பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 05, 2025

- சொற்களே வாதை, சொற்களே போதை, சொற்களே பாதை -

 


ஒருவனை உடைக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை வதைக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை சிதைக்க 

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை வஞ்சிக்க

ஒரு சொல்

போதுமானது

ஒருவனை தாழ்த்த

ஒரு சொல் 

போதுமானது

ஒருவனை வீழ்த்த

ஒரு சொல்

போதுமானது



ஆனால்,

ஒருவன் தன் தேடலை

தெரிய

ஒருவன் தன் மீட்சியை 

அறிய

ஒருவன் தன் அறத்தை 

விளங்க

ஒருவன் தன் அவமானத்தை

துடைக்க


ஆயிரமாயிரம் பக்கங்கள் தேவைப்படுகின்றன


அதற்கென்றேதான் இங்கு

இன்னும் இன்னும்

கவிதைகள்

எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன


கண்ணீரைத் துடைக்க

வழி சொல்பவன்

அந்தக் கண்ணீரின் வலியின் சென்றிருக்கத்தான் வேண்டும்


ஆதாம் ஏவாள்

காலத்திலிருந்தே இங்கு

சொற்களே வாதை 

சொற்களே போதை

சொற்களே பாதை 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்