பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 16, 2026

வாசிப்பில்


" ....இது காதலின் பெருங்களிப்பு. காதல் என்பது விசித்திரமான மரம்தான். தழைத்து நிற்கும் போது தலைகீழாய் விழும். பச்சை மறந்து பட்டுப் போனதென்று நினைக்கும் போது காய்க்கத் தொடங்கும். வெட்டி முறித்தாலும் வெடித்துத் துளிர் விடும்.'
நாவலிலிருந்து......

இன்றைய இரவு கே.ஆர்.மீராவின் 'அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்' நாவலோடு விடியப்போகிறது. சிற்பி பாலசுப்பிரமணியம் இந்நாவலை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

நான் வாசிக்கும் கே.ஆர்.மீராவின் இரண்டாவது நாவல் இது. இந்நாவலின் முதல் பக்கமே எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியையும்  பதட்டத்தையும் அடுத்தடுத்த பக்கங்களில் சரி செய்ய முடியுமா என இன்னும் புலப்படவில்லை.

நாவலில் வரும் நாயகி ராதிகா, அவளைச் சுற்றியும் சுழன்று அவளை வதைக்கும் காதல், காமம், வன்முறை, தனிமை என்னும் பல சிக்கலான உணர்வுகளின் இருந்து அவள் தப்பிப்பாளா அல்லது அவளும் அதனோடு கரைந்துதான் போவாளா என்கிற பதட்டம் எனக்குமே தொற்றிக்கொண்டது....

மாதம் ஒரு நாவல் வாசிப்பு திட்டத்தில் மே மாதத்தித்கான ஐந்தாவது நாவல் வாசிப்பு இது.

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்