ஏப்ரல் வாசிப்பில்
-சிம்மம்-
உண்மையான சிம்மம்
சிம்மத்திற்கு உகந்தவற்றை மட்டும்
எப்போதும் செய்வது அல்ல
சிற்பத்தில்
ஓவியத்தில்
நேரில் காணாதவர்களின் கற்பனையில்
வாழும் சிம்மம்தான்
எப்போதும் சிம்மமாக இருக்கிறது
- கல்பற்றா நாராயணன்.
ஏப்ரல் மாத புத்தக வாசிப்பை, 'தொடுதிரை' என்னும் கல்பற்றா நாராயணன் கவிதைத் தொகுப்பில் இருந்து தொடங்குகின்றேன்.
இம்மலையாளக் கவிதைகளை ஜெயமோகன் தமிழாக்கம் செய்திருக்கின்றார்.
நண்பர்களே நீங்களும் இம்மாதத்தில் எந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளீர்கள் என சொல்லிவிட்டு போங்களேன்...
அன்புடன்
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக