- ஒரே கவிதை -
நெடுநாட்களாக
மனதை இம்சித்திருந்த
கவிதையை
இன்று எப்படியோ
எழுதி முடித்து விட்டேன்
இன்றுதான்
எதோ கொஞ்சம்
பெருமூச்சு விடமுடிகிறது
இனியாவது
நிம்மதியாய் உறங்குவாயா
என கேட்கிறாள்
இல்லை
இனி ஒருபோதும்
என்னால் நிம்மதியாகவே
இருக்க முடியாது
நாம்
அடுத்த கவிதைக்கு
செல்லவேண்டாமா
ஒரு கவிதை என்பதை
ஒரே கவிதை என்றா
நினைக்கிறாய்
0 comments:
கருத்துரையிடுக