பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

மர்லின் 3



தியானிக்க முயல்கிறேன்
தீயென பற்றிக்கொள்கிறாள்

மர்லின் 

அழைப்பேதுன்றி
அத்துமீறி
பிரவேசிக்கிறாள்

மர்லின் 

தேகமெல்லாம் வியர்க்க
விரல் வழி வழிகிறாள்

மர்லின் 

போதாதென காதில்
காற்றூதி கரைக்கிறாள்

மர்லின் 

இனியென்ன தியானம்
நீயே போதுமென
எழுந்தேன் தீயென
எதிரே
கண்மூடி
கால் மடக்கி
புத்தகம் ஒன்றில்
மூழ்கி
தியானிக்கிறாள்
சஞ்சலமின்றி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்