பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

எப்படி வெல்வது...


இங்கே வெளிச்சம்,
தேவையானதால்....
இருட்டு இல்லாமல் போய்விட்டது....

இப்படித்தான்
இங்கு பணம்
தேவையானதால்
என் குணம் நிராகரிக்கப்பட்டது......

விழிகள் தோறும்
வாசனை தெளித்தாள்...
என் விழியின் ஓரம்
வலியை விதைத்தாள்.....

கண்ணாடியும் என்னை
ஏளனம் செய்கிறது முன்னாடி....

என் காதலைஎப்படிச் சொல்ல....!!??

பணம் தந்தால்
பஞ்சணையில்.......
இல்லையெனில்
நஞ்சணையில்........

"மனைவியாகிவிடு"
என்றேன்

""ஒரு இரவுக்கு 100 வெள்ளி"
என்றாள்
அவளுக்கு தேவை
தாலியல்ல
ஆணுறை!!???


ஏன் இன்னமும் அவள் நினைவாய் நான்.

எப்படி ஜெயிப்பேன்..

"என் ஐம்பது வெள்ளி கொண்டு"



இப்படிக்கு,
தயாஜி வெள்ளைரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்