- கடவுளும் கவிதைகளும் -
கடவுளை விடவும்
கவிதைகள்
நம்பும்படி எழுகின்றன..
நீயும் நானும்
தனியல்ல எனும்
ஆதிநம்பிக்கையை
அவ்வளவு சீக்கிரத்தில்
கடவுளாலும் கொடுக்க முடிவதில்லை
கண்களை மூடி
நாம் பிரார்த்திப்பதைவிடவும்
இன்னொருவன் நமக்காக
பிரார்த்தித்திருக்கும் கவிதைகளை
வாசிப்பது
திறந்த கண்களுள் நுழைந்து
தீராத பக்கங்களை
உள்ளுக்குள் புரட்டும்
ஆண்டவனுக்கே வாய்க்காத
பேறு
கடவுளே
கொஞ்சம் பொறு
உன்னுடைய பக்தனுக்காக
நானும் ஒரு கவிதையை
எழுதிவிட்டு வருகிறேன்
அப்போதுதான்
அவனும் உன்னை
நேசிக்க ஆரம்பிப்பான்
அதற்கு முன் அவன்
தன்னையே நேசித்திருப்பான்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக