பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 25, 2022

- ஒற்றைச்சாபம் -


யாரோ இடும் கையெழுத்து
எங்கோ செல்கிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ வீசும் குண்டு
எங்கோ வெடிக்கிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ சுடும் துப்பாக்கி
எங்கோ சுடுகிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ யுத்தம் செய்கிறார்கள்
எங்கோ நடக்கிறது
யார்யாரோ சாகிறார்கள்

ஏனோ நம் கையிலும்
இரத்தம் படிகிறது
நம் மனதும் துடித்து
அழுகிறது

நாமும் சாகத்தான் போகிறோம்
அதற்குள்
எத்தனை மரண ஓலங்களை 
கேட்டு பைத்தியமாகப் போகிறோமோ

ஏன் வாழ்கிறோம் 
என்பதை விடவும்
ஏன் சாகிறோம்
எனத் தெரியாதது 
உலக உயிர்களின் 
ஒற்றைச் சாபம் போல....



1 comments:

பெயரில்லா சொன்னது…

ஆம்... கண்ண்களில் உதிரம் வழிகிறது.. பாதிக்கப்பட்ட மக்களுக்காய் என் உயிர் மேகத்தில் அலைகிறது... உங்கள் கவிதை கண்டு வெடித்து அழுகிறேன்.. என் கையறுநிலை கண்டு ஊமையாகிறேன்..
இன்பா சுப்ரமணியன்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்