பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 04, 2009

பெற்றால் மட்டும் போதாது.....




அந்த மீசைக்காரருக்கு அன்று,
அவ்வளவுக் கோவம்...
இருக்காதா..?

பெத்தப் பிள்ளை;
அப்பன் பேச்சைக் கேக்காட்டி....?

ஒரேக் குழப்பம்

"ஏன் கேக்கனும்...அவர் மட்டும் என்ன யோக்கியமா...?"

அவன்,
கேள்வியும் ஞாயம்தானே...!

அப்பன் வழியில் சுப்பன்....
தும்பை விட்டு,
வாலைப் பிடிக்கு;
இப்படி பலர் ,உண்டு.......
வளரும்போதுகண்டுக்கொள்ளாமல்...!
படிக்கும்போது பாசம் காட்டாமல்....!

பிள்ளைப் பெற்றும் ;
கல்யாணக்காளையாகத்திரியும்
'இந்த அப்பாக்கள்.....!?
பிள்ளைகளுக்கு,
அறிவுரைச் சொல்ல ,
அருகதையற்றவர்கள்....?


தன் கோவத்தைமனைவியை அடித்தும்...
வீட்டுப் பொருட்களை ஒடித்தும்.....
சேதப்படுத்தும் இவர்கள்;
என்று ;
புரிவார்கள்....?

தான் மாறினால்தன் சுற்றமும் மாறுமென்று....!

பெற்றால் மட்டும் போதாது...???

அவனில் செயல்களுக்குப்பொருட்பேர்க்கும் ப்க்குவமும் பொறுப்புணர்ச்சியும்வரவில்லையெனில்.......?

இவர்கள் தீருந்தும்காலமும்
அருகிள் இல்லை.........??

............தயாஜி வெள்ளைரோஜா.................

மழைச் சாரளும் மனிதக் கீறளும்....?




மழை வேகமாகவும்...
கொஞ்சம் மெதுவாகவும்...?!?!?
பெய்துக் கொண்டிருந்தது;

நான் மட்டும்,
தனியாய்
இருப்பதால்இந்த ஆசை!!!


....ஆசை மட்டும்தான்அதை யாரும்,
பேராசையாக்க முயற்சிக்காதவரை.........
அது ஆசை மட்டும்தான்...

தனியாய் இருப்பதால்;
சூடானத் தேநீருக்கு,
உத்தரவு போட இயலவில்லை....!
போட்டால் மட்டும்உடனே வந்துவிடும் ,
என்ற எந்த...

உத்தரவாதமும் இல்லை....

அட...
மழை இப்போதுவேலை நிறுத்தம் ,
செய்யத் தொடங்குகின்றது....!!
இதைவிட,
சந்தர்ப்பம் வேறு வாய்க்காது,

ம்ம்ம்...,,.,...ம்ம்..ம்.ம்.ம்.ம்.
மழையில் நனைந்தால் சந்தோஷம்தான்...!

கூடவே அந்த பாழாய்ப்போன,
ஜலதோஷ்மும் வந்துவிடும்;

அப்புறம் தொல்லை எனக்குத்தான்.....??
இருந்தாலும்,
இன்று வேறு வழியில்லை..

அப்புறம் என்ன..?
நேற்றைக்கு வந்தவன்;
புது "வாடிக்கையாளன்"....??
எதுவுமேத் தெரியலை...

அங்கங்கே கடிச்சிவைச்சிட்டான்...!!
நகக்கீறல் வேறு...?
வயது பதினாறுதானே..!!!
அவனும் என்ன செய்வான்..

தினம் தினம் ;
இந்த ஆண்கள் கொடுக்கும்..!
அடையாளங்களுக்கும்... காயங்களுக்கும்.....

இது போன்ற;
லேசான,
மழைத்தூறல்கள்தான் என்
போன்றோருக்கு'மருந்து'

ஆண்களுக்கு விருந்தாகும் எங்களுக்கு
ஆண்டவன் தரும் மருந்து....

