பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 05, 2011

கவிதையானவள் கவனத்திற்கு.....







உன்னொடு நானும்
என்னோடு நீயும்
பேசும்போது;

மண்ணோடு மக்களை
மறந்து;

வாயேன்.......
விண்ணோடு பறக்கலாம்......

கல் தடுக்கி விழவில்லை
GUN சுட்டும் துழையில்லை......

உன்;

கண்பட்டு விழுந்துவிட்டேன்....
இதயம் வழி துவாரங்களை
விழுங்கிவிட்டேன்.....

ஜீரணிக்கும் ஆசையில்
ஜீன்களெல்லாம் போராட.....

வீண்வம்பில் மாட்டியதாய்
என் மார்பும் பதைபதைக்க....

ஏனோ தெரியாது
என்னவள்;

நீதான் என்ற
எண்ணம் மட்டும்....
என்னுள் சுரக்கிறது....

நுரையீரலும்;
உன் பெயரையே
சுவாசிக்கிறது......

சொர்க்கம் நரகம்...
நம்பிக்கை விதைத்தேன்...

உந்தன் இருவகை
இதழ்பதிவில்....

என் உயரத்தையும் உருக்குவது
உந்தன் உயர்த்திய புருவம்.......

என் உதிரத்தையும் இறுக்குவது....
உன் இரண்டாவது ஆயுதம்....

முதல் ஆயுதம்
கண்ணும்;
மறு ஆயுதம் கண்ணீரும்....

கவிதை எழுதும் சுகம்
இரட்டிப்பாகின்றது;
கவிதையே உன்னை எழுதும் போது.........

Related Posts:

  • மர்லின் 5 மர்லின் நீதான் எத்தனை விதமானவள் எத்தனை இதமானவள்... எட்டி எடுக்க முடியாவிட்டாலும் எக்கி எடுக்க முடிந்ததால் புத்தகங்கள் கூட இறகின்றி உயரத்தில் … Read More
  • கதை_வாசிப்பு_2019 – 3 'காலத்தின் மறுபக்கம்' கதை_வாசிப்பு_2019 – 3 கதை – காலத்தின் மறுபக்கம் எழுத்து – வைதீஸ்வரன் இதழ் – தீராநதி திகதி – ஆகஸ்ட் 2019* ஆகஸ்ட் மாத தீராநதியில் ‘காலத்த… Read More
  • பொம்மி பொம்மிஒரு நாள் நேரமெடுத்துஎன் புத்தக அறையில் நுழைகிறாள்காரணமின்றி என் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அவள் விரல்கள் சிலஉரசும்படி கடக்கிறாள்அவள் ஸ்பர… Read More
  • பித்து மூலக்கடவுள் என்போம்மூளையின் வடிவம் என்போம்ஏடுகளில் எழுதுமுன்னேஎன்றைக்கும் நினைக்கச் வைப்போம்மோதகம் செய்து வந்துகொழுகட்டை கொடுத்து வருவோம்மஞ்சளில் … Read More
  • உயிர்நேசியின் உன்னத நாளில்...'உயிர்நேசியின் உன்னத நாளில்..' நம்பிக்கையுள்ளங்களைநன்மக்களென ஆட்கொண்ட எங்கள்பிரபுவே எங்கள்பிதாவேஅன்பின் வழியில்எங்கள்  கரம் பிடித… Read More

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்