பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 26, 2021

'பூக்கும் கவலைகள்'


பெரிதாக
கவலைகளை சூடிக்கொள்ள
வேண்டாம்

தானாய் மலர்ந்து
தானாய் மடியும்
கவலைகளுக்கு ஏன்
இடம் கொடுக்க வேண்டும்

யார் ஊற்றும்
நீருக்கும்
வேர் விடும்
வெட்கம்கெட்ட கவலைக்கு
ஏன் மதிப்பளிக்க வேண்டும்

உதிரும் இலைகள்
போல
அவிழும் மொட்டுகள்
போல
அதுவே அதுவாக
அடுத்தடுத்து நகர்ந்துவிடும்

நாம் எதற்கு
தலை கொடுக்க வேண்டும்
அதற்குள்ளே தலையிட வேண்டும்

தானாய் முளைக்கும்
புல் போல
வீணாய் முளைக்கும்
கவலைக்கு
முகம் காட்ட வேண்டாம்

மாறும் பருவம்
போல
தானும் மாறும்
கவலைக்கு மதிப்பளிக்கனுமா
நம் மதிப்பிழக்கனுமா

நிழலில் இருந்து
நகர்ந்திருப்போம்
நிச்சயம் மாறும்
நடந்திருப்போம்...

அன்புடன் #தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்