பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 04, 2019

பித்து



மூலக்கடவுள் என்போம்
மூளையின் வடிவம் என்போம்
ஏடுகளில் எழுதுமுன்னே
என்றைக்கும் நினைக்கச் வைப்போம்

மோதகம் செய்து வந்து
கொழுகட்டை கொடுத்து வருவோம்
மஞ்சளில் பிடித்து வைத்து
மனதார வேண்ட வைப்போம்

கல்யாணம் ஆச்சி என
சித்தி புத்தி சேர்த்து சொல்வோம்
சுத்தபத்த சன்யாசி
என்று காட்டி
புராணங்கள் புரட்டி வைப்போம்

உலகுக்கு பாரதம்
படைக்கவே
தந்தம் உடைக்கவே
எழுதி முடிக்கவே
புழந்து வைப்போம்

வட்டார கோவில்களில்
வருடாந்திர நிகழ்ச்சியாக
லாரி ஏற
கூம்பிட்டு வைப்போம்

கூடாத குறைக்கு
கொஞ்சம்
கூட சைஸ்
ஆடை போட்டு
கம்ப்யூட்டர் ஜாலம் காட்டி
சினிமாவில் ஆட வைப்போம்

சீக்கிரமே குழந்தை பெற
சிக்கலின்றி மரம் சுற்ற
உன் பின்னே வந்து நிற்போம்

வருமான லாபம் பெற
வரைந்து உன்னை
எடுத்து வைப்போம்

பாரதியின் மரணம் கூட
நீ அடித்ததாய் புரளி வைப்போம்

சதுர்த்தி என்ற நாளை சொல்லி
சாக்கடையில் முடித்து வைப்போம்

வண்ணங்களில் சிலைகள் செய்து
வடிவங்களில் புதுமை செய்வோம்

கோயிலியே நிற்க வைத்து
பிச்சைகளுக்கு பயிற்சி வைப்போம்

நீ வாழும்
காடழிப்போம்
நீ வாழா
தந்தம் அறுப்போம்

கயிற்றாலே காலைக் கட்டி
துப்பாக்கியில் சுட்டு பார்ப்போம்

வாயில்லா ஜீவன் உன்னை வதைப்பதில் இன்பம் காண்போம்

மனிதன் என்ற போர்வைக்குள்ளே.....

#தயாஜி
ஓவியம் திரு.ராஜேஸ்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்