பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 29, 2020

கவிதை வாசிப்பு - 1




சல்மாவின் கவிதைகள். காலச்சுவடு மார்ச் 2020-ல் வந்திருந்தது. தனியாக கவிதைக்கு தலைப்பு ஏதும் வைக்கவில்லை. மூன்று கவிதைகள். முதல் கவிதையில் ஒரு பகுதி வருகிறது.

///காற்றில் துடிக்கிறது
குருதியில் நனைந்த சிறுமிகளின்
குரல்///

வாசித்ததில் இருந்து மனதை நெருடுகிக் கொண்டிருக்கிறது.

கவிதைக்கு பயன்படுத்தியிருந்த 'வாரிஸ் டயர்'-ரின் ஓவியம் கவிதையை மேலும் புரிந்துக்கொள்ள வைத்தது. இவர் குறித்தும் இவரின் நாவலான 'பாலைவனப்பூ'  குறித்தும் ஓரளவு தெரிந்திருந்ததும் அதற்கான காரணமாக இருக்கலாம். கவிதையின் கடைசி வரியும் முக்கியம். யாரிந்த சகோதரிகள் , இன்னமும் எங்கோ இருக்கிறார்கள் என்பதுதான் மனதில் வலியைக் கொடுத்தது.

பெண்களை அவள் தன்மையில் இருந்து விலக்கி தங்களின் ஆதாயத்திற்கும் தங்களின் கௌரவத்திற்கும் பங்கம் வராதபடி பாவிக்கும் சமூகம் இன்னமும் உயிரோடும் துடிப்போடும் இருப்பது வேதனைதான். 

எத்தனை நாட்களுக்குத்தான் பெண்ணின் கால்களின் நடுவை வைத்து அரசியல் செய்யப்போகிறார்கள். என்ற கேள்வியை எழவைத்த கவிதை.

வரிகளில் வேதனையை வைத்து எழுதப்பட்ட கவிதை. மனதை. இன்னும் நெருடச்செய்கிறது.

-தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்