பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 04, 2019

பொம்மி



பொம்மி
ஒரு நாள் நேரமெடுத்து
என் புத்தக அறையில் நுழைகிறாள்
காரணமின்றி என் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அவள் விரல்கள் சில
உரசும்படி கடக்கிறாள்
அவள் ஸ்பரிசம் பட்டுவிட்டதும்
தான் வந்த காரணத்தை
கவிதைகள் கண்டுகொண்டன
ஆளுக்கு ஆள் அவள் படிக்கவேண்டி விழுந்தும் குதித்தும்
தங்களை முன்மொழிந்துக் கொள்கின்றன
பொம்மி உன்னிடமும்
இந்த உலகத்திடமும்
நான் விட்டுச்செல்ல வேறொன்றும் இருக்கவில்லை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்