பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 03, 2011

வாங்கிய புத்தம்.....


2-2-2011-ல் வாங்கிய புத்தம். விக்கிரமாதித்தன் கதை.
மொத்தம் 32 கதைகள் இருக்கின்றன.

சிறுவனாக இருக்கும் போது தந்தை கொடுத்த அம்புலிமாமாவில் விரும்பி படித்த கதைகளில் ஒன்று. இது போன்ற வேதாளம் தேடும் வேட்டையில்தான் ஆவிகள் குறித்து தகவல்களை சேகரிக்கத் துடங்கினேன்.

இதுமட்டுமல்லாமல் தெனாலி ராமன்;மரியாதை ராமன்; ஜான்கிராமன் ; பீர்பால் ; அக்பர் போன்ற கதைகளை என் சிறுவயது முதல் விரும்பிப்ப் படித்தும்; கேட்டும் வந்திருக்கின்றேன்...

அவைதான் இன்றைட என் வாசிப்புக்கு பிள்ளையார் சுழி. இன்று நான் சந்திக்கும் சிறுவர் சிறுமியரை கேட்டால் மேற்ற்சொன்ன கதைகள் பற்றிய எந்த ஒரு :தெரிதல்: இல்லாமல் இருக்கின்றார்கள்.

இதன் காரணம் என்ன..?

பள்ளி நூல் நிலையமா..?

ஆசிரியர்களா..?

பெற்றோரா..?

என் பால்ய வயதில் இவை நான்கும் ஒரு சேர அமைந்தது.


இதனை எழுத்துச் சித்தர் என அழைக்கப்படும் இந்திர சௌந்திரராஜன் அமானுஷ்ய நாவலாக எழுதியுள்ளார்.

சரி வெளிப்படையாகப் பேசுவோம் உங்களில் எத்தனைப் பேர் இந்த கதைகளைப் படித்திருக்கின்றீர்கள்...
அல்லது கேள்விபட்டுள்ளீர்கள்..??

இது போன்ற நம் தமிழர்களின் காலம்காலமா சொல்லப்பட்டு வாசிக்கப்பட்ட கதைகள் என்னஎன்ன இருக்கின்றது தெரியுமா..?

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்