இந்தக் காதல் போலும்
ஒருவனை அழ வைப்பது எதுவோ
ஒருவனை எழ வைப்பதும் அதுவே
இறைவனைக் காட்டிலும் அதிகம்
வழிபாடு வாங்குவதும்
நம்மிடம் தினம் தினம்
வசைபாடு வாங்குவதும்
காதலில் தலையெழுத்து
யாரால் அதை திருத்தி
எழுதிட முடியும்
இப்படி
தன் பெயர் அடிபடும்
கதைகளையெல்லாம் என்றாவது
அறிந்திருக்குமா அந்தக்
காதல்
சொல்லமுடியாது
இந்தக் கவிதையைக் கூட
யாரோ ஒருவர்
நாவில் அமர்ந்து
வாசித்துக்கொண்டிருக்கும்
அது
சாமியின் நாவா
சாத்தானின் நாவா
எனதான் நமக்கு தெரியவில்லை
தெரியாமல் இருப்பதுதானே
காதலின் கலை...
0 comments:
கருத்துரையிடுக