பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 30, 2011

காலில் ஏறும் கரப்பான் பூச்சிகள்


எப்போதும் சிலிர்க்கச் செய்கிறது

அந்த கரப்பான்.....

கொன்ற பின்னரே கால்களை

கீழ் வைப்பேன்.....

ஒவ்வொரு கரண்டி சோற்றை

விழுங்கும் போதும்....

காலடிச் சத்தம் மட்டும்

காதருகில் கேட்கிறது....

கூச்சலுடன் யார் கையோ

கத்தியை வீச....

மிக மிகச் சரியாக

தலையை துண்டாக்கியது....

காணக் கிடைக்காத மூளையில்

முதல் தரிசனம்.....

அலறல் ஓட்டம் கதறல்

சூழலைச் சூழ்ந்தது.....

தெரித்த மூளை கொஞ்சம்

ரத்தம் தாங்கி.....

எதிரே இருந்த தட்டிலும்

ஏனோ முகத்திலும்....

தெரித்து குலைந்து வழிந்து

ஓவியம் ஆனது..........

அதுவரை இருந்த ஆள்

சட்டென விழித்தான்....

திறந்த கண்கள் வெறித்தன

இதயம் துடிக்கலானது............

நானும் விழிந்தேன் விழித்தவனின்

கனவுச் சாலையில்.....

காலில் கரப்பானைக் காணவில்லை

முகம் பிசுபிசுக்கிறது.....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்