பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 08, 2020

தாத்தாவின் இளமை



"கிழவனுக்கு வந்த வாழ்வை பார்த்தியா..?"

  என்றுதான் அந்த இளைஞர்களில் ஒருவன் ஆரம்பித்தான். கேலியும் கிண்டலும் சத்தமின்றி இருந்தது. ஆனாலும் இரண்டாவது நாற்காலிவரை கேட்கவேச் செய்தது..

    கடைக்காருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாசூக்காக இளைஞர்களிடம் எதையோச் சொல்லிவிட்டி அவரின் வேலையைப் பார்க்கலானார்.

    நெல்சன். வயது 65-க்கு மேல். ஆனாலும் பார்த்து வயதை கணிக்க முடியாதத் தோற்றம். மிடுக்கான நடை எப்போதும் எனக்கென்ன என பார்க்கும் பார்வை. ஆனாலும் தன்னை எப்போதும் இளமையாய் வைத்திருப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார். அதற்காகவே வாரம் ஒருமுறை சலூனுக்கு வந்துவிடுவார். 

   ஆங்காங்குத் தெரியும் தலைமுடிக்குக் கூட டை அடித்துக் கொள்வார்.

   இன்றும் வந்திருந்தார். ஆனால் அவருக்கு பின்னால் வந்த இளைஞர்கள் இவரைக் கண்டதும் எரிச்சல் அடைந்தார்கள். சலூன் கடைக்காரர் தனது வாராந்திர கஸ்டமருக்கு நேரம் எடுத்து தலை முடியைத் திருத்திக் கொண்டிருந்தார். இதற்கு பின் தான் மை பூச வேண்டும். எப்படியும் நேரம் எடுக்கும்.

   ஏற்பட்ட எரிச்சலை, நெல்சன் மீதான கேலி கிண்டலாக இளைஞர்கள் மாற்ற முயன்றார்கள்.

"எந்த பொண்ணை மயக்க இந்த பேஷன் கட்டுதுனு தெரியலயே.."

"நாமலே தோத்துடுவோம் போல.."

"இதெல்லாம் வீட்டுக்கும் பாரம் பூமிக்கும் பாரம்.."

  நெல்சனிடம் எந்த சலனமும் இல்லை. அவரது கண்கள் கண்ணாடியில் தெரியும் தன் பிரதிபலிப்பையேப் பார்த்துக் கொண்டிருந்தார். சலூன் கடைக்காரருக்கு வயிற்றில் எதோ கரையத் தொடங்கியது.

  எல்லாம் முடிந்தது. நெல்சன் நேராக அவர்கள் முன் வந்து நின்றார். குரலை சரி செய்துக் கொண்டார். இளைஞர்களுக்கு அவரது ஆழ்ந்தப் பார்வை பயத்தைக் கொடுக்க செய்தது. சலூன் கடைக்காரர் எதையோ எதிர்ப்பார்க்கலானார்.

"தம்பிங்களா... நீங்க பேசனதெல்லம் எனக்கு கெட்காமயில்ல... நான் என் வயசை காட்ட விரும்பல... ஏன் தெரியுமா..? எனக்கு உங்களை மாதிரி ரெண்டு பசங்க இருந்தாங்க.. இருந்த காசையெல்லாம் எடுத்து கல்யாணம் பண்ணி வச்சேன். போனவங்க போனவங்கதான். யாரும் திரும்ப வரல. நானும் என் மனைவியும்தான் வீட்டுல இருக்கோம். என்னை நம்பி இருக்கற என் மனைவிய நான் பார்த்துக்கனும். அதுக்கு எனக்கு ஒரு வேலை வேணும். என் வயசு வெளிய தெரிஞ்சா என்னால 'கார்ட்' வேலை செய்ய முடியாது... இந்த கிழவன் எப்படி வேலை செய்வான்னு சிரிப்பாங்க..  இப்ப நீங்க சிரிச்சிங்களே அதே மாதிரி.... நீங்களாச்சும் உங்க அப்பா அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க... ஏன்னா எல்லார் உடம்பும் எல்லா சமயத்திலும் அவங்க பேச்சை கேட்கும்னு சொல்ல முடியாது...   நீங்க இப்ப வந்ததுக்கூட உங்கப்பா கொடுத்த காசுலதான..? ஆனா நான் இன்னமும் என் சொந்த காலுல நிக்கறேன்.. சொந்த காசுல சாப்டறேன்... "

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்