பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 10, 2011

நானும்...


7.10.2011 வாங்கிய புத்தகங்கள். எத்தனை தீபாவளிக்குத்தான் புத்தாடைகளையும் பலகாரங்களையும் வாங்குவது. இந்த தீபாவளிக்கு நான் வாங்கியிருப்பது புத்தகங்கள். இவை வெறும் புத்தகங்கள் அல்ல என் பயணச் சீட்டுகள்.

-தயாஜி-

1ந.பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும்.

- எழுதியவர் சுந்தர ராமசாமி.

2. சுந்தர ரானசாமி நினைவின் நதியில்.

- எழுதியவர் ஜெயமோகன்.

3. நிழல்வெளிக் கதைகள்.

- எழுத்தியவர் ஜெயமோகன்.

4. வாழ்விலே ஒரு முறை அனுபவக் கதைகள்.

- எழுதியவர் ஜெயமோகன்.

5. அந்நியன்.

- எழுத்தியவர் ஆல்பெர் காம்யு

- பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் வெ.ஸ்ரீராம்.

- 1942 வெளிவந்த புத்தகம்.

- இந்த படைப்பிற்காக இதன் எழுத்தாளருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

- பிரெஞ்சு மொழியில் மட்டும் 60,00,000 பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறதாம்.

- கிட்டத்தட்ட உலகின் எல்லா மொழிகளிலும் இந்த புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

6. நினைத்தது போலவே வெற்றி.

- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

7. வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்

- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

8. பின்னடைவுகளைப் பிளந்து முன்னேறுங்கள்.

- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

9. வென்றவர் வாழ்க்கை.

- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

10. ஒரு கப் உற்சாகம்.

- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

11. கான்ஃபிடன்ஸ் கார்னர் - 100 நம்பிக்கை வெளிச்சங்கள்.

- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

12. நம்பிக்கை மின்னல்கள் (கான்ஃபிடன்ஸ் கார்னர் - பாகம் 2)

- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

13. கான்ஃபிடன்ஸ் கார்னர் - பாகம் 3.

- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

பெறும்பாலும் புத்தகக்கடைகளுக்குச் சென்றால், கடைக்காரரைக் கூடத் தொந்தரவு செய்ய விரும்ப மாட்டேன். நானே ஒவ்வொரு அலமாரியாக அலசுவேன். நேரம் எடுத்து ஏறக்குறைய எல்லா புத்தகங்களையும் தொட்டுப் பார்த்துவிடுவேன். ஒரே வருசையில் மூன்று நான்கு முறைகள் கூட வந்திருக்கிறேன். சில புத்தகங்கள் மூன்றாவது முறை வரும்போதுதான் கண்ணில் படும்.

இந்த புத்தகங்களை தலைநகர் உமா பதிப்பகத்தில் வாங்கினேன். வழக்கம் போல கடையில் புத்தகங்களுக்கு இடையில் இருவர் நினைவில் மின்னலாய் வந்தார்கள். ஒருவர் நவின் மற்றொருவர் பாலமுருகன்.

நவின் குறித்த மின்னல்;

“அண்ணே இந்த ஆண்டு எனக்கு 25 வயதாகுது. இந்த வயதில் என் கனவு ஒரு புத்தகம் வெளீயீடு செய்யனும் அண்ணே... எனக்கு லாபம் இல்லாட்டியும் பரவாலை.... என் பெயர் சொல்ற மாதிரி 25-வது வயதில் ஒரு புத்தகம் இருந்தாலே போதும்”

“அப்படியே என்ன புத்தகம் வெளியிடலாம்னு இருக்கிங்க..?”

“ அண்ணே என்னோட பெரும்பாலாகக் கதைகள் அமானுஷ்யக் கதைகளாக இருக்கும்; அமானுஷ்யக் கதைகளின் தொகுப்புன்னு போடலாம்.. எவ்வளவு செலவாகும்..? முதலில் 500 புத்தகம் பிரசுரிக்கலாம்தானே...”

“செஞ்சிரலாம் தயாஜி ஒன்னும் பிரச்சனை இல்லை….”

எனக்கும் நவினுக்குமான இந்த முகநூல் உரையாடல் அத்துடன் முடிந்தது.

( தொடரும்.......)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்