நனைய வேண்டி ;
கதவைத் திறக்கின்றேன்.....

இரண்டு வாடிக்கையாளர்கள்..!
இன்றும் எனக்கு;

மருந்து இல்லை....



................தயாஜி வெள்ளைரோஜா.............

காத்திருங்கள்.....



.......ஸ்.....
சத்தம் போடாமல் அழுங்க....
அவன் தூங்கறான்....
பாருங்களேன் சிரித்த முகமாய்..

அவனின் தூக்கம்.....
என்ன,
குறட்டைதான்காணோம்...?!


.ம்........ம்.......ம்........ம்..
நீ இருந்து,
எனக்கு செய்யனும்..
நான் உனக்கு
செய்யும்படி செய்துட்டியே..?!?!?!!!?

ராத்திரிக்கு வரும்போது
....
இரகசியமாய்.......
ஒளிஞ்சிருப்பே.....
இனி எந்த கதவுக்குப் பின்னால்;
நான் வந்துப் பார்க்க....?

உனக்கு எப்படிதீ வைப்பேன்....?
உன் தூக்கம் கலைந்திடாதா....?

நேத்துக்கூட எனக்கு;
வேலை;
அப்போ......;


"அப்பா இன்னிக்கும் வேலையாநாளைக்காவது என்கூட இருப்பியா...?"


பெத்த மகன் கேட்டகடைசி வார்த்தை

ஏம்பா உன் ,
அம்மா தனியா...
இருக்காள்னு...;
துணையாய் போயிட்டயா..?


ஆமா....
அவளுக்கு தனிமைனா பயம்....??!!
சரி; நான்
வரவரைக்கும் அம்மாவை
பத்திரமாய் ;

...பார்த்துக்கோ..........!!!??



..................தயாஜி வெள்ளைரோஜா..............

திகைப்பு

என்றும் இல்லாமல்,
அன்று மழைபெய்தது.....

வழிநெடுகிலும்
சமிக்ஞை விளக்கு
வழிவிட்டது......

வீட்டிற்கு வந்ததும்
சாப்பாடு,

தயாராய் இருந்தது.....

அப்பா என்னை
அதிகக் கேள்விகள்
கேட்கவில்லை.......

அண்ணி கூட,
சிரித்தார்..

உறவினர்கள் சிலர் வந்தார்கள்....
அழைப்பிதல் கொடுத்து,
என்னையும்

"வா'
என அழைத்தனர்....!

மேலதிகாரி...
என் கருத்துக்கு
செவிசாய்த்தார்...!

எல்லாம் வழக்கத்துக்கு...
மாறாக நடக்க....

...........இன்றளவும்.........

ஒன்று மட்டும் நேராய்
நடந்தது....?

அவள் கடக்கின்றாள்
நான் திகைக்கின்றேன்....




........................தயாஜி வெள்ளைரோஜா...................

ஆகஸ்ட் 31, 2009

பிறந்தகத்தில் தீபாவளி (2008)

வேலை நிமித்தமாக..
கோலாலும்பூர் வந்திருந்தாலும்,
தீபாவளியன்று......
என் பிறந்தகத்தைப் பார்க்கவேண்டிய
பயணத்திற்கு 'டிக்கெட்' வாங்கியிருந்தேன்...

"ஆறுமுகம் பிள்ளைத் தோட்டம்"
என்றும்,
"யு.பி தோட்டம்"
என்றும்,
இருத்ரப்பினர புரிந்து வைத்திருந்தாலும்......
என் மனதில் தங்கியிருக்கும் பெயர்
"யு.பி தோட்டம்"

அங்குதான் என் தாயின் கர்ப்பப்பையில்,
எனக்கென்ற இடத்தை
ஓடிப் பிடித்திருந்தேன்....!

