பிப்ரவரி 24, 2021
பிப்ரவரி 23, 2021
‘மலேசிய நாவல்கள்’ – நான்காவது கட்டுரையை முன் வைத்து
‘மலேசிய நாவல்கள்’ – மூன்றாவது கட்டுரையை முன் வைத்து
பிப்ரவரி 22, 2021
‘மலேசிய நாவல்கள்’ – இரண்டாவது கட்டுரையை முன் வைத்து
‘மலேசிய நாவல்கள்’ – இரண்டாவது கட்டுரையை முன் வைத்து
தற்போது ம.நவீன்
எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின்
இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது
முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.
இரண்டாவது கட்டுரையாக, ‘மெல்லுணர்ச்சிகளின்
பூஞ்சணம்’ என்ற தலைப்பில் ரெ.கார்த்திகேசு நாவல்கள் குறித்து எழுதியுள்ளார்.
ரெ.கார்த்திகேசு ஒரு வணிக எழுத்தாளர் என
ஆசிரியர் கட்டுரையைத் தொடங்குகின்றார். அதென்ன வணிக எழுத்தாளர். வணிகம் என்பது வியாபாரம்
என நன்கு தெரியும். ரெ.கார்த்திகேசு எழுதி எழுதி வியாபாரம் செய்து சம்பாதித்தாரா? அப்படி
எழுதி எழுதி சொத்துகள் ஏதும் சேர்க்க முடியுமா என்ன ? என சிலரை கேள்வி கேட்க வைக்கிறது. அவர்களும் அதனை ஒரு அறிவார்த்த கேள்வியாக நம்பி கேட்கவும்
செய்கிறார்கள்.
தீவிர இலக்கியம் வணிக இலக்கியம் என்கிற இரண்டுக்கும் உள்ள
வித்தியாசங்கள் தெரிகின்ற வரை அல்லது அதனை அறிந்துக் கொள்ள முயலாதவரை அர்த்தமற்ற கேள்விகளும்
அதையொட்டிய அர்த்தமற்ற விவாதங்களும் தொடரத்தான் செய்யும்.
இதனை அறிந்துக் கொண்டதாலும் தனது முன்
அனுபவத்தாலும் கட்டுரையாசிரியர் வணிக எழுத்துகள் குறித்து தெளிவு செய்கிறார். வணிக எழுத்துகளை சாகசக் கதைகள்,
குற்றவியல் கதைகள், மெல்லுணர்ச்சிக் கதைகள், லட்சியவாதக் கதைகள் என நான்காக பிரிக்கின்றார். ‘பொதுவாக வியாபார நோக்கம்
கொண்ட அவை மக்களுக்குப் பிடித்ததை அவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு மட்டுமே எழுதுவதால்
ஜனரஞ்சக இலக்கியம் என சொல்லப்படுகின்றது’ என்கிறார். தான் கூறும் நான்கு பிரிவுகளுக்கும்
ஏற்ற எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் சொல்லவருவதை வாசகர்கள்
எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.
வணிக இலக்கியத்தையோ தீவிர இலக்கியத்தையோ
பற்றிய விளக்கங்கள் என்னதான் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசங்களை
சொல்லித்தான் ஆகவேண்டியுள்ளது. அவ்வாறே இக்கட்டுரையும் அமைந்துள்ளது.
ஒருவர் எழுதுவது வணிக இலக்கியமோ தீவிர
இலக்கியமோ, அது அவரவர் தேர்வு. ஆனால் தான் எழுதுவது என்ன வகை என தெரியாமல் சுற்றிக்
கொண்டிருப்பதுதான் முரண்நகை. அதுவாவது பரவாயில்லை, இன்னொரு ரகமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு தாங்கள் எழுதுவது வணிக எழுத்து
என நன்றாக தெரியும் ஆனால் தங்கள் மீது தீவிர
இலக்கியவாதிக்கான போர்வையை போர்த்திக் கொள்ள எல்லாவகையான காரியங்களையும் செய்கிறார்கள். அதன் பின்னால் இருக்கும் அரசியல் கவனிக்க வேண்டிய
ஒன்று. இவர்களைப் போன்றவர்கள்தான் சிக்கல்களுக்கு
மூல காரணமாக இருக்கிறார்கள்.
ரெ. கார்த்திகேசு எழுதிய, வானத்து வேலிகள், தேடியிருக்கும் தருணங்கள், அந்திம காலம், காதலினால்
அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் என்ற ஐந்து நாவல்களைப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது.
ஐந்து நாவல்களின் சுருக்கத்தையும் ஆசிரியர் சொல்லிவிட்டு அந்நாவல்களின் பலம் பலவீனங்களை
ஆராய்கின்றார். யோசிக்கையில் இதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவையாயிருக்கிறது. வெறுமனே
ஒரு படைப்பையோ அவர் மீதான பிம்பத்தையோ கணக்கில்
கொள்ளாமல், ஒரு முழுமையான பார்வையைக் கொடுக்க
அவர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. ரெ.கார்த்திகேசு மீது மரியாதை உள்ளதாகச் சொல்லிக்கொள்பவர்களோ, அவர்
முக்கியமான படைப்பாளி என முன்மொழிகின்றவர்களோ அவரது படைப்புகளை முழுமையாக வாசித்துள்ளார்களா
என்பது ஐயம் கொடுக்கும் கேள்விதான்.
