பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 01, 2020

எதற்கும் ஒரு விலை உண்டு...

   தூக்குவதில் சிரமம் இருபின்னால்னாலும் பாதியில் விட முடியாதே. எடுத்துவிட்டான். பிடித்துக்கொண்டான். ஓடுகிறான். நிற்க கூடாத ஓட்டம். இந்த வேகத்தில் ஓடினால் மட்டுமே தன் முகம் அவ்வளவாக பிறர்க்கு அடையாளம் தெரியாது.

    சில நாட்களாக அந்த கருப்பு அங்கி மனிதனை இவன் கவனித்துக் கொண்டு வருகிறான். தினம் மாலை நான்கு மணிக்கு வருவார். அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்துக்கொள்வார். போவோர் வருவோர் முகத்தில் எதையோ தேடுவார். தலை அங்குட்டும் இங்குட்டும் ஆடினாலும், கைப்பிடி மட்டும் அந்த பெட்டியில் இருக்கும். இரவு ஏழு மணிவரை அங்கிருப்பார். சட்டென அவனது கண்களில் இருந்து காணாமல் போய்விடுவார். தொடர்ந்து மூன்று நாட்களாக கவனிக்கிறான். எங்கிருந்து வருகிறார் எப்படி போகிறார் என அவனுக்குத் தெரிவதில்லை. நான்கு மணிக்கு இருப்பார். ஏழு மணிக்கு இருக்கமாட்டார்.

    அவனுக்கு அந்த மனிதன் மீது சந்தேகம் எழுந்தது. யாரை தேடுகிறார். எதற்கு தேடுகிறார். பெட்டியில் என்ன வைத்திருக்கிறார். ஏன் பெட்டியை இத்தனை ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

    ஆக அந்த பெட்டியில் யாருக்கோ கொடுக்கவேண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது பாதுகாக்கப் படுகிறது. அப்படியானால் நிச்சயம் அதற்கு ஒரு விலை உண்டு.

   மாலை மணி 4.01. அந்த மனிதர் இருக்கிறார். பழையடி அவரின் காத்திருப்பும் கைப்பிடியும் தொடர்கிறது. அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்கிறான்.

   மாலை மணி 6.55. பெட்டியுடன் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் இடம் வந்து விட்டது. இத்தனை வேகமாய் உசேன் போல்ட் கூட ஓடி வந்திருக்க முடியாது. மூச்சு வாங்கியது. அதுவா முக்கியம். இந்த பெட்டிதான் முக்கியம். அதிலுள்ள ஏதோ ஒன்றுதான் முக்கியம்.

   பாரத்தை வைத்தே, ஒரு வேளை தங்க கட்டிகளாக இருக்கலாம் என யூகித்திருந்தான். மேஜை மீது பெட்டியை வைத்தான். நன்றாக துடைத்துக் கொண்டான். வழக்கம் போல பூட்டுகளைத் திறக்கும் கம்பிகளைக் கொண்டு தன் வித்தையைக் காட்டுகிறான். ஆச்சரியம். ஒரே அழுத்தத்தில் பெட்டி திறந்துக் கொண்டது. அவசரத்தில் திறக்க, பலமான காற்று முகத்தில் அடித்தது. கண்களில் தூசு விழுந்துவிட்டது.

   முடியபடி நன்றாகவும் வேகமாகவும் கண்களைக் கசக்கிக்கொள்கிறான். திறக்கிறான். பெட்டி காலியாக இருக்கிறது. எப்படி சாத்தியம்.!! காலி பெட்டியாக இருக்க வாய்ப்பே இல்லை. பெட்டியை துக்கிப் பார்த்தான். பாரமே இல்லை. பெட்டியை மேலும் கீழும் குலுக்கிக் கொண்டிருக்கிறான்.

   பெட்டியில் ஏதோ இருக்கிறது. அது எங்கிருக்கிறது என அவனுக்கு பிடிபடவில்லை. பதட்டமாகிறான்.

    அவன் தன் பின்னால் திரும்பாதவரை அங்கு  நின்றுக் கொண்டுக்கும் உருவத்தை அவன் தெரிந்துக் கொள்ளப் போவதில்லை...


#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்