பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 08, 2020

நித்தியாவின் ஓவியம்


       ஆடம்பர வீடு. அழகான குடும்பம். வீட்டு வாசலில் உயர் ரக நாய். இரண்டு கார்கள். வீட்டு வாசலில் ஒரு காரும், வெளி வாசலில் ஒரு காரும் இருக்கும்.

  வீட்டில். நித்தியா வரைந்துக் கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு கணினியில் உலக நண்பர்களுக்கு 'ஹாய்' 'பாய்' அடித்துக் கொண்டிருந்தார்கள். வரவேற்பறை சுவரில் மாட்டியிருந்த திரையில் ஏதோ ஆங்கிலப்படம் ஓடி ஆடிக் கொண்டிருக்கிறது.

   என்னதான் நாள் முழுக்க வேலை என இருந்தாலும் நித்தியாவிற்காக ஒவ்வொரு ஞாயிறும் வீட்டில் அவளுடன் நேரத்தைச் செலவு செய்வார்கள்.

   ஆனால் நித்தியா, ஞாயிறு விடுமுறைகளில் மட்டும் தனிமையை உணர்வாள். இதற்கு பதிலாக பள்ளியிலேயே அவளைச் சுற்றி ஒரு பட்டாளமே இருக்கும். அன்று பள்ளியில் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தினர் குறித்து பேசிப் பகிர்ந்துக் கொண்டார்கள். நித்தியாவிற்கு தன் குடும்பத்தைப் பற்றி பகிர்வதற்கு ஒரு நிமிட கதை கூட இருக்கவில்லை.

    அன்றைய தினத்தில் பள்ளியில் வரைந்த ஓவியத்தை மீண்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

   மகள் அசையாமல் ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்ததை கடைசியாக அப்பாவும் அம்மாவும் கவனித்தார்கள்.

"செல்லகுட்டி என்ன வரைஞ்சிருக்கீங்க..?"

"பத்தியா நம்ம பொண்ணு எவ்வளவு அழகா வீடு வரைஞ்சிருக்கா.. அழகா இருக்குல்ல..."

"நித்தி.. என்னம்மா வீட்டுக்கு பக்கத்துல சின்னதா இன்னொரு வீடு வரைஞ்சிருக்கீங்க..?"

    நித்தியா தான் வரைந்த ஓவியத்தை தூக்கிக் காட்டி,

''இது நம்ம வீடு.. நாம் இந்த வீட்டுல இருப்போம்.. பக்கத்துல இருக்கே.. இது நம்ம பாட்டி தாத்தா வீடு.. நீங்கதான் அவங்கள வீட்டுல சேர்க்கமாட்டீங்களே....

"!!"

"!!"

- தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்