பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 18, 2009

சுஜாதா....


சுஜாதா பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...

1935ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தார். மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவிலும் பங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் ப்போது இரண்டு நிறுவனங்களில் ஆலோசகராக பணிபுரிந்தார். அம்பலம் என்னும் இணைய இதழுக்குப் பொறுப்பாசிரியராக தனது இறுதிக் காலம் வரை பணிபுரிந்தார். தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். 1993இல் மைய அரசின் அறிவியல், தொழில்நுட்ப விருதானNCTC விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையை பரப்பியதற்காக சுஜாதாவிற்கு அளிக்கப்பட்டது. தனது மகத்தான படைப்பாற்றலால் 50 ஆண்டுகாலம் தமிழ் வாசக பரப்பை ஆக்ரமித்திருந்த சுஜாதா 27.2. 2008ல் சென்னையில் மறைந்தார். அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன். மகன்கள்: ரங்க பிரசாத், கேசவ பிரசாத்.

(நன்றி உயிர்மை)

இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்