பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 02, 2009

பருவப் பரிட்சை......

தினமும் நாங்கள்
சந்திக்கின்றோம்...
பள்ளியில் அருகருகிள்
அமர்கின்றோம்......

வீட்டுப் பாடங்களை அவளே,
எழுதிக் கொடுப்பாள்,
நான் பார்வையாளன் மட்டும்தான்.....

என் மேஜையில்
அவள் தந்த பரிசுகளே
அதிகம் ஆக்கிரமிக்கின்றன.....!!!

பேனாவும் அவள்...,
தந்தால்தான் அழகாய்
எழுதுகின்றது...?


அவள் வீட்டுக்கண்ணாடியில்தான்
நான் அழகாய் தெரிவேன்..!

எங்கள் உறவுகள்
புனிதமாகக் கருதப்பட்டுவந்தது....

பருவச் சண்டையில்
அவளின் தேகம்.......
‘.....வீங்கின.....!!!’

ஆடைகள் மாறின,
அவள் மேல் வீட்டில்
அக்கரைக் கூடின.......

அவளை சுற்றி
ஏதோ வாசம்
இன்னதென்று கூறமுடியாது............
ஏதோ புதுமை வாசம்.....!!



அவள் நடையில்
என்னுள் அதிர்ந்தன..
ஏதேதோ.....!?!?!?

இப்பொழுதெல்லாம்..
நாங்கள் சந்திப்பதில்லை.
அவள் வீட்டார் இதை
விரும்புவதில்லை.....?

என் வீட்டிலும் என்னை
விடுவதில்லை...?

அவளைப் பார்க்காத
நாட்கள்தான்
நான்..........

இன்னும் அவளருகில்
நெருக்கமானேன்..!!?

இப்போது எங்கள் உறவு..
பாவமா..?
புனிதமா..?
விளங்கவில்லை......


..........................தயாஜி வெள்ளைரோஜா.............................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்