வாசிப்பில் - ஜனவரி 11
'பிரியத்தோடு
தந்த
விஷத்திலும்
இல்லாமல்
போகவில்லை
கொஞ்சம்
பிரியம்'
- மனுஷ்ய புத்திரன்.
இன்றைய வாசிப்பில், மனுஷ்ய புத்திரனின் 'மையல்'.
கவிதைகளைத் தேர்வு செய்ததோடு தனது அழகான கையெழுத்தில் அதனை எழுதியிருக்கிறார் பரிசல் கிருஷ்ணா.
கையெழுத்துகளில் ஒவ்வொரு கவிதைகளையும் வாசிக்கும் போது, ஒரு கவிதைப் புத்தகத்தை வாசிப்பது போல அல்லாமல் டைரி குறிப்புகளை வாசிப்பது போன்ற உணர்வையும் நெருக்கத்தையும் கொடுக்கின்றது.
தந்த
விஷத்திலும்
இல்லாமல்
போகவில்லை
கொஞ்சம்
பிரியம்'
- மனுஷ்ய புத்திரன்.
இன்றைய வாசிப்பில், மனுஷ்ய புத்திரனின் 'மையல்'.
கவிதைகளைத் தேர்வு செய்ததோடு தனது அழகான கையெழுத்தில் அதனை எழுதியிருக்கிறார் பரிசல் கிருஷ்ணா.
கையெழுத்துகளில் ஒவ்வொரு கவிதைகளையும் வாசிக்கும் போது, ஒரு கவிதைப் புத்தகத்தை வாசிப்பது போல அல்லாமல் டைரி குறிப்புகளை வாசிப்பது போன்ற உணர்வையும் நெருக்கத்தையும் கொடுக்கின்றது.
தொடர்ந்து வாசிக்க... வாசிக்க... யாரோ எழுதிய டைரியாய்த் தெரிந்தது எல்லாம் நமக்கு நாமே சில தருணங்களில் எழுதிய கவிதைகளாகவும், இன்னும் சில தருணங்களில் நாம் எழுதத் தவறிய கவிதைகளாகவும் இவை அமைந்துவிடுகின்றன.
உங்களுக்கு மனுஷ்ய புத்திரனைப் பிடிக்குமா? என கேட்டு இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்காமல்; உங்களுக்கு கவிதைகள் பிடிக்குமா என கேட்டு இந்தப் புத்தகத்தை உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். இரு கேள்விகளுக்கும் ஒரே அர்த்தம்தான் என்பது கவிதை விரும்பிகளுக்குத் தெரியும்.
0 comments:
கருத்துரையிடுக