மாதம் இரண்டாம் ஞாயிறு,
எல்லோர் வீட்டிலும் நிச்சயம்....
கோழிக்கறி.....

அதற்கெனவே.....
இரு வியாபாரிகள்
கொஞ்சம் 'சீக்கு' பிடித்தக்
கோழிகளை விறக வருவர்...

மாதத்தின் கடைசி வாரங்களில்,
கூட்டு, பருப்பு, ரசம், தன்ணீர்
என வரிசையாக காத்திருக்கும்
எங்கள்ம் வயிற்றுப்பசியைப் போக்க........

நான் படித்த பள்ளிக்கு பெயர்,
'லாடாங் பெர்படானான் தமிழ்ப் பள்ளி'

இன்று பலரின் முயற்சியால்
சிறப்பாக வளர்ச்சிப் பெற்றுள்ளது.....

குடிகாரத் தகப்பன்களாலும்...
ஓடிப்போன சில மனைவியர்களாலும்..
என் நண்பர்கள்,

வளர்ச்சி எனற
கோட்டையை அடையும் முன்னரே....!

முதிர்ச்சி எனும் பாதாளத்தில்
விழுந்திருந்தனர்....!

இந்த தீபாவளிக்கு,
நான் வருவது அவர்களுக்குத்
தெரியாது...

அப்படித் தெரிந்திருந்தால்....?
அந்த ஒரு நாள்
எனக்காக்.....

பணக்காரர்களாக வாழ்ந்து,
அடுத்த் தீபாவளிவரை
வட்டிக் கட்டிக்கொண்டிருப்பர்...........

பக்கத்தில் இருக்கும்
பால்மரக்காட்டில்...........

'பேய்கதை' எழுதச் சென்றோம்...
நானும் அப்போதைய என் 'வாசக' நண்பனும்,

அங்கு அட்டைக் கடித்ததையும்
நாய்கள் துரத்தியதையும்
எப்படி எழுத முடியும்....?
என அந்த பேய்க்கதைக்கு
முற்றுப்புள்ளி வைத்தோம்

விடுமுறைக் காலங்களில்
பெற்றோருக்குத் தெரியாது
குட்டையில் குளித்து......
சிகரெட்டில் வகை வகையாய்
புகைவண்டி விட்டு.......!!??

கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு,
சமைத்த பொழுது
எங்களுள் இருந்த எதிர்ப்பார்ப்பு
ஒன்றுதான்.............!
இந்த குட்டையில்
"தண்ணீர் எப்பதான் சுத்தமா வரும்....?"

சில வயதுவரை.........
நான் காலணியோ-சிலிப்பரோபோட்டு
ரோடில் நடந்ததில்லை...?

அதனாலெயே எனக்கும் ..

ஆணிகளுக்கும் எனக்கும்,
ஒரு தொடர்பு உண்டு.......
இந்த தீபாவளிக்கு அப்படி செய்யவோ....?

சீ............சீ.........

இப்போ நான் பெரியப் பையன்....!
முன்பின் அறிமுகம் தெரியாதோர்
இல்லம் நாடினால்கூட.......

தீபாவளி உபசரிப்பும்
தீபாவளி பணமும் உறுதி...........

ஒரு தீபாவளியில் மழை வந்தும்....
பட்டாசு வெடித்தேன்

என் தாயும் வெடித்தாள்......
அறையில் பட்டாசு வெடிக்காக் கூடாதென்று.........

பூண்டு பட்டாசுக்கு மட்டும்,
பஞ்சம் இல்லை
அப்பாவுக்குப் பிள்ளிகளின் பாதுகாப்பு முக்கியம்.......

எனக்குத் தெரிந்த சில 'அப்பாக்களே'
இங்கு பாதுகாப்பாக இருக்கவில்லை.....!!

அப்போ நான் பார்த்த பெரிசுகள் இப்போது இருக்காது.....
அதுமட்டுமா...?

