பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 14, 2016

கதை வாசிப்பு -13 ‘ஜீசஸின் முத்தம்’

     

கதை வாசிப்பு -13 'ஜீசஸின் முத்தம்'

    லஷ்மி சரவணக்குமாரின் 'மயான காண்டம்' சிறுகதை தொகுப்பில் 'ஜீசஸின் முத்தம்' என்ற கதை உள்ளது.

   தலைப்பை படித்ததும் நமக்குள் ஆர்வம் தூண்டப்படுகிறது. ஒரு பக்கம் ஜீசஸையும் மறுபக்கம் முத்தத்தையும் எந்த புள்ளி இணைக்கும் என நாம் நமது கற்பனைக்கு சென்றுவிடுகிறோம்.

கதை.

   காதல் தோல்வி அடைந்த இருவர் இன்னோரு காதலில் இணைகிறார்கள்.
சாதாரண கதை. ஆனால் கதை சொல்லும் விதம் கவர்கிறது. இதுதான் நடக்கும் என நம் முன் யூகங்களை அடுத்தடுத்து தோற்கடித்து மீண்டும் நாம் நினைத்ததையே கதையில் காட்டும் சுவாரஷ்ய நடை.

   காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு காதல்தான் மருந்தாகும் என கதை தன்னை வாசகர் முன் காட்டுகிறது. தோல்வியும் ஏமாற்றமும் நம்மை ஏமாளியாக்கும் முட்டாளாக்கும் என்பது மட்டும் அல்ல மாறாக இவ்வாழ்வை புரிந்துக்கொள்ளவும் உதவும் என நினைக்கவைக்கிறது கதையின் இரண்டு கதாப்பாத்திரங்கள்.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்