அடிக்கடி சந்திக்கலாம்...
இன்று இலக்கிய நண்பர்களான பெரிய அண்ணன் பில்மோர் பாலசேனாவையும் சின்ன அண்ணன் ஏடம் அசுவினியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வழக்கமாய் நண்பர்களைச் சந்திக்கும் உணவகத்தில் சந்தித்து பேசினோம்.
பில்மோர் பாலசேனாவை எனக்கு முன்னமே தெரியும். இப்படி சொல்கிறேன்; என்னை சின்ன வயதில் இருந்து அவருக்கு தெரியும். அட இப்போதும் கூட எனக்கு சின்ன வயதுதானே.
ஏடம் அசுவினியை அவ்வப்போது இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்து "உள்ளேன் ஐயா வணக்கம் ஐயா..." என்பது போல பேசியிருந்தேன். முகநூலில் இருப்பது அவர்தான் என தெரிந்த பின் கூடுதலாக சில வார்த்தைகள் பேச தொடங்கி கேலி கிண்டல் வரை பழகினோம்.
அவரது குறுங்கதைகளை இதழ்களிலும் முகநூலிலும் வாசித்திருக்கிறேன். எழுதுவதோடு மலேசியத் தமிழ் ஆர்வலர் நற்பணி களத்தையும் நண்பர்களுடன் இணைத்து நடத்தி வருகின்றார். அடுத்த முறை அவர்களின் நற்பணி களகத்தை குறித்து எழுதுகிறேன்.
எங்களின் உரையாடல் எங்கெங்கோ சென்று பின்னர் இலக்கியத்திற்கு வந்தது. நாங்கள் வாசித்ததைப் பேசினோம். இன்றைய சூழலில் வாசிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பேசினோம். மலேசிய மூத்த எழுத்தாளர்கள், மறந்த புத்தகங்கள் என எனது அடுத்தடுத்த கட்டுரைகளுக்கானத் தகவல்களையும் அவர்களிடமிருந்து பெற்று கொண்டேன்.
பல ஆண்டுகளாக தேடி கிடைக்காத புத்தகம் ஒன்றை அண்ணன் பில்மோர் பாலசேனா வைத்திருப்பதாகச் சொன்னார். எனக்கு உள்ளம் பூரித்து விட்டது. இந்தச் சந்திப்பைச் சாத்தியப்படித்திய அண்ணன் ஏடம் அசுவினியின் கையைப் பிடித்து நன்றியைத் தெரிவித்து கொண்டேன். அப்படியென்ன புத்தகன் அதுவென அதற்கான வாசிப்பனுபவத்தை எழுதும் போது சொல்கிறேன்.
இன்றைய சந்திப்பில் எனது வேலை, புத்தக விற்பனையோடு மருத்துவமனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். அண்ணன் பில்மோர் பாலசேனாவும் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை அவர் சிறுகதையாக எழுதியிருந்ததையும் சொன்னார். அதோடு அவர் வெளியிட்ட அவரது புத்தகத்தோடு அடுத்த சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என்றபடி இன்றைய சந்திப்பை நிறைவு செய்தோம்.
இனி அடிக்கடி சந்திக்கலாம்.....
வழக்கமாய் நண்பர்களைச் சந்திக்கும் உணவகத்தில் சந்தித்து பேசினோம்.
பில்மோர் பாலசேனாவை எனக்கு முன்னமே தெரியும். இப்படி சொல்கிறேன்; என்னை சின்ன வயதில் இருந்து அவருக்கு தெரியும். அட இப்போதும் கூட எனக்கு சின்ன வயதுதானே.
ஏடம் அசுவினியை அவ்வப்போது இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்து "உள்ளேன் ஐயா வணக்கம் ஐயா..." என்பது போல பேசியிருந்தேன். முகநூலில் இருப்பது அவர்தான் என தெரிந்த பின் கூடுதலாக சில வார்த்தைகள் பேச தொடங்கி கேலி கிண்டல் வரை பழகினோம்.
அவரது குறுங்கதைகளை இதழ்களிலும் முகநூலிலும் வாசித்திருக்கிறேன். எழுதுவதோடு மலேசியத் தமிழ் ஆர்வலர் நற்பணி களத்தையும் நண்பர்களுடன் இணைத்து நடத்தி வருகின்றார். அடுத்த முறை அவர்களின் நற்பணி களகத்தை குறித்து எழுதுகிறேன்.
எங்களின் உரையாடல் எங்கெங்கோ சென்று பின்னர் இலக்கியத்திற்கு வந்தது. நாங்கள் வாசித்ததைப் பேசினோம். இன்றைய சூழலில் வாசிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பேசினோம். மலேசிய மூத்த எழுத்தாளர்கள், மறந்த புத்தகங்கள் என எனது அடுத்தடுத்த கட்டுரைகளுக்கானத் தகவல்களையும் அவர்களிடமிருந்து பெற்று கொண்டேன்.
பல ஆண்டுகளாக தேடி கிடைக்காத புத்தகம் ஒன்றை அண்ணன் பில்மோர் பாலசேனா வைத்திருப்பதாகச் சொன்னார். எனக்கு உள்ளம் பூரித்து விட்டது. இந்தச் சந்திப்பைச் சாத்தியப்படித்திய அண்ணன் ஏடம் அசுவினியின் கையைப் பிடித்து நன்றியைத் தெரிவித்து கொண்டேன். அப்படியென்ன புத்தகன் அதுவென அதற்கான வாசிப்பனுபவத்தை எழுதும் போது சொல்கிறேன்.
இன்றைய சந்திப்பில் எனது வேலை, புத்தக விற்பனையோடு மருத்துவமனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன். அண்ணன் பில்மோர் பாலசேனாவும் அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை அவர் சிறுகதையாக எழுதியிருந்ததையும் சொன்னார். அதோடு அவர் வெளியிட்ட அவரது புத்தகத்தோடு அடுத்த சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என்றபடி இன்றைய சந்திப்பை நிறைவு செய்தோம்.
இனி அடிக்கடி சந்திக்கலாம்.....
0 comments:
கருத்துரையிடுக