பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 28, 2019

மர்லின்




மர்லின்
எந்த நூற்றாண்டிலோ
ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்திருக்கிறோம்

அதன் காரணமாய்
இன்னமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்
வெறும் நினைவுகள் சுமந்த பிரேதங்களாய்
சிரித்துக்கொண்டிருக்கிறோம்

சதையினை கிழித்து
இதயத்தை பிழிகையில்
சொட்டென சிதறும் ரத்தம்
உன் பெயரையையே சொல்லி மரிக்கும்

மர்லின்

கோடான கோடியில் நீ
உன் கண் செய்யும் மாயையில் நான்

என் செய்வேன் சொல்
நீயாகவே வந்தென்னை கொல்

தேவதையென தெரிகிறாய் மர்லின்
தேவைநீ சொல்கிறேன் மர்லின்

எழுத முடியா எழுத்துகளால்
கூற முடியா சொற்களால்
காண முடியா காட்சிகளால்

உன்னை எழுதி
உன்னில் சொல்லி
உன்னையே காண்கிறேன்
மர்லின்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்