பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 18, 2009

சுஜாதா....


சுஜாதா பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...

1935ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தார். மத்திய அரசு விமானப் போக்குவரத்து இலாகாவிலும் பங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் ப்போது இரண்டு நிறுவனங்களில் ஆலோசகராக பணிபுரிந்தார். அம்பலம் என்னும் இணைய இதழுக்குப் பொறுப்பாசிரியராக தனது இறுதிக் காலம் வரை பணிபுரிந்தார். தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரது முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார். 1993இல் மைய அரசின் அறிவியல், தொழில்நுட்ப விருதானNCTC விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையை பரப்பியதற்காக சுஜாதாவிற்கு அளிக்கப்பட்டது. தனது மகத்தான படைப்பாற்றலால் 50 ஆண்டுகாலம் தமிழ் வாசக பரப்பை ஆக்ரமித்திருந்த சுஜாதா 27.2. 2008ல் சென்னையில் மறைந்தார். அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன். மகன்கள்: ரங்க பிரசாத், கேசவ பிரசாத்.

(நன்றி உயிர்மை)

இப்படிக்கு தயாஜி வெள்ளைரோஜா..

சுஜாதாவின் வழி, தனிவழி புது வழி...





சுஜாதாவின் "சிறு சிறுகதைகள்" என்ற புத்தகத்தில், என்னைக் கவர்ந்தவற்றை இங்கே இடுகின்றேன்..... இது கொஞ்சம் சுவாரஸ்யமான ஒன்று நீங்களும் முயற்சிக்கலாம்.....(நான் இன்னும் ஆரம்பிக்கலை.. வேலை அதிகம்) கதையின் தலைப்பு நீளமாக இருக்கலாம்..


ஆனால் கதை இரண்டே இரண்டு வரிகளில்தான் இருத்தல் வேண்டும்.. கவனியுங்களேன்.. இரண்டு வரிகளின் தான் கதை எழுதப்பட வேண்டும்........ இரண்டு வார்த்தை கதைகள்:



1. தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்

கதை : "ஐயோ சுட்டுடாதே!"


2.தலைப்பு : சுவரில் ஆணியடிப்பவன் கேட்ட கடைசி வார்த்தைகள்.

கதை : "கன்சீல்ட் வயரிங்ப்பா"


3.தலைப்பு : ஆராய்ச்சி சாலையிலஇருந்து ரோபோ வெளியே வந்தது

கதை : "டாக்டர் க்ளோஸ்"


4.தலைப்பு : வசந்தாவின் கணவன்

கதை : "சுசீலாவோடு எப்படி?"


5.தலைப்பு :விடுமுறைக்கு வந்த கார்கில் வீரனும் கிராமத்து

நண்பர்களும்

கதை : "ரம் கொண்டாந்திருக்கியா?"


6.தலைப்பு : மகன் தந்தைகாற்றும்

கதை : "இ.மெயில்"


7.தலைப்பு : என்னை யாரோ பார்க்கிறார்கள்

கதை : கண்ணாடி



8.தலைப்பு : ஆபிஸில் எத்தனை ஆம்பளைங்க?

கதை : முதலிரவில் கேள்வி.

டிசம்பர் 17, 2009


21 வயதில் "கெடா மாநில எழுதாளர் சங்கம்" நடத்திய சிறுகதை போட்டியில் "ஆறுதல் பரிசு" கிடைத்தது, ஆறுதல் அடையாத "கை" இன்னமும் எழுதுகோளை இயக்குகின்றது.....

அம்மா காட்டிய அடையாளம்....


அன்று வாங்கிய முத்தம்...இன்னமும் ஈரம் காயாமல் ...இதயத்தை இயக்கிக்கொண்டு இருக்கின்றது...அம்மா

நம்பிக்கை என்பது நம்புவது மட்டுமல்ல.... நம்பிக்கையோடு இருத்தல்...

டிசம்பர் 11, 2009


டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கிய விருது, இளம் கவிதை துறைக்காக எனக்குக் கொடுத்த மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கு நன்றி...
௨௦௦௯ (23வயதில்//)

எழுத படிக்க தெரியாதா அம்மா...
நான் பிறக்கும் முன்னே எழுத ஆரம்பிச்சா அப்பா.....
என் எழுத்து இவர்களுக்கு சமர்ப்பணம்...

இப்படிக்கு ,
தயாஜி வெள்ளைரோஜா

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்