‘பெரும்பாலும் மலேசிய எழுத்தாளர்கள் செய்யும் அடிப்படைத் தவறுகள்
இல்லாமல் ரெ.கா-வின் நாவல்கள் உள்ளன. வசனங்களின் புழங்கு மொழி, பிற இன மக்களிடம் பேசும்
வசனங்களின் நேர்த்தியான மொழி, காலங்களில் குழப்பம் இல்லாமை என தன்னை ஒரு சிறந்த பேராசிரியர் என நிரூபித்துள்ளார்’
என்கிறார்.
ரெ.காவின் புனைவின் தரத்தை மட்டுமே இக்கட்டுரை
ஆராய்கிறது. வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும் வகையிலும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அவரின் இதர செயலூக்கத்தினால் உருவாகியிருக்கும்
ஆளுமையைக் கொண்டு அவரது புனைவுலகை மதிப்பிட்டுக் கொண்டிருக்காமல் இரண்டுக்குமான வித்தியாசத்தை
கண்டறிய இக்கட்டுரை உதவும். இக்கட்டுரையை மூழுமையாக வாசிக்கின்றவர்களுக்கு அது புரியும்
என எதிர்ப்பார்க்கலாம்.
#தயாஜி
பிப்ரவரி 15, 2021
‘மலேசிய நாவல்கள்’ – முதல் கட்டுரையை முன் வைத்து
‘மலேசிய நாவல்கள்’ – முதல் கட்டுரையை முன் வைத்து
தற்போது ம.நவீன்
எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின்
இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது
முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.
முதல் கட்டுரையாக, ‘புனைவின் துர்கனவு’
என்ற தலைப்பில் கோ.புண்ணியவான் நாவல் குறித்து எழுதியுள்ளார்.
கோ.புண்ணியவான்
‘நொய்வப்பூக்கள்’, ‘செலாஞ்சார் அம்பாட்’ ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். சிறுகதைகளுக்கே
உரிய ஒருமையும் நாவலில் இருக்க வேண்டிய உள் இழைகளும் கொண்ட குறுநாவல்கள் இங்கு நாவல்களாக
அங்கிகரிக்கப்படுவதைச் சொல்லி இவ்விரு நாவல்களையும் அத்தகைய பட்டியலில் இருப்பதைச்
சுட்டிகாட்டுகிறார்.
‘நொய்வப்பூக்கள்’ நாவலின் பலவீனம் கருதியும்
அது ஜனரஞ்சக வாசிப்பிற்கானது என்பதாலும் அதனை
சில வரிகளிளேயே சொல்லிவிட்டு அடுத்த நாவலுக்குச் செல்கிறார். ‘செலாஞ்சர் அம்பாட்’,
கோ.புண்ணியவானின் இரண்டாவது நாவல். மலேசியாவில்
அதிகம் கவனம் ஈர்த்த நாவலும் கூட.
1983-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். இக்கட்டுரை அந்நாவல் கொண்டுள்ள பலவீனங்களையே முன்னிலைப்படுத்துவது
போல முதல் வாசிப்பில் தெரியலாம். மறுப்பதற்கில்லை, ஆனால் அந்நாவலையும் அதனை எழுதியவரையும்
மறந்து மீண்டும் இக்கட்டுரையை வாசிக்கும் போது, வரலாற்று பின் புலம் கொண்ட நாவலையோ கதைகளையோ எழுதுவதற்கு
எத்தனை மெனக்கெடல்கள் வேண்டும் என்பதைக் காட்டும் முக்கியமான கட்டுரை.
அதற்கான பல உதாரணங்களை கட்டுரையாசிரியர்
இந்நாவலில் இருந்தே எடுத்துரைக்கின்றார். நாவலுக்கு
களப்பணி இன்றியமையாத ஒன்று. சிறு தகவல் பிழையும் படைப்பைக் கேலிப்பேச்சுக்கு ஆளாக்கிவிடும்
என்கிற எச்சரிக்கை உணர்வை இக்கட்டுரைக் கொடுக்கின்றது.
நாவலுக்கான நுட்பம் எங்கே உள்ளது. எங்கிருந்து
கணக்கிடப்படுகின்றது என்பதை சில கேள்விகளின் வழி சொல்ல முற்படுகின்றார். சொல்லாமல்
விடுவதாலும் அல்லது சுருங்கச் சொல்லுவதாலும் நாவல் அதற்கான நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றது.
விரிவாக சொல்ல அனுபவமும் அறிதலும் அவசியமாகின்றது. அதற்கான கள்ப்பணி மிக முக்கியமானது.
நாவலின்
பலவீனங்களையே அதிகம் இக்கட்டுரை பேசியிருந்தாலும், ‘தமிழர்கள் கொத்தடிமைகள் அக்கப்பட்டு
எந்தச் கூலியும் இல்லாமல் நிலத்தைப் பண்படுத்தி
பெரும் லாபம் ஈட்டும் வளமாக மாற்றி, அதில் எந்த பலனும் அனுபவிக்காமல் இருந்துள்ளதற்கான
சான்றுதான் ‘செலஞ்சார் அம்பாட்’ என்று சொல்வதன்
வழி நாவலை வாசிக்க தூண்டுகின்றார்.
#தயாஜி
பிப்ரவரி 14, 2021
‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக ….
‘மலேசிய நாவல்கள்’ – தொடக்கமாக ….
தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை
வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள்
குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார்.
116 பக்கங்களில் அவ்வாறு இருபத்து நான்கு நாவல்கள் பற்றி எழுதியிருப்பது ஆச்சர்யம்தான். அதைக்காட்டிலும்
அத்தனை நாவல்களை வாசித்திருப்பது அதைவிடவும் ஆச்சர்யம்.
தொடக்கமாக
‘மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்’ என்கிற கட்டுரையை எழுதியுள்ளார். இந்த தொகுப்பிற்கான
காரணத்தையும் அதன் தேவையையும் இதன் வழி தெளிவுபடுத்த முயன்றுள்ளார். முக்கியமான கட்டுரையாகவும்
இது அமைந்துள்ளது. பொதுவாக ரசனை விமர்சனம் மீதான பார்வையை பலரும் பலவாறாக புரிந்துக்
கொள்கிறார்கள். அதனை குறைத்தும் மதிப்பிடுகின்றார்கள். இக்கட்டுரை ரசனை விமர்சனம் மீதான
பார்வை பலப்படுத்தியுள்ளது.
‘…. அதன் நோக்கம்
உரையாடல்களையும் விவாதங்களையும் உருவாக்குவதுதான். ரசனை இலக்கிய விமர்சனம் என்பது ஒரு
வாசகன், ஒரு புனைவின் மேல் சிறந்த வாசிப்பை வழங்கும் முயற்சி. அவன் அதில் உள்ள காட்சிகளைக்
கற்பனையால் நிகழ்த்திப் பார்க்கின்றார். மேம்பட்ட ஒரு பார்வையை வைக்கிறார். அது விவாதமாகின்றது.
பின்னர் அங்கிருந்து புதிய வாசிப்பு முறை உருவாகிறது.’ என்று கட்டுரையாசியர்
கூறுவதில் இருந்து ரசனை விமர்சனத்தின் அவசியத்தை நாம் புரிந்துக் கொள்ளலாம்.
ரசனை விமர்சனம் எப்போதும் நிலையான முடிவை சொல்வது
அல்ல. அது வாசகர்களுக்கு பல புதிய திறப்புகளைக் கொடுக்கின்றது. அதன் மூலம் ஏற்படும்
உரையாடல் மிக அவசியமான ஒன்று.
அவ்வாறான ரசனை விமர்சனத்தை புறக்கணிப்பதின் வழி யாருக்கும்
ஆவப்போது ஒன்றுமில்லை. ஆனால் அதனை நம் பார்வையில் இருந்து சொல்வதற்கு உழைக்க வேண்டியுள்ளது
, அப்படைப்பை வாசிக்க வேண்டியுள்ளது.
இப்புத்தகத்தை
வாசித்து, எழவிருக்கும் கேள்விகளை ஒரு வாசகனாக இருந்து நான் கவனிக்க வேண்டியுள்ளது.
ஏனெனின் சொல்லப்பட்டிருக்கும் நாவலை வாசிக்காமல் நாவல் பற்றிய விமர்சனத்தை வாசிப்பது
சமயங்களில் அந்நாவல் வாசிப்பில் இருந்து என்னை அந்நியப்படுத்திவிடும் வாய்ப்புகள் உள்ளன.
அதே சமயம் இக்கட்டுரைகளையொட்டிய என் கேள்விகளுக்கு ‘முதலில் நாவலை வாசிங்க அப்பறமா
பேசலாம்..’ என யாரும் சொல்லிவிட்டால் பிறகு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் அக்கேள்விகள்
என் சுய வாசிப்பிற்கு மிக அவசியமானது.
இனி ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்க வாசிக்க, அது
குறித்து நாம் பேசலாம்….
#தயாஜி
சலூன் கடைக்காரரின் சயின்ஸ்
#குறுங்கதை 2021 - 7
கடவுளின் குரல்
#குறுங்கதை 2021 - 6
பாவம், செல்லமுத்து அண்ணன்
#குறுங்கதை 2021 - 5
கதைச்சொல்லும் தாதி
#குறுங்கதை 2021 - 4
ஆளுக்கொரு தீனி
#குறுங்கதை 2021 - 3
'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - நிறைவாக
நிறைவாக,