சில சிறுசுகளையும் என்னால்
பார்க்க முடியாதுபோலும்.....
அங்குதான் பல
திருவிழாக்கள் நடந்தனவே......!!!


பலிகொடுக்கும் விழாக்கள்மாறி......!
இன்று பலியாக்கும் விழாக்களாகியுள்ளதே........?!
தீபவளி என்றாலும்
என் சிந்தனையில்

என் தோட்டம்தான்.........!?
இப்போதுதான் தோன்றுகின்றது...
என் தோட்டம்

'துண்டாட்டப்பட்டுவிட்டது'

அங்கு இன்று வெறும் மண்ணோடு....
பாதி கட்டிய நிலைகளில்...!
கடைகளும்,
சில நல்லவர்களின் இல்லங்களும்.....

இருந்தும் நான் செல்வேன்
என் பிறந்த மண்ணில்தான்
என் தீபாவளி.............

என் கால்கள் ஏக்கம் கொள்கின்றது

எனது 'யு.பி தோட்ட மண்ணை மி(ம)திக்க.....

எனது பிறந்தகமான
'யு.பி' தோட்டத்திற்கு


இனிய தீபவளி வாழ்த்துகள் தாயே.....!




.............தயாஜி வெள்ளைரோஜா.............

ஆகஸ்ட் 30, 2009

பின்னழகு...!(முடிக்கும் வரை பொறுங்கள்....!)

முன்னே பிறந்ததனால்....
பல மூட்டை..
என் பின்னே....!

"தம்பிக்கும் தங்கைக்கும்
நீதான் உதாரணம்"


அம்மாவுக்குத் தெரிந்தது.....
இதுதான்
இது மட்டும்தான்...

என் தவறை ...
அவர்களும் தொடர்வானேன்..?
புத்திக்குத் தெரியுமே,

சரி எது..?
பிழை எது..?

முன்னவன் குழியில் விழ..
பின்னவனும் குழியில் விழுவானேன்....?

பாதையை மார்றினால்..
பயணங்கள் தொடருமே.....!!

என் தப்பை ..
அவன் செய்வானேன்...?
என் மீதுகுறை சொல்வானேன்...?

கடைக்கும் நானே..

கடனுக்கும் நானே..

ஏச்சுக்கும் நானே..
என் பின்னரின்..
வீழ்ச்சிக்கும் நானா....?

அவரவர் பாதை..
அதிலொரு பயணம்

உதாரணம் போதும்..
உடன் வருவதை..

தவிருங்கள்.....


................தயாஜி வெள்ளைரோஜா..............

காலனின் சேவகன்.... (யாரிவன்...?)


சாலைக் குழிகளைகடந்து,
சாதுவாகத்தான் போனேன்....

'முந்திப்' போன,
பல வாகனங்களைப்
'பிந்திப்' போனேன்..!

அரைகுறை,
அறிவிப்புப் பலகை......
சற்றே என்னைக் குழப்பியது..!


"சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

அட யாரதுஇவ்வளவு வேகம்....?

...........ஓ.....................

மகளுக்கு பள்ளிக்கு,மணியாச்சோ...?
அதான் அவசரமாய்...!

நூறில் போகும் என்னை,
முந்திக்கொண்டு....
சரி....சரி....
போகட்டும்....
நாம் ஒதுங்குவோம்..

அதோ அவங்க ரொம்பதூரம் போயிட்டாங்க.....

அடுத்த சில
வினாடிகளில்ஒரே பதட்டம்...!, பரபரப்பு...!,குழப்பம்...!,

"@$#%$%$^%&*^*&^(*"
என்ற குழப்பத்தில் கூட்டம் கூடின....!!!??

சாலையில் விபத்து

ஆம்...

என்னை முந்திப்போன ,வாகனம்....ஏன் அவசரம்....?


................தயாஜி வெள்ளைரோஜா.................

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்