பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 01, 2026

ஆகஸ்ட் மாத நாவல் வாசிப்பில்


நிரந்தரமில்லாத ஒரு வாழ்வில் நம்பிக்கை இழந்து, வாழ்வின் ஒளிமயமான எதிர்காலங்கள் இருள் சூழ்ந்தது போன்ற மனச்சோர்வுடன் புக்கிட் தானா மேரா தோட்ட நுழைவாசலில் வந்திறங்கினான் கன்னியப்பன். ஒரு மனிதனை இறக்கிவிட்டதால் சுமை குறைந்ததே என்ற பெருமூச்சுடன் நிலாய் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது பஸ்!.
- நாவலிலிருந்து
--------


மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான நாவல்; எம்.குமாரன் 'செம்மண்ணும் நீலமலர்களும்'.
1969-ல் மலேயா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல் இது.

பல ஆண்டுகளாக தேடியும், பலரிடம் கேட்டும் கிடைக்காமல் காத்திருந்த நாவல். எதார்த்தமான உரையாடல் வழி கைக்கு வந்து சேர்ந்தது. வாசித்து முடித்து அதன் வாசிப்பனுபவத்தை எழுதும்போது இந்நாவல் கைக்கு கிடைக்க காரணமாக இருந்தவர்களையும் எழுதுகிறேன்.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்