பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2019

உயிர்நேசியின் உன்னத நாளில்...

'உயிர்நேசியின் உன்னத நாளில்..'

நம்பிக்கையுள்ளங்களை
நன்மக்களென 
ஆட்கொண்ட எங்கள்
பிரபுவே எங்கள்
பிதாவே
அன்பின் வழியில்
எங்கள்  கரம் பிடித்து 
புறக்கண்கள் மறைத்து
அகக்கண்கள் திறக்கருளி 
கரை காண் செய்பவரே 
இவ்வுலக இன்னல்கள்
யாவையும்
ஒவ்வொன்றாய் எக்கேள்விக்கும்
இடம் மறுத்து
உங்கள் சொல்லால் சுமப்பவரே
எங்கள் கண்ணீர்த்துளிகளுக்கு
உம் உதிரத்துளிகளால்
விடை கொடுக்கும் 
எல்லைகடந்த அன்பின் ஜீவனே
ஏதேதோ பாவங்களை
யார்யாரோ செய்த குற்றங்களை
சிலுவை சுமந்து
சுத்தப்படுத்திய பரிசுத்த பரமபிதாவே
முட்களைச்சூடி கிரீடமாக்கி
அதனையும்
மகிழ்வித்த ரட்சகனே
உங்கள் நாளில்
உங்கள் பெயரில்
புத்துயிர் பெற்று
புதுவாழ்வு கற்று வாழ
வகைசெய்யும் எங்கள்
பரலோக வாசியே
என்றைக்குமான 
எங்கள் உயிர் வாசியே
ஆண்டவரே
ஆமேன் 

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்