பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 01, 2021

- மாணிக்கங்களும் பாட்ஷாக்களும் -

 #குறுங்கதை 2021 - 11

- மாணிக்கங்களும் பாட்ஷாக்களும் -

    இருவரும் நெருங்கிய நண்பர்கள். மாணிக்கம் கொஞ்சம் பயந்த சுபாவம். பாட்ஷா எதைப்பற்றியும் கவலை இல்லாதவன். அதே சமயம் துடுக்குத்தனம் உள்ளவன்.

    இப்படித்தான் விளையாட்டுத்தனமாய் என்றோ எப்போதோ ஏதோ செய்துவிட்டான் பாட்ஷா. ஏற்கனவே சில முறை பிடிபட்டவன் என்பதால் இம்முறையும் பிடிபட்டான். இப்போது அவனுடன் வெறுமனே நடந்துக் கொண்டிருந்த மாணிக்கமும் பிடிபட்டான்.

    மாணிக்கத்திற்கு எந்த குற்ற பின்னணியும் இல்லை என்பது உறுதியானது. இருந்தும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

    விசாரணை ஐந்து நாட்களாக தொடர்ந்தது. ஆறாம் நாள் பாட்ஷா வெளியானான். நேராக தன் நண்பன் மாணிக்கத்தைப் பார்க்கச் சென்றான். தன்னால் சம்பந்தமே இல்லாமல் மாணிக்கமும் விசாரணைக்கு அழைத்து வந்ததில் தன் வருத்தத்தை சொல்ல நினைத்தான்.

    மாணிக்கத்தின் வீடு இன்று வேறுமாதிரி இருந்தது. வழக்கம் போல உள்ளே சென்றான். அம்மா ஒரு மூலையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார். அங்கு, மாணிக்கத்தின் புகைப்படத்தில் மாலை அணிவித்திருந்தார்கள்.

    பாட்ஷா நிலைகுத்திப்போனான். அன்று விசாரணையில் மாணிக்கத்திற்கு இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என தான் சொன்னதும், அவனை விட்டுவிடுவதாக சொல்லித்தான் பாட்ஷாவை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஐந்து நாட்களில் அப்பாவி பாட்ஷாவிற்கு என்ன ஆனது என அவனுக்கு புரியவில்லை. அவனுக்கும்.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்